தேவைகளை தவிர
எல்லோரும்
உங்களிடம் வருவார்கள்
என்ற மாயையில் இருக்காதீர்கள்
இதயத்தில் ஆழமாக 
அன்பைக் கொடுத்தவர்களைத் தவிர
ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் 
உண்டு மூன்று வாழ்க்கைகள் 
தனிப்பட்ட சொந்த 
வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை..
இந்த ரகசியமான வாழ்க்கையின்
சந்தோஷங்கள், 
துயரங்கள், கொண்டாட்டங்கள், 
சின்னச் சின்ன அச்சங்கள், 
அளவற்ற மகிழ்ச்சி  அனைத்துமே, 
அவரவர் மனங்களுக்கு 
மட்டுமே சொந்தமானது..
ஏதோவொரு உந்துதலில்,
எப்போதாவது மட்டும் 
அதனைப்பற்றி, 
தான் நம்புகின்ற 
ஒரு சிலரிடம் பேசக்கூடும்..
மனதிற்குள் 
தன்னந்தனியே 
நகர்ந்து கொண்டிருக்கும் 
அந்த ரகசியமான வாழ்வு..
அவரவரின் 
மன உலகுக்குள் மட்டுமே 
எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது, 
மீண்டெழுகிறது
உண்மை என்பது
வெறும் வார்த்தையல்ல
வாழ்க்கை முழுமையும் 
வாழ்ந்து தீர்க்கவேண்டும் 
நேர்மையாக 
***jOKER***