முந்நூறு நாள் பத்து மாதம்
எனை ஆண்டு, நீ மாண்டு மறு
பிறப்பெடுத்தாய் என் உரு காண,
பாலூட்டி சீருட்டி வளர்த்தாய் உன்
ரத்தம் முறித்து, இதைவிடவா சுவையாய்
இருந்துவிடப்போகிறது தேவர்கள் கடைந்த அமிர்தம்,
சுயநலவாதியாய் இருந்தாயே என்
தாயே அன்பு எனும் ஊற்றை ஊற்றிக்
கொடுப்பதில், எனக்கு,
என் தலையில் நீ போடும் ரெட்டைஜடை
சுங்கில் அறிவேனம்மா அவிழ்க்க முடியா
உன் அன்பின் உன்னதத்தை,
உடல் காய்ந்து உன் அணைப்பில்
அறியும் சுகத்தை நான் அறியேன்
அம்மா யாரிடமும்,
தலையணை சுகத்தை அறிந்ததே
இல்லையம்மா உன் மடியிருக்க
என் தலை உன் மடியிறங்க,
கால் நடக்க வந்தால் உன் மனம் நோகுமோ,
சொல்லாமலே புரிந்து காலனி அவிழ்த்து என்
கால்வலி போக்குகிறாய் உன் கை ஒத்தடத்தில்,
தாயே நான் கண்ட பெண்களில்
தன்னிகரற்ற பெண் நீ, தன்னம்பிக்கையுள்ள
பெண்ணும் நீதானம்மா,
ஒருதாயின் கடமையை உன்னில் கண்டு
என்னிலாய் கொண்டேன், என் வாழ்வின்
முதல் குருவும், முதற் புள்ளியும் நீதானம்மா,
உன் வழி நடப்பேன், உன் பேர் சொல்லும்
பிள்ளையை நடப்பேன் அம்மா, என் பிள்ளை
என் பேர் சொல்ல....இது சத்தியம் என் தாயே!!!