91
பொதுப்பகுதி / Re: என் கதை... என் பயணம்... என் அடையாளம்.
« Last post by JsB on July 03, 2026, 04:35:55 PM »அப்பா இருந்த நாட்கள்... வாழ்வின் பொக்கிஷம்

என் அப்பாவின் கடைசி வியர்வைத்துளி என் கைகளில் பட்ட அந்த நாள்... அந்த நாள் முழுவதும் நான் குளிக்கவே இல்லை. குளித்துவிட்டால் என் கைகளில் இருந்த அந்த வியர்வைத்துளியும் என்னைவிட்டு மறைந்துவிடுமோ என்ற பயம்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று பள்ளிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என் வகுப்பு ஆசிரியர் என்னைத் தனியாக அழைத்து, "உன் அப்பாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று கூறிய அந்த நொடி, என் உலகமே நின்றுபோனது.
கண்ணீரோடு என் குடும்பத்தினருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்கள், "எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டோம். இனி கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று கூறியபோது, என் இதயம் உடைந்தது.
அந்த நொடியில் கண்ணீர் மல்க இறைவனிடம் மன்றாடினேன். என் குடும்பத்தினர் அனைவரும் இடைவிடாமல் ஜெபித்தனர். என் அம்மாவின் வேதனையைப் பார்த்து அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நானும் மனம் உடைந்து நின்றேன்.
மருத்துவமனை தரையில் படுத்து, புரண்டு கதறி அழுத என் அம்மாவின் அழுகைச் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த காட்சி என் மனதில் என்றும் அழியாத நினைவாக பதிந்துவிட்டது.
ஆனால்... God is so good. இறைவன் எங்கள் ஜெபத்தைக் கேட்டார். என் அப்பாவுக்கு இன்னும் சில நாட்களை எங்களோடு வாழும் அருளைத் தந்தார். அந்த நாட்கள் எங்களுக்கு அளவிட முடியாத ஒரு வரமாக இருந்தது.
இன்றும் அந்த நாளை நினைக்கும் ஒவ்வொரு முறையும், வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதையும், நம்முடன் இருக்கும் அன்பானவர்களை ஒவ்வொரு நொடியும் மதித்து நேசிக்க வேண்டும் என்பதையும் என் மனம் நினைவூட்டுகிறது.
அப்பா நம்முடன் இருக்கும்போது, அவரின் அருமை பல நேரங்களில் நமக்குப் புரிவதில்லை. ஆனால், அப்பாவை இழந்தவர்களிடமோ, அவரின் அன்பும் அரவணைப்பும், தியாகமும், பாதுகாப்பும் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பதை கேட்டுப் பாருங்கள்.
அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு தொடுதல் கூட வாழ்க்கை முழுவதும் நினைவாகவே இருக்கும்.
அப்பா இருக்கும் வரை அவரை நேசியுங்கள்... அவருடன் நேரம் செலவிடுங்கள்... அவர் இல்லாத பிறகு, அவரின் நினைவுகளை மட்டுமே கட்டிப்பிடித்து வாழ வேண்டிய நிலை வராமல் இருக்கட்டும்.

Recent Posts




