யாவும் இசையே ..!!!
யாதும் இசையே ...!!!
கார்மேகங்கள் ஒன்றிணைத்து
சொட்டு சொட்டென
தூறிடும் மழைத்துளியின்
இசையில்
முற்றிலும் நனைகிறேன் ...
சில்லென மேனியைப்
பட்டும் படாமல்
தழுவிச்செல்லும்
தென்றலின் இசையில்
உடல் சிலிர்க்கிறேன் ...
கம்பிரமாக பூமிதனைச்
சுற்றிலும் கவர்ந்துநிற்கும்
கடலலைகளின் இசையில்
எந்தன் மனமதைப்
பறிகொடுக்கிறேன் ...
சுட்டெரிக்கும் அக்னியிலும்
இசையுண்டோ ...
அதனைச் செவிமடுத்து
அனலின் இசையில்
வியர்க்கிறேன் ...
நேற்று மலர்ந்த
பிஞ்சு மழலைகளின்
வாய்மொழி இசையில்
எந்தன் குழந்தைப் பருவமதனை
நினைவுறுகிறேன் ...
உயிருக்குள் ஊடுருவிச்
செல்லும்
கார்குழல் கண்ணனின்
புல்லாங்குழல் இசையில்
மெய்மறக்கிறேன் ...
வியப்பில் விம்மும் ..
நெஞ்சின் ஒலியை
இசையோடு ஒன்று
கலக்கிறேன் ...
இசையால் இதயம்
துடிப்பதனால் நித்தம்
நான்
உயிர் பிழைக்குறேன்..
எங்கும் எதிலும்
இசையில்
சூழ்ந்திருக்கிறேன் ...
அவ்விசையில் கரைந்திடவும்
காத்துநிற்கிறேன் ....
~ !! ரித்திகா !! ~