அன்று கொட்டும் மழைதனிலும்
சுட்டெரிக்கும் வெயில்தனிலும்
உனக்காய் குடை பிடித்து
காதல் கதை பேசிய காலங்கள்
நொடிப் பொழுதில் மறைந்துவிட்டன
நீயும் என்னைவிட்டு வெகு தூரமாய் பரந்துவிட்டா ய்
காணமல் போன இதயமும்
கண்ணீர் தேங்கிய கண்களும்
தலை தூக்கி பார்க்கமுடியாமல்
உடல் முழுவதும் காதல் கரையுடன்
மாற்றார்க்கு முகம் காட்டமுடியாமல்
யாருமே இல்லாத நடு வானில் மேகங்கள் படைசூழ
நீ என நினைத்து உண்மாயைக்கு குடைபிடி த்து
குடையுடன் காதல் கதைய் பேசும்
காதல் பித்துதலைகேறிய காதல்கிறுக்கனாய்
உன் வருகைக்காய் உனக்காய் ஏந்திய கைகளும்
விரித்த குடையுடனும் ஆஹாய முற்றதில்
உன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும்
குடையுடன் ஒரு தேவதாஸாய் உன்னால் நான் இன்று .........