நீல வானும் நிலா வெளிச்சத்தில் இருளென காட்சியளித்திட, நீளும் பாதையில் தொடர் பயணமாய் உன்னோடு பயணித்திட வேண்டுமடா,,
உன் தோல் சாய்ந்து கதைகள் பேசிகளிப்பின் உச்சத்தில் கலைந்தாடிட அகம் தவிக்கும் பொழுதினில்,
கொஞ்சி உரசிட்டு தொடராய் பயணித்திடும் தென்றலில் மிதந்தோடிடும் மலர்களின் வாசத்தில் மணப் பந்தலில் மனையாளியாய் உன்னோடு அமர்ந்திருந்த காட்சிகள் மேனியை சிலிர்க்க வைக்கும் அற்புதம்,,
காரணம் தேடி ஆராயும் பொழுதினில் உன்னை கண்ட காட்சிகளில் மெய் மறந்து இதழோரம் இளைப்பாரின நினைவுகள் யாவும் புன்னகை என்னும் புதிராய்
எண்ணங்கள் யாவும் உன்னைச் சூழ்ந்திட எதையோ பரிகொடுத்திட்ட ஏக்கம், சற்று ஆழ்ந்ததினால்தான் புலப்பட்டது என்னோடு உள்ளத்தை உனக்கென எழுதிக் கொடுத்து விட்டேன் என்பது..
காடருகே காதோரம் தவழ்ந்தாடும் கணீர் பட்ஷிகள் கொஞ்சிடும் கணீர் குரல்கள்
வேண்டுமடா, உன்னருகே உன்னவளென ஓர் நீளாப் பயணம்...
வேண்டுமடா, நீளாப் பயணங்களிலும் தொடர்ந்திடும் நீண்ட உரசல்கள்..
வேண்டுமடா, மேனியைத் தொட்டு உரசிச் செல்லும் தென்றலின் வசியத்தில் உன்னோடு நான் இருந்த பொழுதுகள் யாவும் நினைவலையாக பயணத்தோடு பயணமாய் பயணித்திட..
வேண்டுமடா, தொடரும் நிலா வெளிச்சத்தில் துணையாய் என் அருகில் நீ மிளிர்ந்திடும் பயணமதில் என்னுடைய நினைவுகள் உன்னைச் சூழ்ந்திட..
வேண்டுமடா, காதோரம் தவழ்ந்திடும் பட்ஷிகளின் கொஞ்சல் மொழிகளின் கலைகளை கற்றுக் கொண்டிட,,
வேண்டுமடா, இளைப்பாரும் இடமாய் என்னுடைய இதயமே உனக்கான கோட்டையாய் உருமாரிட..
பல காதல் கனவுகளை நிஜமென நிலையென சுமந்திடும் இப் பயணம் உனக்கு நான் எனக்கு நீ என்ற கோட்பாடு வாழ்விலும் நீளாப் பயணமாய் தொடர்ந்திட வேண்டுமடா...♥️
இப்படிக்கு உன்னவள்.....