சுதந்திரம்
தேடி அலைகின்றேன் 
தொலைந்த என் சுதந்திரத்தை 
கண் இமைக்கும் கண நொடியில் 
பறிபோனது என் சுதந்திரம்.. 
எவ்வித கவலையும் இன்றி 
இறக்கை முளைத்த சிட்டாய்
சுற்றி திரிந்த நான் இன்று 
கூண்டினில் அடைக்கப்பட்டேன்..
ஓய்வில்லா வேலை பளு, 
முடிவில்லா மன அழுத்தம்,  
உயிர் இருந்தும்  ஜடமாய் 
உணர்வில்லாமல் நான் ..
அதோ அந்த மச்சத்தை போல் 
எனக்கும் விடிவு காலம் வரும்.. 
என் சுதந்திரம் வெகு தூரமில்லை 
என காத்திருக்கிறேன் நம்பிக்கையோடு.. 
நம்பி காத்திருந்தே நாட்கள் நகர்கின்றன 
விருப்பமில்லா எத்தொழிலும் 
மன உளைச்சளுக்கே வழி வகுக்கும் 
விரும்பியதை செய் .. மன நிறைவை அடைவாய் ..
எந்திரமாய் ஊன் உறக்கம் இன்றி உழைக்கும்
மானிடர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் !!
மைனா ~ தமிழ் பிரியை ~