அழுது புரண்டு ஐந்தாம் வயதில் வாங்கிய கலர்கண்ணாடி
உன் ஐந்து நிமிட ஏக்க பார்வையால் பறித்துச் சென்றாயடி..
பத்தாம் வகுப்பில் பரிசாய் பெற்ற பவள பேனா
பக்கம் அமர்ந்து பச் என இச் இட்டு பறித்துச் சென்றாயடி...
நம் திருமண பரிசாய் என்னுயிர் தோழியிட்ட வைர மோதிரம்
உன் சந்தேக பார்வையில் சட்டென பறித்துச் சென்றாயடி...
அன்றோ உயிரில்லா கண்ணாடி,பேனா,மோதிரம்
இன்றோ உயிருள்ள பச்சிளம் குழந்தை....
என்னிடம் பறித்துச் செல்வது உன் வழக்கமடி...
உன்னிடம் விட்டுச் செல்வது என் பழக்கமடி...
note : ennaiyum nampi kavithai eludha sonna kanmani ku dedicate pannidunga