கூட்டுக் குடும்பம் அழகான பலாப் பழம்
இனிப்பான உறவுகளின் இருப்பிடம்
பெரியவர்கள் அர்ச்சகர்
தாய் தந்தை கோவில் கருவறை
அதில் சிறு குழந்தைகள் தெய்வம்
கோவிலுக்கு எடுத்துக்காட்டாய்!
தெய்வமாக வாழும் குழந்தையின்
கொஞ்சல் சிரிப்பும் ,சின்ன சின்ன குறும்பும்
கிருஷ்ணனை நினைவுக்கு கொண்டு வரும்
அப்படி ஒரு நினைவுகள் உங்களிடம் வைக்கிறேன் !
தேனிகள் கூட்டாக சேர்ந்து மலர்களில் உள்ள
தேனை ஒன்றாய் சேர்த்து வைப்பது போல
கூட்டு குடும்பமாய் என் இல்லம் -அதில்
அப்பா, அம்மா , பெரியப்பா ,சித்தப்பா ,
அக்க ,தங்கை, என்ன பல உறவுகள் ஒன்றாக !
எந்த செய்தியாய் இருந்தாலும் எல்லாம்
ஒன்றுகூடி சரியான முடிவு செய்யவும்
அதை செய்து வெற்றி பெறவைத்து
அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதும்
குடும்பத்தின் சிறப்பு...
இன்றைய நாள் என் அப்பா ராணுவத்தில்
பணிபுரிந்து இல்லம் திரும்புகிறார்
அதற்கான நிகழ்வுகள் இல்லத்தில்
வெகு சிறப்பாக சந்தோசத்துடன்
குடும்பத்துடன் குதுகலத்துடன் தொடர்ந்தது ....
பண்டிகை நாள் போல திருவிழா கோலம்
பூண்டது, தந்தையை வரவேற்க,
வீட்டின் வாசலில் கோலமிட்டு
வண்ணம் தீட்டி, பொறாமை, கோபம்
பொச்சிரிப்பு, இவைகள் அனைத்தையும்
அறியாமல் கூட்டு குடும்பமாய்,
எண்ணற்ற உறவுகளுடன் உன்னதமாய்
காத்துக்கிடக்கின்றோம்!!!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பெரியவர்கள்
சொன்னது அன்று ஞாபகம் வந்தது ......