அன்புள்ள தோழி,
கனவு காணத் தெரியாமல்,
காதல் என்றால் என்னவென்று புரியாமல் இருந்த எனக்கு,
காதலின் அர்த்தம் மட்டும் அல்ல,
கிடைக்காவிட்டால் கிடைக்கும்
வலியையும் காட்டினாய்,
என்னை உயிர்த்துவிட்டு நீ உயர உயர பறக்கிறாய்,
கை பிடிக்க நினைத்தால்,
கல்லயறையில் அமர்ந்து சிரிக்கிறாய்,
எழுத்தாளன் பல வாழ்க்கை வாழ்வான் என்பார்கள்,
நான் ஒரு வாழ்க்கையை பல முறை வாழ்கிறேன்,
வாழ முடியாத வாழ்க்கை,
உன்னால், உனக்காக, உன்னுடன்.
ஆனால் நான் முட்டாள் தான்,
உன்னை நேசிக்க முயன்று என்னை
வெறுக்கத் துடங்கினேன்,
உன் சிரிப்பில் என் சிரிப்பைத் தொலைத்தேன்,
மீண்டும் பெறுவதற்குள் மறைத்துவிட்டாய்.
இருப்பினும், கோவம் வரவில்லை,
நீயா என் வாழ்க்கையின் முதல் தோல்வி?
வருத்தம் தான், என் வாழ்வில்
ஒளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்
என்று நினைத்தேன்,
என் வாழ்வே ஒளிந்து நின்று
என் கவலையை வேடிக்கை பார்த்தது.
மீண்டும் முட்டாள் ஆனேன், மறக்க முயன்று,
ஏன் முயன்றேன் என்று புரியவில்லை,
ஆனால் அது முடியாது என்று விரைவே புரிந்தது.
கதறலை கவிதையை எழுதும் கவிஞன் ஆக்கின நீயே,
வார்த்தையால் ஏன் மனதினை நிரப்பிச் சென்றாய்?
இன்று மீண்டும் சிரிக்கிறேன், நீ கொடுத்துச் சென்ற
நொடிகளை வார்த்தையாய் எழுதி.
உனக்காக எழுதத் தொடங்கிய நான்,
இன்று உணர்வுகளுக்காக எழுதுகிறேன்,
இது கடிதமோ கவிதையோ கற்பனையோ,
எழுதுவதில் ஒரு நிம்மதி.
கண்ணீர்த் துளிகளில் துடைங்கிய என் வார்த்தைகள்,
இன்று காதலில் முடிகிறது,
அடடா, காதலில் நான் தோற்றாலும்,
காதல் தோற்கவில்லை பார்த்தாயா?
நீ இறந்தும் வாழ்கிறாய் என் மனதில்,
நான் இருந்தும் இறக்கிறேன் உன் மடியில்.
- Loki❤️