பென்சில் பிடிக்க வேண்டிய
பிஞ்சி கரங்கள்
கடப்பாரை பிடித்து கற்கள்
உடைக்கின்றது.......
புத்தகப்பைச் சுமக்க வேண்டிய
தோள்கள் மணல்
மூட்டைகள் சுமக்கின்றது ....
பாடச்சாலை ,
மழலைகள் கல்வி கற்க
செல்ல மறந்து அவ்விடம்
கட்டுமானப்பணிக்குக் கல்தூக்கச்
செல்கின்றனர் .....
கலியுகம் என்று இதைத்தான்
சொல்கிறார்களோ
மணல் வீடு கட்டி
விளையாட வேண்டிய வயதில்
வீடுகட்ட மணல்களும்
கற்களும் தூக்கியது கொடுமையே .....
ஒரு கைப்பிடிச் சோற்றுக்கு
இந்த பிஞ்சி கைகள்
சேற்றுபுண்களால் அவுதியுறுகின்றது
இது கொடுமையின் உச்சமே ....
பெற்றோர்கள் செய்த தவற ???இல்லை
சமுதாயத்தின் அலட்சிய செய்யல
மழலை முத்துக்கள்
நம் நாட்டின்
வருங்கால சொத்துக்கள் ....
வசதியான வாழ்க்கை கேட்கவில்லை
வாழ்வதற்கு வசதி கேட்கின்றனர் ....
தனியார் பள்ளியில் படிக்க வேண்டும்
என்று கேட்க வில்லை ...
படிப்பதற்கு இடம் கிடைத்தால்
போதும் என்கின்றனர் ....
உதவி கரம் நீட்டுவோம் ...
இன்றைய சிறார்கள்
நாளையே உலக
சாதனையாளர்கள் என
திகழ வழிவகுப்போம் ....
நன்றி ....
~ !! ரித்திகா !! ~