என் காதலே...
காதல் தந்திட்ட பரிசே...
என் வாழ்க்கையின் அழியாக் கோலமும்
அழகான தருணமும் இதுவே...
யாரும் வரையப்படாத ஓவியத்தின்
வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன் நான்...
இன்று உன் அழகிய ஓவியமாக...
என் அன்பு கணவரின் வருகையை...
நான் அமர்ந்திருக்கும் இந்த மனமேடையையே
அலங்கரித்துச் செல்கிறதே...
என்னை மனதார தாங்கியவன்
என் அன்புக் கணவனாக என்னருகில் வரும்போது
வாழ்க்கை இன்ப வரமே...
எனது முதல் குழந்தை நீயடா...
உன்னை என் இறுதி மூச்சி உள்ள வரையிலும் சுமப்பேனடா...
நீயும் நானும் கணவன் மனைவியாக ஆன
இந்த நாளும்...இந்த நேரமும்... இந்த நொடியும்...
நாம் நீண்ட நாள் கொண்ட ஆழமான
நம் காதலும் குடுத்து வைத்ததே...
உன் இதயத்தின் சொந்தக்காரியானவள் நானே...
என் ஆசைக் கனவை நினைவாக்கிய என்னுயிர் கணவருக்கு...
வாழ்க்கை முழுதும் அன்பு செலுத்த மீண்டும்
உனக்கு தாயாய் ஆகிறேனடா...
தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும்
என்னை மடியில் போட்டு தாலாட்டி...
குழந்தையைப் போல பார்த்துக் கொள்ளும் உறவு
நீ மட்டும் தானடா என் ராசா குட்டி...
எனக்கு இவ்வுலகில் எவ்வளவு சந்தோசம் கிடைத்தாலும்
நான் 24 ன்கு மணிநேரமும் வட்டமடித்து
தேடும் ஒரே சந்தோஷம்...
கணவனே...உன் அன்பு மட்டுமே...
அதை இன்று மொத்தமாய்...
எனக்கே கொடுத்து விட்டாய்...
என் ஆயுளுக்கும் பலப்பட வேண்டிய
இனிய உறவிற்கு மேலான உறவு என்னவென்று கேட்டால்
அதுவும் நீதானடா என் செல்லக்குட்டி...
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே கட்டப்பட்ட
நம் அழகிய காதல் பாலம்...
திருமணத்தில் இணைந்து நகரும் போது...
நினைவுகளும் இனித்திட்டதே நம் திருமண விழாவில்...
என் முகத்தில் விண்மீன்கள்
புன்னகையால் புதுக் கவிதைகள் பாடி அரங்கேற்றுதே...
பூங்காற்றும் தென்றலும் சேர்ந்து ஜோடியாய்
இசை சாரல் தூவிடுதே...
மஞ்சள் வேர் தனிலே...
பொன் தாலியும் என் கழுத்தின் முன் ஊஞ்சல்லாடுதே...
உன்னால் குங்குமமும் நெற்றியில் அழகாய் சிவந்திடுதே...
நாதம் இசைத்திட...கெட்டி மேளம் கொட்டிட...
கட்டுடா சீக்கிரம் உன் பாசக் கயிற்றை என் கழுத்தில்
எனதருமை கணவனே ...
ஐ லவ் யூ டா புருஷா...
என்றும் அன்புடன்,
காதலியாய் இருந்தவளே...
மணப்பெண் கோலத்தில்
உன் மனைவியாகிய...
Jerusha JSB