Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
Wish You Many More Happy Returns Of The Day Elon Rusk (Villain Dude) 😍🎂💐


92
Cine News & Movie Reviews / Re: Eleven (2025) Movie Review:
« Last post by Thooriga on July 09, 2025, 01:07:25 PM »
hi sis nanum intha movie parthen last ah benjamin soldra words very true...

enna than crime ku reason ah irunthalum.. oru privoda vethana avarukku mattum than theriyum antha valiya mathavangalukum tharanum nu nenachu patharu ..

I stand with Benjamin.. thanakunnu varumbothu than valiyum vedhanaiyum puriyum ellarukum
93



Happy birthday to u elon .. i wish u all happiness and success forever stay blessed stay happy
94
Whish your happy birthday friend.god bless you.
95
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on July 09, 2025, 11:49:09 AM »
96
Cine News & Movie Reviews / Re: Eleven (2025) Movie Review:
« Last post by MysteRy on July 09, 2025, 11:47:41 AM »
Benjamin words❤️😔






97

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன்.

இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அந்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். "கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா?"

சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். "நீவீர் சொல்வது சரிதான்.. வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால் தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்...

என்றான் கர்ணன்.
99


பெண்களிடம் தன்னைத்தானே வர்ணிக்க சொல்லும்போது, வெறும் 2% பெண்கள்தான் அவர்களை அழகானவர்களாக வர்ணிக்கிறார்கள்

உலகத்திலேயே வெறும் 6% மருத்துவர்கள் மட்டுமே தங்களின் பணியை விரும்புகின்றனர்

கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களை பார்ப்பதற்கு சூதுவாது அறியாதவர் போல அப்பாவியாக தோற்றமளிப்பார்கள், ஆனால்…. உண்மையிலேயே மற்ற பெண்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்களே

நாம் தூங்குவதற்கு முன்பு எவர் நம் நினைவில் இருக்கிறாரோ…. அவர்தான் நம்முடைய மகிழ்ச்சி அல்லது துன்பதுக்கு காரணமானவர்.

நாம் ஓடுவதை போல கனவு கண்டால்… நம்முடைய நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து/கஷ்டத்திலிருந்து ஓடிகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

99% பேர், "நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் " என்று யாராவது சொல்லும்போது பதற்றம் அடைகின்றனர்

12 வயதிலிருந்து 22 வயது வரை நாம் கேட்கும் பாடல்கள், வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாததாக இருக்கும்

நம்முடைய படுக்கையறை எந்த அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கெட்ட கனவுகள் வர வாய்ப்புண்டு

நமக்கு என்றும் முதலில் மற்றும் கடைசியில் இருக்கும் விடயங்கள் மற்ற விடயங்களை விட நன்றாகவே ஞாபகம் இருக்கும். எனவே, நேர்காணல்

போன்றவற்றைக்கு போகும்போது முடிந்தவரை முதலாவது அல்லது கடைசி நபராக போவது நலம்
உளவியலை பொருத்தவரை நாம் நம்மை நேசிப்பவர்களை உதாசினம் படுத்திவிட்டு, நம்மை வெறுப்பவரையே தேடி செல்கிறோம்.

ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபுடிக்க திடீரென உங்கள் கைக்கடிகாரத்தை பாருங்கள். ஒருவேளை அந்நபர் உங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றால் அவரும் தன்னையறியாமல் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார்.

நமக்கு நாம் சமைத்த உணவை விட பிறர் சமைத்த உணவே இன்னும் சுவைமிக்காதாக இருக்கும்
ஒரு விவாதத்தில் வெற்றி பெற அதிகமான கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் எதிரே இருப்பவர் வலுவிழந்து விடுவார்

பரீட்சைகள் நம்முடைய புத்திசாலித்தனத்தை சோதிப்பதில்லை. நம்முடைய நினைவாற்றலையே அளவிடுகிறது.

கோவக்காரர்களால் சாதாரண மனிதர்களை விட இன்னும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் சிந்திக்க இயலும்

ஒருவர் நம்மை முறைத்து பார்ப்பதை, நாம் தூங்கிகொண்டிருக்கும்போது கூட உணர முடியும்
போலியாக சிரிப்பது ஒருக்கட்டத்தில் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைக்கும்
நாம் பொய் பேசும்போது அதிகமாக கண்களை இமைக்கிறோம்

இரவில் தாமதமாக தூங்க செல்பவர்கள் வாழ்க்கையில் அதிகமான சவால்களை எதிர்நோக்க விரும்புவார்கள்
ஒரு நண்பர் வட்டத்தில் மூன்று நான்கு பேரோடு சிரித்து கொண்டிருக்கும்போது, யார் நம்மை முதலில் பார்க்கிறார்களோ அவர்களே நம்முடன் நெருக்கமானவர்கள்

நாம் உண்மையில் இருப்பதை விட, கண்ணாடியில் பார்க்கும்போது 5 மடங்கு அழகாக தெரிகிறோம்
ஒரு ஆண் பெரும் வெற்றியை தழுவும்போது தனக்கு அதிகமான பெண் துணைகள் தேவை என்று எண்ணுகிறார்.

ஒரு பெண் பெரும் வெற்றியை அடையும்போது தனக்கு ஆண் துணையே தேவையில்லை என்று எண்ணுகிறார்
ஒருவர் தொடர்ந்து பேசவேண்டும் என்று நினைத்தால், அவரின் கண்களையே பாருங்கள். அவர் தொடர்ந்து பேசுவார்

28 நாட்களுக்கு நம்மால் ஒரு விடயம் இல்லாமல் வாழமுடியுமென்றால் (உதா. மது, தொலைபேசி ), வாழ்நாள் முழுக்க 100% நம்மால் அது இல்லாமல் வாழமுடியும்.

உளவியல் படி, ஒரு பெண்ணிடம் பொய் பேசுவதை தவிர்க்கவும். பெரும்பாலும், பெண்கள் உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டுதான் உங்களிடம் அதைப்பற்றியே கேட்பார்கள்

அதேநேரம் ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள் பெண்களே, பொய்யை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டதும் பெண்களே
நம்முடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்வதன் மூலம் 70% விவாகரத்துக்கான வாய்ப்பை குறைக்கலாம்
நாம் தட்டச்சு (typing) செய்தவற்றை விட கைப்பட எழுதியவையே நினைவில் இருக்கும்

ஆண்களை விட பெண்களே அதிக நகைச்சுவை மிக்கவர்கள். ஆனால், நெருக்கமானவரை தவிர வேறு யாரிடமும் அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை
நம் கனவில் காணும் ஒவ்வொரு முகமும் நாம் இதற்கு முன்பு பார்த்த முகங்கள் தான்.

நம் மூளைக்கு புதிய முகங்களை உருவாக்க தெரியாது
ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது

சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டவர்கள் நிஜத்தில் பார்த்துக்கொண்டவர்களை விட சீக்கிரமாக இணைந்துவிடுவார்கள்

நாம் ஒரு பிரச்சனை பற்றி ஆழமாக சிந்தித்து கொண்டே தூங்கிவிட்டால், நம் மூளை அன்றிரவு முழுக்க இயங்கிக்கொண்டு தான் இருக்கும். மறுநாள் நாம் சோர்வாக விழிப்போம்

உலகத்தில் உள்ள கோடிஸ்வரர்களில் பெரும்பான்மையினர் அகநோக்குனர் (introvert) ஆவர்
மன அழுத்தத்திலிருந்து விடுபட 80 விழுக்காட்டினர் பாடல்களை கேட்கிறார்கள்

ஒரு வருடத்தின் அதிகமான தொலைபேசி அழைப்புகள், அன்னையர் தினத்தன்று நிகழ்கிறது

மனிதரை விட மிருகங்களால் ஒருவரின் மனநிலையை எளிதாக புரிந்துகொள்ள முடியும்

ஒரு சுற்றுலாவிற்கு செல்வதற்குமுன் ஒரு நல்ல வாசனை திராவியத்தை வாங்கி அந்த சுற்றுலாவின்போது அதை பயன்படுத்துங்கள்.

அடுத்தமுறை அந்த வாசனையை நுகரும்போது அந்த சுற்றுலாவின் ஞாபகம் வரும்

ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள கருப்பு நிற ஆடையை அணியலாம்
40% பெண்கள் தங்கள் தோழர்களுக்காக சர்வ சாதாரணமாக தன் காதலை விட்டு கொடுக்கிறார்கள்

நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டால், எவ்வளவு முயற்சித்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை மீண்டும் அவர்மேல் வைக்க இயலாது
"நீங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் " என்று சொல்லும்போது நாம் ஒன்றும் செய்வதறியாது

விழிப்போம் . "நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது " என்று சொல்லும்போது நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்போம்
புதிதாக ஒருவரை சந்திக்கும்போது முடிந்தவரை அவருடைய பெயரை சொல்லி அழையுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பெயரை பிறர் சொல்வது பிடிக்கும். Q நாம் அவர்களுடன் சுலபமாக நெருக்கமாகலாம்

நாம் 15 நிமிடங்கள் அசையாமல் இருந்தால், தூங்கிவிடுவோம்

6 வினாடிகளுக்கு மேல் ஒருவர் நம் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நம்முடன் நெருங்குவதற்கு அல்லது நம்மை கொலைசெய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று அர்த்தம்

ஆண்களுக்கு அதிகம் சிரிக்கும் பெண்களை பிடிக்கும் ஆனால் பெண்களுக்கு அதிகம் சிரிக்காத ஆண்களை பிடிக்கும்

ஒரு சராசரி மனிதர் ஏறக்குறைய 70000 விடயங்களை ஒரு நாளில் சிந்திக்கிறார்

அறிவாளிகள் என்றும் அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்

நகைச்சுவையை எளிதாக புரிந்துக்கொள்ளுபவரால், பிறருடைய சிந்தனையை அறிந்துகொள்ள முடியும்
10 லிருந்து 29 வயது வரை உள்ளவர்களில், 90 விழுக்காட்டினர் தங்கள் தொலைபேசியுடன் உறங்குகிறார்களாம்

ஒருவரை நமது சிந்தனையிலிருந்து அகற்ற முடியவில்லையென்றால், நாமும் அந்த நபரின் சிந்தனையில் இருக்கிறோம் என்று அர்த்தம்

நன்றி ❤
100

அருமையான செய்தி

டாட்டாவிற்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.
பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.

பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்

1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.
Pages: 1 ... 8 9 [10]