Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on July 05, 2026, 10:38:42 AM »
92

இதைப் பார்த்தாலே...இதைப் பார்த்த நொடி...

இதயம் ஒரு நொடி நின்றுவிட்டதோ என்று தோன்றும்...
உடலெங்கும் மின்னல் ஓடியதுபோல் சிலிர்ப்பு பரவும்...
கண்கள் வேறு பக்கம் திரும்பினாலும்,
மனம் மட்டும் அதிலேயே சிக்கிக் கொள்ளும்.
பலருக்கு அது ஒரு சாதாரண உயிர்...
எனக்கோ அது சொல்ல முடியாத பயத்தின் உருவம்.
அது என்னைத் தீண்டவில்லை...
எனக்குத் தீங்கும் செய்யவில்லை...
ஆனால் அதை ஒரு நொடி பார்த்தாலே,
அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்பதே
என் முதல் எண்ணம்
சில பயங்களுக்கு காரணம் இருக்காது...
அதை வெல்ல முயன்றாலும்,
அந்த ஒரு கணத்தில் உடம்பெல்லாம் நடுங்கி,
மனமெல்லாம் பதறிவிடும்
பயம் என்பது பலவீனம் அல்ல...
ஒவ்வொருவருக்கும் இயற்கை கொடுத்திருக்கும்
ஒரு உணர்வு
இதைப் பார்த்ததும் இரண்டு பேரில்
ஒருவர் தான் உயிர் பிழைப்பார்...
ஒன்று அது...
இல்லையென்றால் நான்! 😅







தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்:

Laevicaulis alte போன்ற ஒரு நில நத்தை (slug) என்று தோன்றுகிறது.
இது வெளிப்புற ஓடு இல்லாத நில நத்தை (Slug) வகையைச் சேர்ந்தது.
இதற்கு வெளிப்புற ஓடு (Shell) கிடையாது.
மழைக்காலம் மற்றும் ஈரமான இடங்களில் அதிகமாகக் காணப்படும்.
இரவு நேரங்களில் அதிகம் சுறுசுறுப்பாக இயங்கும்.
இலைகள், காய்கறிகள் மற்றும் அழுகிய தாவரங்களை உணவாக உண்ணும்.
மனிதர்களைக் கடிக்காது; பொதுவாக விஷத்தன்மையும் இல்லை.
93
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on July 05, 2026, 06:52:19 AM »
94
SMS & QUOTES / Re: 𝖇𝖚𝖙 𝕷𝖎𝖋𝖊 𝖌𝖔𝖊𝖘 𝖔𝖓✍
« Last post by MysteRy on July 05, 2026, 06:51:31 AM »
95
கவிதைகள் / Re: மழையின் மடியில்!!
« Last post by Shreya on July 05, 2026, 05:08:01 AM »
Thank you so much😊
96

பேசாமல் பேசும் மொழி  !
புரியாமல் புரிய வைக்கும் மந்திரம் !
ஒரு பார்வையில் பாசம் விதைத்து,
மறு பார்வையில் காதல் மலரச் செய்யும்!

இதயம் மறைக்கும் ஆயிரம் உணர்வுகளை,
இமை அசைவில் சொல்லிவிடும் அதிசயம் !
உலகம் முழுதும் அழகைத் தேடினாலும்,
உண்மையான அழகு தங்குவது
அன்பு நிறைந்த கண்களில்தான் !

அடுத்து ....அழகு


97
வெயிலின் வெப்பத்தில்...
Matchaவின் குளிர்!


அனல் வீசி கொளுத்தும் வெயிலில்,
உடல் முழுவதும் வெப்பம் குடியிருந்த நேரம்...
கையில் இருந்தது ஒரு Magnum Matcha Crumble...
முதல் கடியில் உடைந்த பெல்ஜியன் சாக்லேட்டின்
கிராக் சத்தம், அடுத்த நொடியில்
நாவை வருடிய Matchaசாவின் மென்மை...
வெயிலின் கோபத்தை ஒரு கணத்தில்
மறக்க வைத்தது...
ஒவ்வொரு கடியும் ஒரு சின்ன மகிழ்ச்சி...
ஒவ்வொரு சுவையும் ஒரு இனிய நினைவு...
அவசரமாக அல்ல...அமைதியாக...
ரசித்து...ருசித்து...
வெயிலை வெல்ல குளிர் மட்டும் போதாது,
அந்த குளிரை மனதார ரசிக்கும்
மனசும் வேண்டும்...
இன்று அந்த மனசுக்கு...கிடைத்த இனிய பரிசு...
ஒரு Magnum Matcha Crumble







நீங்கள் Ice cream பிரியர்களா, Friends?
Ice cream மட்டும் இல்லை...
இனிப்பு அல்லது சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்ட பிறகு,
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும். சிறுநீர் வழியாக உடலின் கழிவுப் பொருட்கள் வெளியேறவும் உதவுகிறது.
சிறிய நல்ல பழக்கங்கள்... பெரிய ஆரோக்கியத்தை தரும்! ❤️

அன்புடன்,
🌹 JSB 🌹
98
கவிதைகள் / 📱 கைபேசி
« Last post by Thenmozhi on July 04, 2026, 03:16:43 PM »
         📱கைபேசி

கைபேசி வந்த நாள்முதல்
கதை எல்லாம் தலைகீழ் ஆனதே !
காலை எழுந்தவுடன்
அம்மாவை பார்க்காமல்,
முதலில்  பார்ப்பது
கைபேசி தான் !

அலாரம் அடித்தால் கோபம் !
ஆனால் அழைப்பு வந்தால் ஆனந்தம் !
சாப்பிடும் நேரத்தில் செல்பி
நடக்கும் நேரத்தில் ரீல்ஸ்
படிக்கும் நேரத்திலும்
"இன்னும் ஐந்து நிமிடம்"
என்பதே வழக்கம் !

சார்ஜ் குறைந்துவிட்டால்
முகமும் வாடிவிடும் !
wifi இல்லையென்றால் உலகமே
நின்றுபோனது போல தோன்றும் !
உரையாடல் எல்லாம்
திரையில்தான் நடக்கிறது
நண்பர்கள் அருகில் இருந்தாலும் !

பாட்டி கதை சொல்ல வந்தால்
"ஒரு நிமிடம்" என்று சொல்லி
வீடியோ பார்க்கிறோம் !
ஆனால் கைபேசியும்
ஒரு நல்ல நண்பன்தான் !

பாடம் படிக்க , புதிய விஷயங்களை கற்க,
தூரத்தில் உள்ள உறவினர்களை
அருகில் இருப்பது போல
பேச வைக்கிறது கைபேசி !
கைப்பேசியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் அது நம் நண்பன் ! அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால்
அது நேரத்தைத் திருடும் குறும்புக்காரன் !

சிரிப்பும், சிந்தனையும் தரும்
இந்தச் சிறிய கைபேசி !
நம் வாழ்க்கையை எளிதாக்கட்டும் !
ஆனால் நம் நேரத்தையும் ,
நம் உறவுகளையும் திருடாமல் இருக்க,
அதை அளவோடு பயன்படுத்துவோம்!
99

வெயிலும்... சொல்ல முடியாத மன அழுத்தமும்...

வெயில் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கும் நேரம்... ஏனோ மனதில் ஒரு விதமான பதற்றத்தை உண்டாக்குகிறது. சுற்றிலும் மக்கள் நடமாடிக் கொண்டிருந்தாலும், உலகமே வெறிச்சோடி இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.

சூரியன் உச்சியில் நிற்கும் அந்த நண்பகல் நேரத்தில், சாலைகளில் இருந்து எழும் அனல், காற்றில் கலக்கும் வெப்பம், நிழல் கூட ஆறுதல் தராத சூழல்... இவை அனைத்தும் சேர்ந்து மனதை ஏதோ ஒரு பாரத்துடன் அழுத்துகின்றன.
அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருந்த மனமும் அமைதியாகி விடுகிறது. காரணமே இல்லாமல் சிந்தனைகள் அதிகரிக்கின்றன.

சிறிய விஷயங்கள்கூட பெரிதாகத் தோன்றுகின்றன. வெயிலின் வெப்பம் உடலை மட்டும் அல்ல, மனதையும் சோர்வடையச் செய்கிறது.

ஒருவேளை அதனால்தான் பலருக்கு நண்பகல் நேரம் மிகவும் நீளமாகக் கடப்பது போலத் தோன்றுகிறது. கடிகாரத்தின் முட்கள்கூட மெதுவாக நகர்வது போல இருக்கும். மாலை எப்போது வரும் என்று மனம் காத்திருக்கிறது.

ஆனால் மாலை காற்று வீசத் தொடங்கியதும், இயற்கை மீண்டும் உயிர் பெறுகிறது. அதேபோல் மனமும் மெதுவாக இலேசாகிறது. அதனால் வாழ்க்கை நமக்குச் சொல்லும் ஒரு உண்மை...

"எந்த வெப்பமும் நிரந்தரமில்லை... எந்த மன அழுத்தமும் முடிவில்லாததல்ல. கொஞ்சம் பொறுத்திருந்தால், ஒவ்வொரு கொளுத்தும் நண்பகலுக்கும் ஒரு குளிர்ந்த மாலை நிச்சயம் உண்டு."



100
உணவோட கலந்த நினைவு நம்ம எல்லாருக்குமே இருக்கும். உணவு சிலருக்கு ருசிங்கிற உணர்வு, ஆனா சின்ன வயசுல எங்களுக்கு உணவுங்கிறது பசியோட உணர்வு. உணவுன்னு சொன்னாலே அம்மா ஞாபகம் தான் நம்ம எல்லாருக்கும் வரும். ஆனா நாங்க சின்ன வயசா இருந்தப்போ அம்மா வேலைக்கு போயிட்டு இருந்ததால தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி தோசை தவிர எதுவும் எங்க வீட்டுல கண்ணால கண்டது இல்ல. அதுவும் ஸ்கூலுக்கு பெரும்பாலும் தயிர் சாதம் தான். அந்த தயிர் சாதமும் கெட்டி அடிச்சி போயிருக்கும். ஸ்கூல் முடிஞ்சு வரும்போது, வீடு இருக்கிற தெருவுல நுழையறத்துக்கு முன்னாடி தெருமுனையில இருந்த சாக்கடை பக்கத்துல நின்னு நானும் என் தங்கச்சியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு, ‘நீ சாப்டியா', ‘சாப்பிடலையா’ன்னு கேட்டுட்டு சாப்பாட கொட்டிட்டு வீட்டுக்கு வருவோம்.

எங்க அம்மாவுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி எங்க அஜ்ஜி இருந்த ஊருக்கே போனோம். எங்களோட பசிய ருசியோட போக்கினது எங்க அஜ்ஜி தான். பெருசா ஒன்னும் இல்ல மாங்கா முருங்காய் போட்டு சாம்பார் வச்சிருப்பாங்க. வாசல்ல போகும் போதே அவ்வளவு மணமா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சு நேரா அஜ்ஜி வீட்டுக்கு ஓடிருவோம். தட்டு நிறைய சோற போட்டு சாம்பார ஊத்தி, கவளம் கவளமா உருட்டி ஊட்டி விடுவாங்க. அந்த குட்டி வயித்துக்குள்ள அவ்வளவு சாப்பாடு உள்ள போகுதுன்னா அது அஜ்ஜி கையால மட்டும் தான். சாப்பிட்டுட்டு மலைப்பாம்பு மாதிரி உருண்டுட்டு இருப்போம் நான், எங்க அண்ணா, என் தங்கச்சி மூணு பேரும். லீவு நாளுல போனா போதும், Fancy foodலாம் இல்ல பழைய சோற புழிஞ்சு அதுல பழைய குழம்பை ஊத்தி உருட்டி உருட்டி ஊட்டி விடுவாங்க. சொர்க்கமா இருக்கும்.
அஜ்ஜி மேல மணக்குற அந்த  cinthol வாசனையும், அஜ்ஜியோட சாப்பாட்டு மணமும் இன்னமும் நான் தேடி கிடைக்காத வாசனைகள்.

அடுத்து, சம்மர் லீவ் விட்டா எங்க அப்பாயி ஊருக்கு போவோம். ரொம்ப சாதாரண குடும்பம் தான். அங்கேயும் Grand feast, fancy foodலாம் எதுவும் இல்ல, ஆனா எங்க அப்பாயி செய்யிற ‘வெந்தய களி'க்கு முன்னாடி இப்போ crave பண்ற பிட்சா, பாஸ்தாலாம் ஒன்னுமே இல்ல. சுட சுட வெந்தய களி கிண்டி அது நடுல வெல்லமும் நல்லெண்ணையும் ஊத்தி கொடுப்பாங்க. அந்த சுவைல இன்னைக்கு வரைக்கும் வெந்தய களி சாப்பிட்டதே இல்ல. சில சமயம் நல்ல தண்ணியா அரைச்ச தேங்காய் சட்னி செஞ்சு தருவாங்க இந்த வெந்தய களிக்கு, தட்டை வழிச்சு நக்காத குறையா எல்லாரும் சாப்பிடுவோம்.

எந்த ஊருக்கும், வெளிநாட்டு பயணம் போனாலும் சரி அந்த ஊரோட native food சாப்பிட்டு பார்க்கனும் அப்படிங்கிற ஆசை எனக்கு எப்பவும் உண்டு. அப்படி நான் சாப்பிட்ட வேற ஊர் சாப்பாடுல எனக்கு ரொம்ப பிடிச்சது இலங்கைல சாப்பிட்ட பல சாப்பாடு இன்னமும் எப்போட திரும்ப சுவைப்போம்ன்னு இருக்கு. இத்தனைக்கும் இலங்கைக்கு போயிருந்தப்போ எல்லாமே நண்பர்களுடைய வீடுகள்ல சாப்பிட்ட சாப்பாடு தான். கண்டி, எல்லா, மட்டகளப்பு, யாழ்ப்பாணம், வவுனியான்னு ஒவ்வொரு ஊர்ல சாப்பிட்ட ஒவ்வொரு உணவும் தனி ருசி.

நண்பர்கிட்ட அவங்க வீட்டுல இருந்து pack பண்ணி சம்பல் அனுப்ப சொல்ற அன்பு இன்னமும் இருக்கு. அங்க சாப்பிட்ட வண்டப்பம், வட்டிலப்பம், மரக்கறி கூட்டு, மிளா கறி, கொத்து இடியப்பம், ஒடியல் கூழ், தம்பிளின்னு எதோட சுவையும் இன்னும் மறக்கல. அது வெறும் உணவோட சுவை மட்டுமில்ல, அந்த எளிய மனிதர்களோட அன்பும் தான். உணவும் ஒரு நினைவு தான்னு உணர வைத்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சிக்கு நன்றி.


Pages: 1 ... 8 9 [10]