« on: December 26, 2011, 09:30:34 PM »
http://www.youtube.com/v/GRMs-mIsrGQஅனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்
அந் நாளில் இல்லாத
பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு
புண்ணான கன்னங்களே.....
லா லா.....(அனுபவம்)
தள்ளாடி தள்ளாடி
நடம் இட்டு அவள் வந்தாள்
சொல்லாமல் கொள்ளாமல்
அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்
மனம் தாள தென்றாள்
ஒன்று நானே தந்தேன்
அது போதாதென்றாள்
போதாதென்றாள் (அனுபவம்)
கண் என்ன கண் என்று
அருகினில் அவன் வந்தான் ஆஹா
பெண் என்ன பெண் என்று
என்னென்ன கதை சொன்னான்
இது மாறா தென்றான்
இனி நீயே என்றான்
கண்ணில் பார்வை தந்தான்
துணை நானே என்றான்
நாளை என்றான்.....(அனுபவம்)
சிங்கார தேர் போல
குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா
சித்தாடை முந்தானை தழுவிடும்
என் எண்ணம்
அவள் எங்கே என்றாள்
நான் இங்கே என்றேன்
அவள் அங்கே வந்தாள்
நாங்கள் எங்கே சென்றோம்
எங்கே சென்றோம்
பனி போல் குளிர்ந்தது
கனி போல் இனித்ததம்மா
ஆஹா
மழை போல் விழுந்தது
மலராய் மலர்ததம்மா
ஒரு தூக்கம் இல்லை
வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை
எங்கள் பிரிவும் இல்லை
பிரிவும் இல்லை (அனுபவம்)
« Last Edit: December 26, 2011, 10:18:39 PM by ஸ்ருதி »
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்