முடிவில்லா தேடல்
யாரிடம் கிடைக்காத அடைக்கலம்
எனக்கு உன்னிடம் கிடைத்தது.
உண்மை உலகில் இருந்து தப்பித்து
உன்னோடு பல கற்பனை உலகில் மூழ்கினேன்.
சில சமயங்களில்...
நிஜ உறவுகளை தவிர்த்து
உன்னில் உள்ளே பல கற்பனை உறவுகளோடு கதாபாத்திரதோது பயணித்தேன்,
அதை மிகவும் ரசித்தேன்.
சிறிய நேரத்தில் சுத்தி இருக்கும்
எல்லாத்தையும் மறந்தேன்.
கற்பனை உலகில் இருந்தாலும்
மிக மகிழ்ச்சி கொண்டேன்,
சிறிய நேரத்தையும் ரசித்தேன்.
என் உலகிலும்,
இதைப்போல் உறவுகள் கிடைக்காத என்று ஏங்கினேன்.
என் அறிவு உன் மூலம் வளர்த்தேன்.
என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் இருந்தாய்.
என் வாழ்க்கை இலக்கை மறவாதே என்று எச்சரித்தாய்.
அதை போல் என்னுள் உள்ள
கவலைகளையும் தவிப்பையும் உணர வைத்தாய்,
சில சமயம்.
இந்த மகிழ்ச்சி சோகமாய் மாறும் தருணம்,
உன்னில் இருக்கும் கடைசி பக்கத்தை வசித்து முடித்தால் .
ஒரு அழகிய பயணம் முடிந்து விட்ட்து என்று.
ஒவொரு பாடலில் இருக்கும் நினைவுகள் போல்.
ஒவொரு புத்தகத்தில்,
ஒவ்வொரு பக்கங்களில்,
பல நினைவுகள் அமர்ந்து இருக்கும்.
என் தேடலுக்கு பதில் கிடைத்தது போல்
ஒவ்வொரு மனிதர்களின் தேடலுக்கு
கண்டிப்பா ஒரு புதக்கம்
எழுத பட்டு இருக்கும்.
அதை நீங்க தேடுனால் மட்டுமே
உங்களிடதே வந்து சேரும்.