திண்டுக்கல் ஜிலேபி
தேவையானவை:
* உளுந்து – 200 கிராம்
* பச்சரிசி – 50 கிராம்
* வனஸ்பதி – 250 கிராம்
* ரீபைண்ட் ஆயில் – கால் லிட்டர்
* நெய் – 150 கிராம்
* சர்க்கரை – அரைகிலோ
* தண்ணீர் – ஒரு லிட்டர்
* எலுமிச்சம் பழத்தில் பாதி மட்டும்.
செய்முறை:
* முதலில் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு ஜீராவாக காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்.
* அடுத்து கால் மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் கிரைண்டரில் போட்டு நன்கு நைஸ் பதத்துக்கு மாவை ஆட்டி எடுத்து வைக்க வேண்டும்.
* இப்போ ஜீராவும், ஜிலேபி மாவும் ரெடி.
* சூடான எண்ணெய் சட்டியில் ரீபைண்ட் ஆயிலுடன் நெய்யை சேர்த்துவிட்டு, அதில் பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்துவிட வேண்டும்.
* எண்ணெய் சட்டி நன்கு காய்ந்தவுடன் ரெடியாக இருக்கும் ஜிலேபி மாவை பிழிய வேண்டும்.
* சிறிய ஓட்டையுடன் இருக்கும் துணியில் கையளவு மாவை எடுத்து கொண்டு, கொலுசு மாதிரி சிறிய சிறிய வளையங்களாக ஒரே சீராக பிழிய வேண்டும்.
* சுவையான ஜிலேபி தயார்!