Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91

பொதுவாக காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

அந்தவகையில் தொண்டைப்புண் ஏன் ஏற்படுகின்றது? அதனை போக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
....

தொண்டை புண் ஏன் ஏற்படுகின்றது?

பெரும்பாலும் தொண்டைப் புண் வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. இது சளிக் காய்ச்சல் ஏற்படும்போது காணப்படும். ஆனால் சில வேளைகளில் அது பேக்டீரியா கிருமிகளாலும் உண்டாகும். அவை ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பேக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது.
....

அறிகுறிகள் என்ன ?

வலி அல்லது அரிப்பு போன்ற உணர்வு, உணவு விழுங்கும்போதும் பேசும்போதும் வலி, உலர்ந்த தொண்டை, கழுத்துப் பகுதியில் கரலை உருண்டைகள், தொண்டைச் சதை வீக்கம், தொண்டைச் சதையில் சீழ் அல்லது வெள்ளைப் புள்ளிகள்.. குரல் கம்மிப்போதல்...
...

#தீர்வு:

தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும். பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும். தொண்டை வலி ஏற்படும்போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
வேப்பம் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்து வந்தால் தொண்டையில் ஏற்படும் புண் குறையும்.

4 பூண்டு பல் இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
92

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவற மாட்டீர்கள்.

1. புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.

2. அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

3. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

4. புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

5. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

6. புதினா கீரையை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு நல்ல மருந்தாக இருந்து வருகிறது.

7. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

8. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.
93

அளவிட முடியாத மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் தாவரங்களை இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. மருத்துவ குணமிக்க தாவரத்தை உணவாக உட்கொள்ளும் முன்னோர்களின் உணவுபழக்கத்தை நாமும் கடைப்பிடித்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.

தாவரம் முழுவதும் மருத்துவ குணமே என்று சொல்லக்கூடிய வகையான தாவரங்களை விரல்விட்டு எண்ணி விட லாம். அவற்றிலும் முக்கியமானது என்றால் முருங்கை. இவற்றில் 90 க்கும் அதிகமான சத்துகளும், அதிக மருத்துவ குணங்களும் இருப்பதாக ஆய்வுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. முருங்கை மரத்தில் வேர், இலை, முருங்கை காய், முருங்கை காம்புகள், பூ, பட்டை அனைத்துமே அதீத மருத்துவ குணங்களைக் கொண்டது.

ஆயுர்வேத மருத்துவம் முருங்கையைப் பற்றி குறிப்பிடும் போது இது 300 விதமான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுவதாக கூறுகிறது.

கீரைகளில் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டியது என்று அறிவுறுத்துபவர்கள் முருங்கைக்கீரையைத் தவறாமல் சொல்வார்கள். மற்ற கீரைகளை விட இதில் அதிக அளவு புரதமும் சத்துகளும் அடங்கியிருக்கின்றன.
^
முருங்கையில் இருக்கும் சத்துகள்:

உடலுக்கு தேவையான முக்கிய் அமினோ அமிலங்கள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. மற்ற உணவுகளைவிட இதில்
25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. மேலும் வைட்டமின் பி, பி2, சி, புரதம், நார்ச்சத்து, கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதிகம் விலை கொடுத்து வாங்காமல் இயற்கையிலேயே இந்த சத்துகள் முருங்கைக்கீரையில் நிறைந்திருக்கின்றன.

இரத்தம் சீராக இல்லாமல் இருப்பதால் தான் அதிக குறைபாட்டை சந்தித்துவருகிறோம். இதைச் சரிசெய்ய மாத்திரைகளை விட அருமருந்தாக இருக்கிறது முருங்கை.

முருங்கை என்னென்ன நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா?

#ஹீமோகுளோபின்:

இரத்த சோகை இன்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் போதுமான அளவு இரத் தம் இருப்பதில்லை. இது அளவில் அதிகம் குறையும் போது மட்டுமே பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக் கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.

குறிப்பாக பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இந்தப் பாதிப்பு உண்டு. இரத்த விருத்தி குறைந்திருப்பவர்கள் மட்டுமல்ல அனைவரும் பொதுவாக வாரத்தில் இரண்டு நாள்கள் இந்தக் கீரையை சாப்பிட்டால் இரத்தசோகை வராமல் தடுக்கலாம். அதிக அளவு இரும்புச்சத்து கொண்ட இந்த முருங்கையால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க தொடங்கும் என்பதை தொடர்ந்து பரிசோதனை செய்வதின் மூலம் நீங்கள் உணரலாம்.

^
#கருப்பை, ஆண்மையைப் பலப்படுத்தும் முருங்கை:

இன்று குழந்தைப் பேறு இயற்கையாக கிடைப்பதில் சிக்கல் என்னும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது. கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தவும் கருப்பையின் வளர்ச்சியைச் சீராக்க செய்வதிலும் முக் கிய பங்கு வகிக்கிறது முருங்கை.

விந்து எண்ணிக்கையில் குறைபாடு இருக்கும் ஆண்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது முருங்கை. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கசெய்கிறது. ஆண்களுக்கும் பெண்க ளுக்கும் குழந்தைப்பேறில் இருக்கும் சிக்கலைத் தீர்த்துவைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது முருங்கை இலை, முருங்கைப்பூ, முருங்கைக்காய்.
^
#தாய்ப்பால் சுரக்க முருங்கை:

பிரசவித்த தாய்மார்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் இல்லாமல் இருந்தால் முருங்கைக்கீரையை அடிக் கடி உணவில் சேர்த்துவரலாம். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. மேலும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்க்கும், குழந்தைக்குமான நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துகிறது.
^
#மலச்சிக்கல் சிறுநீரகப் பிரச்னை குணமாக:

முருங்கைக் காய் வயிற்றுப்புண், கண் சம்பந்தமான நோய், சிறுநீரகப் பிரச்னை போன்றவற்றைக் குணப் படுத்துகிறது. ம்ேலும் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிப்பதிலும் தொண்டை புண், வயிற்றுப்புண் போன் றவை தீவிரமாகமலும் இருக்க முருங்கைக்காய் உதவுகிறது.

இந்தக்கீரையில் நார்ச்சத்து மிகுந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். மலச்சிக்கல் பிரச்னைகளால் பாதிப்படைந்தவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
^
#கால்சியம் குறைபாட்டை போக்கும்:

எலும்பு வலுவாகவும் பற்கள் உறுதியாகவும் இருக்க கால்சியம் பற்றாக்குறையின்றி இருக்க வேண்டும். முருங்கை இலையில் கால்சியமும் மெக்னீசியம் சத்துகளும் அதிகமாக இருப்பதால் இவை பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவூட்டும். குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே இதைக் கொடுத்துவந்தால் கால்சியம் பற்றாக்குறையின்றி வளர்வார்கள்.
^
#இதய செயல்பாடும், வாயுத்தொல்லையையும் நீக்கும்:

இதயத்துக்கு வலுவூட்டும் என்பதோடு இதயத்தைச் சீராக செயல்படவும் வைக்கும்.இதய சம்பந்தமான நோய் கள் நெருங்க கூடாது என்று நினைப்பவர்கள் வாரம் இருமுறை முருங்கையை சேர்த்துகொள்வது நல்லது.

வாயுக்கோளாறால் அவதிப்படுபவர்கள் இந்தக்கீரையை சாப்பிடலாம்.

வாயுத்தொல்லையை அண்டவிடாமல் செய்வதோடு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சளித் தொல்லை பிரச்சனைகளுக்கும் முருங்கை நல்ல மருந்தாக இருக்கும். இவையெல்லாம் தவிர உடல் எடையைக் குறைப்பதிலும், முதுமையைத் தடுப்பதிலும், சருமத்துக்கு அழகூட்டு வதிலும், கண்பார்வை பலமடையவும், மூட்டு வலி குறையவும், கூந்தல் வளர்ச்சிக்கும் என்று பல மருத்துவ குணநலன்களைக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

முருங்கைபூ, காய், இலையை எப்படி எடுத்து கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை பார்க்கலாமா?
^
#கண்களுக்கு குளிர்ச்சி தரும்:

கண்களுக்கு வேலை கொடுக்கும் பணி இன்று அதிகரித்துவிட்டது.இதனால் கண்களில் அதிகப்படியான உஷ்ணம் உண்டாகிறது. சுத்தம் செய்த முருங்கைப்பூ.நீரை கொதிக்க வைத்து சுத்தம் செய்த முருங்கைப் பூவை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் கண் குளிர்ச்சி அடையும்.

மாதவிடாய் பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள்முருங்கைப்பூவை துளி பசும்பால் விட்டு அரைத்து, நன் றாக காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து இனிப்புக்கு பனங் கருப்பட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி னால் லேகியப்பதத்துக்கு வரும். இதை ஒரு டப்பாவில் வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்னை நீங்கும். கருப்பையையும் உறுதியாக்கும்.

முருங்கைப்பூவைச் சுத்தம் செய்து கஷாயமாக்கி குடித்து வந்தால் உடலில் வாதம் பித்தம் கபம் மூன்றின் செயல்பாடுகளும் சமமாக இருக்கும். முருங்கைப்பூ பொடி நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் அவற்றை யும் வாங்கி பயன்படுத்தலாம்.
^
#இயற்கை வயாகரா:

இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைந்த இருபாலருக்குமே இயற்கையான மருந்து முருங்கைப்பூ. முருங்கை இலை.

பசும்பாலுடன் முருங்கைப்பூ,பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி ஒரு மண்டலம் தொடர்ந்து அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் மீது நாட்டம் உண்டாகும். ஆண்மை பெருக்கும் வல்லமைக் கொண்டது முருங்கைப்பூ என்பதால் வயாகரா மாத்திரைகளைத் தேடி செல்ல வேண்டியதில்லை.
94

கிடைக்கும் பயன்கள் ஏராளமாம்..

கரிசலாங்கண்ணி மூலிகை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிறந்த மூலிகையாகும். இது ஞான மூலிகை என போற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது.

கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு. அந்த வகையில் இது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. தற்போது கரிசலாங்கண்ணி கீரை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவதற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.
95

* மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் 22.

* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள்தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

* முகத்தில் உள்ள எலும்புகளின்
எண்ணிக்கை 14

* மண்டை ஓட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது , கால்சியம் பாஸ்பேட்.

* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

* எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

* பற்களில் அடங்கியுள்ள வேதிப்பொருள் , கால்சியம் பாஸ்பேட்.

* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

* மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

* மனித உடல்களிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை, 206.

* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 – ஆக மாறும்.

* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு , தொண்டை எலும்பு.

* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ்ஞானிகள் பீமர் என்று அழைக்கின்றனர்.

* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் , ஆஸ்டியாலஜி.

* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

* கால்களில் உள்ள எலும்புகளின்
எண்ணிக்கை 30.

* கால் பாதங்களிலுள்ள எலும்புகளின் பெயர் டிபியா, ஃபிபுலா.

* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

* மூளை மற்றும் மண்டை ஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர் பிரினாலஜி.
96

1. பேரீச்சை பழம் - தினம் நான்கு

2 முருங்கை கீரை - வாரம் 2 முறை

3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml

4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை

5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு வாரம் 4 முறை

6. கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும்

7. மாதுளை, திராட்சை - வாரம் 2 முறை

8. ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4

9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று....
97
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on November 03, 2025, 08:05:32 AM »
98
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on November 03, 2025, 08:00:46 AM »

Imagine a buoy that never runs out of power. Introducing revolutionary marine buoys featuring self-winding spring generators. These innovative devices harness the energy of the waves, ensuring continuous operation without the need for batteries. Dive into the future of marine technology and explore how this could change the way we monitor our oceans.
99
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on November 03, 2025, 07:59:04 AM »

Imagine a breakthrough that transforms magnetic technology. A newly engineered diamond-shaped coil promises to revolutionize the way we achieve magnetic flux uniformity. This innovative design could lead to enhanced performance in various applications, unlocking possibilities we never thought possible.
100
History / Re: Nikola Tesla Legacy
« Last post by MysteRy on November 03, 2025, 07:57:19 AM »

Imagine a surgical instrument holder that revolutionizes sterilization. This patented rotating magnetic clamp not only secures tools but also ensures they are always sterilized and ready for use. Experience a new level of efficiency and safety in the operating room with this cutting-edge technology.
Pages: 1 ... 8 9 [10]