41
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 339
« Last post by KS Saravanan on March 23, 2024, 03:17:46 PM »எங்கும் யுத்தம் எதிலும் யுத்தம்
கருவரைக்கும் யுத்தம் கல்லறைக்கும் யுத்தம்
கண்காணா தேசம் தேடி கடல் வழியே போனாலும்
கண்டவுடன் சுட வேண்டி கண்டவர்கள் யுத்தம்..!
தோழனிடம் தோன்றிய தீண்டாமை யுத்தம்
வார்த்தைகளால் மாறிய மொழிபேத யுத்தம்
மண்ணால் தோன்றின மண்ணாசை யுத்தம்
அரசுகளிடம் தோன்றிய வல்லமை யுத்தம்..!
இயற்கையை ரசித்திடும் மனிதம் எங்கே..
இயற்பியலை கண்டறிந்த மானிடன் எங்கே..!
யுத்தம் எனும் சொல் உருவாகும்
என்று கணக்கிடாத கணிதன் எங்கே...!
நிலை தடுமாறும் அழிவுறு ஆயுதங்கள் அழிந்திடுமா..!
நிலை மாறிய மண்ணில் புண்ணிய பூமி பிறந்திடுமா..!
குரங்கில் இருந்து வந்த மனிதர்களே
மீண்டும் நாம் குரங்காய் போனால் என்ன..?
நாட்டிலே ஒளிந்து வாழ்வதை விட
காட்டிலே சுதந்திரமாய் இருப்போம்..!
பூமியே தரையாகி வானமே கூரையாக
வாழும் வழியே நாமும் அறிவோம்..!
கருவரைக்கும் யுத்தம் கல்லறைக்கும் யுத்தம்
கண்காணா தேசம் தேடி கடல் வழியே போனாலும்
கண்டவுடன் சுட வேண்டி கண்டவர்கள் யுத்தம்..!
தோழனிடம் தோன்றிய தீண்டாமை யுத்தம்
வார்த்தைகளால் மாறிய மொழிபேத யுத்தம்
மண்ணால் தோன்றின மண்ணாசை யுத்தம்
அரசுகளிடம் தோன்றிய வல்லமை யுத்தம்..!
இயற்கையை ரசித்திடும் மனிதம் எங்கே..
இயற்பியலை கண்டறிந்த மானிடன் எங்கே..!
யுத்தம் எனும் சொல் உருவாகும்
என்று கணக்கிடாத கணிதன் எங்கே...!
நிலை தடுமாறும் அழிவுறு ஆயுதங்கள் அழிந்திடுமா..!
நிலை மாறிய மண்ணில் புண்ணிய பூமி பிறந்திடுமா..!
குரங்கில் இருந்து வந்த மனிதர்களே
மீண்டும் நாம் குரங்காய் போனால் என்ன..?
நாட்டிலே ஒளிந்து வாழ்வதை விட
காட்டிலே சுதந்திரமாய் இருப்போம்..!
பூமியே தரையாகி வானமே கூரையாக
வாழும் வழியே நாமும் அறிவோம்..!