முதற்காதல்
உன்னை இனி அழவிடமாட்டேன்
என்றபோதில் உணர்ந்தேன்
உனதன்பு
நீ என்னென்றும் இன்புற வாழவேண்டும்
நீ வேதனையுறுவதை காண சகியேன்
என்கையில் தெரிந்தது உன் நேசம்
உனதன்பில் வீழ்ந்த என் மனம்
எழ முயலவில்லை
வீழ்ந்த நானும்,எனதன்பால்
உனை வீழ்த்தி
சரணடைகிறேன் நின்னை
மாசறு அன்பைப் பெற
தகுதியுற்றவன் நீயே
வற்றாத ஜீவநதியாய் எனதன்பும்
எனக்கு
என்றுமே பற்றாத உனதன்பும்
நம்மை பற்றிக்கொள்ள
என் கைத்தலம்தான் பற்றினால் என்ன
நீயும் <3 <3 <3
தடுப்பணை இல்லா காட்டாறாய்
பொங்கிடும் புதுவெள்ளமாய்
என் மனமும் உனைத்தேடி ஓடிட
நம்பெற்றோரும்,உற்றோரும்
நம்மை வாழ்த்திட
நாம் <3 <3 <3
வாழ விரும்புகிறேன்
நிழற்படமாய் நாமிருப்போமா
தருணங்கள் வெவ்வேறாயினும்
அனைத்திலும் உன்னுடனே
நினைவில் நீங்காமல்
உறைந்திட ஏங்குதே
என் மனமும் <3 <3 <3
[/size]