Author Topic: எய்ட்சு  (Read 6718 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எய்ட்சு
« on: May 04, 2012, 01:46:22 AM »
எய்ட்சு


பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி (எயிட்சு)
 வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்





உலகளவிலான எய்ட்சு நோய் எதிர்ப்பைக் குறிக்கும் சிகப்பு நாடா சின்னம்.
 


ICD-10
 
B24.
 

ICD-9
 
042
 

DiseasesDB
 
5938
 

MedlinePlus
 
000594
 

eMedicine
 
emerg/253
 

பாடத் தலைப்பு
D000163



பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்
 
இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது
 
இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களை சாரும்பொழுதோ ஏற்படக்கூடும்.
 
எயிட்சு தற்பொழுது ஒரு பரவல் தொற்று நோயாகும். 2007-ல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது[7]. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தை சிதைத்திருக்கிறது.
 
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது. எயிட்சு முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 1981-ல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் எச்.ஐ.வி. எனக் கண்டறியப்பட்டது.
 
எச்.ஐ.வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. மீளூட்டுநச்சுயிரி எதிர்மருந்து எச்.ஐ.வி. நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க வல்லதாயிருந்தாலும் இம்மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் வாடிக்கையாக கிடைப்பதில்லை. இந்நோயை குணப்படுத்துவதற்கு உள்ள இத்தகைய இடர்பாடுகளால், நோய் வராமல் தடுத்தலே இப்பரவல் தொற்றுநோயைக் கட்டுபடுத்துவதிலுள்ள முக்கிய குறிக்கோள் எனக்கருதி வைரசின் பரவலைத் தடுக்க சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான உடலுறவையும், புதிய ஊசிகளை பயன்படுத்துதலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #1 on: May 04, 2012, 01:48:28 AM »
அறிகுறிகள்



சிகிச்சைக்குட்படாத எச்.ஐ.வி. நோய்த்தொற்றின் நச்சுயிரி சுமைக்கும், சிடி4+ உதவிச்செல்கள்களின் எண்ணிக்கைக்குமான தொடர்பு மற்றும் சராசரி சிகிச்சைக்குட்படாத காலத்தில் காணப்படும் எச்.ஐ.வி. எண்ணிக்கைக்கான பொது வரைபடம்;ஒவ்வொரு நோயாளியின் நோய்க்காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது.

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலமுடைய மனிதர்களில் உருவாகாத சில நிலைகளின் விளைவே எயிட்சு நோயின் அறிகுறிகள் ஆகும்.பெரும்பாலும் இவ்வசாதாரண நோய் நிலைகள் பாக்டீரியா, வைரசு, காளான் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படுகின்றன. இந்நோய்க் கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் எச்.ஐ.வியால் சீரழிக்கப்படுவதே நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்குக் காரணமாகும்.
 
வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுக்கள் எயிட்சு கண்ட மனிதர்களில் மிகுதியாகக் காணப்படுகிறது[12]. எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது.
 
எயிட்சு நோய் கண்டவர்களுக்கு காபோசி சதைப்புற்று, கருப்பை முகப்பு புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டல புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாக தாக்கும் தன்மை உள்ளது. கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும்[13],[14]. அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்சு நோயாளிகள் பிரத்தியேக நோய்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #2 on: May 04, 2012, 01:51:16 AM »
சுவாச நோய் தாக்கம்



நியுமோசிஸ்டிஸ் நிமோனியாவின் (PCP) எக்ஸ்-ரே. இருபக்க நுரையீரல்களிலும் PCP இன் குணாதிசயமான அதிகரிக்கப்பட்ட வெள்ளை நிற ஒளிபுகா நிலை காணப்படுகிறது.


நியுமோசிஸ்டிஸ் நிமோனியா (PCP) (முன்பு நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியா என அழைக்கப்பட்ட காரணத்தால் PCP எனச் சுருக்கி வழங்கப்பட்டு இப்பொழுதும் அவ்வாறே அழைக்கப்படுகிறது. இதன் தற்போதைய விரிவாக்கம் P neumo c ystis p neumonia என்பதாகும்). இது ஆரோக்கியமான நோயெதிர்ப்புத்திறன் பெற்றவர்களில் மிக அரிதாகவும், எச்.ஐ.வி. நோயாளிகளில் மிக சாதரணமாகவும் காணப்படுகின்றது. இந்நோய் நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியை எனும் கிருமியினால் ஏற்படுகின்றது.
 
மேற்கத்திய நாடுகளில் சரியான நோய்கண்டறிதல், சிகிச்சைமுறை மற்றும் நோய்க்கட்டுப்பாடு கண்டறியப்படும் முன்னர் இந்நோயே உடனடி மரணத்திற்கு காரணமாய் இருந்தது. சி.டி.4 எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டர் ரத்ததில் 200 செல்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதிலும், வளர்ந்து வரும் நாடுகளில் எயிட்சு நோய் பரிசோதிக்கப்படாத நபர்களில் இந்நோய் எயிட்சின் முதல அறிகுறியாக உள்ளது.
 
காசநோய் எச்.ஐ.வியோடு தொடர்புடைய நோய் தாக்கங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நோய் எதிர்ப்புத்திறன் உள்ள மனிதர்களுக்கும் சுவாசம் வழியாகப் பரவக்கூடியது. இந்நோய் கண்டறியப்படும் பட்சத்தில் எளிதாகக் குணப்படுத்தமுடியும். இந்நோய் எச் ஐ வி - யின் ஆரம்ப நிலையில் ஏற்படலாம். சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வல்லது.இருப்பினும், பன்மருந்துஎதிர்ப்பு ஒரு அதீத பிரச்சனையாகவே உள்ளது.




எயிட்சு நோயின் பிரதான அறிகுறிகள்


காசநோய் தாக்கம் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் நேரடி சிகிச்சை முறை மற்றும் ஏனைய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளினாலும் குறைந்துவருகின்றது. ஆனால் எச்.ஐ.வி. பரவியுள்ள வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய மாற்றம் இல்லை. எச்.ஐ.வி-யின் ஆரம்ப நிலையில் (சி.டி.4 எண்ணிக்கை > 300 செல்கள் /மைக்ரோ லிட்டர் ), காசநோய் ஒரு வரையறுக்கப்பட்ட சுவாசநோயாக வெளிப்படுகிறது. எச்.ஐ.வி. நோய்த்தாக்கம் அதிகரிக்கும்பொழுது, காசநோய் சுவாசநோய்த் தன்மையில் இருந்து மாறுபட்டு நுரையீரலுக்கு வெளியே (உட்பரவிய) நோயாக வெளிப்படுகிறது. நோயறிகுறிகள் ஒரே பகுதியில் அல்லாமல், வெகுவாக எலும்பு மஜ்ஜை, எலும்பு, சிறுநீரக மற்றும் இரைப்பைக்குடல் வழி, கல்லீரல், மண்டல நாள முடிச்சு மற்றும் மைய நரம்பு மண்டலம் போன்றவைகளை பாதிக்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #3 on: May 04, 2012, 01:53:27 AM »
இரைப்பைக் குடல் கிருமித்தாக்கங்கள்
 
உணவுக்குழல் அழற்சி என்பது உணவு குழலின் (தொண்டையையும் இரைப்பையையும் இணைக்கும் குழல்)கீழ் முனையில் உள்ள படர்சவ்வில் ஏற்படும் அழற்சியாகும். எச் ஐ வி நோய் பாதிக்கப்பட்ட நபர்களில் இது காளான் (கேண்டிடியாசிஸ் )அல்லது வைரசினால் (ஹெர்பெஸ் சிம்ப்லக்ஸ்-1 அல்லது சைட்டோமேகல்லோ வைரஸ் )ஏற்படும் நோய்த்தாக்கம். அரிய நிகழ்வாக இது மைகோபாக்டீரியாவாலும் ஏற்படும்.
 
எச்.ஐ.வி. நோய் தாக்கத்தில் ஏற்படும் நாள்பட்ட வயிற்றுபோக்கிற்கான காரணங்கள் பலவாகும். அவைகளில் பொதுவாக பாக்டீரியாவால் (சால்மனெல்லா ,ஷிகல்லா , லிஸ்டீரியா அல்லது காம்பைலோபேக்டர் ) மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் மற்றும் அறிய சந்தர்ப்ப நோய்தாக்கங்களான கிரிப்டோஸ்போரிடியாஸிஸ், [[மைக்ரோஸ்போரிடியாஸிஸ்|மைக்ரோஸ்போரிடியாஸிஸ்{ /6}, மைகோபாக்டீரியம் ஏவியம் கூட்டு (எம் எ சி ) மற்றும் வைரஸ்[17] (ஆஸ்ட்ரோ வைரசு, அடினோ வைரசு, ரோட்டா வைரசு மற்றும் சைட்டோமேகல்லோ வைரசு) சைட்டோமேகல்லோ வைரஸ் பெருங்குடல் அழற்சியை ஏற்படுத்துகிறது .
 
சில நிகழ்வுகளில், எச் ஐ வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவோ அல்லது எச் ஐ வி நோயின் தொடர்விளைவாகவோ வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.இது பெரும்பாலும் ஆரம்ப கால நோயின் குணாதிசயமாக இருக்கிறது.எதிருயிரிணியைப் பயன்படுத்தி கிளாஸ்ற்றிடியம் டிபிசில் போன்ற பாக்டீரியாக்கள் விளைவிக்கும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த நினைக்கும் போதும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எச் ஐ வி நோயின் பிந்தைய காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கானது உணவு பாதையின் சத்துக்களை கிரகிக்கும் திறனில் ஏற்படும் மாற்றத்தால் விளைந்து எச் ஐ வி யின் உடலை இளைக்க வைக்கும் தன்மைக்கு துணைபோவதாய் இருக்கிறது


நரம்பு மண்டல மற்றும் மனநல தொடர்பு
 
இந்நோயின் போது நாளடைவில் பலகீனமாகி விட்ட நரம்பு மண்டலத்தை நுண்ணியிரிகள் தாக்குவதின் மூலமாகவோ அல்லது நேரடி நோய்ப்பிணியின் காரணமாகவோ விதவிதமான மூளைநரம்பு விளைவுகள் ஏற்படலாம்.
 
டாக்ஸோபிளாஸ்மோசிஸ் எனும் நோய் ஒரு செல் ஒட்டுயிரியான டாக்ஸோபிளாஸ்மா காண்ட்டையால் ஏற்படுகிறது. இது பொதுவாக மூளையைத் தொற்றி டாக்ஸோபிளாஸ்மா என்ஸபலைடிஸ் எனப்படும் மூளை அழற்சியையும் கண்கள் மற்றும் நுரையீரலின் வியாதிகளையும் ஏற்படுத்தவல்லது.[19] கிரிப்டோகாக்கல் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைச்சவ்வு அழற்சி க்ரிப்டோகாக்கஸ் நியோபார்மன்ஸ் எனும் காளான் மூளை மற்றும் தண்டுவடத்தை சூழ்ந்துள்ள மெனின்ஞ்செஸ் எனும் மூளை உறையைத் தொற்றும் போது ஏற்படுகிறது. இது காய்ச்சல், தலைவலி, மயக்கம், வாந்தி எடுக்கவேண்டும் என்ற உணர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தலாம்.நோயாளிகளுக்கு வலிப்பு மற்றும் மன குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிகிச்சை அழிக்கத் தவறினால் மரணமும் ஏற்படலாம்.
 
ப்ரொக்ரெஸிவ் மல்டிபோக்கல் லியுகோ என்ஸபலோபதி(PML)என்பது மூளையின் நரம்பணுவால்களை சூழ்ந்துள்ள மையலின் நரம்புறையை படிப்படியாக அழித்து நரம்புகளில் அனிச்சை விளைவுக் கடத்தலைப் பாதிக்கும் மையலின் சிதைவு வியாதியாகும். இந்த நோயானது 70 % மக்களிடையே உட்புதை நிலையையிலுள்ள நச்சுயிரியான ஜே சி வைரஸால் நோயெதிர்ப்புசக்தியற்ற எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது. இந்நோய் விரைவாக முன்னேறி பெரும்பாலும் கண்டுபிடித்த சில மாதங்களுக்குள்ளேயே மரணத்தை ஏற்படுத்தவல்லது.[20]
 
எயிட்ஸ் டிமென்ஷியா காம்ப்ளக்ஸ் (ஏடிசி) என்பது எச் ஐ வி நோய்த்தொற்றால் தூண்டப்பட்டு எச் ஐ வி தொற்றிய மூளை, மேக்ரோபேஜுகள் மற்றும் மைக்ரோ கிளையாவின் நோயெதிர்ப்புத்திறன் ஊக்கத்தால் கிளர்ந்தெழும் ஒரு வளர்சிதைமாற்ற மூளையழர்ச்சி நோயாகும். இவ்விதமான செல்கள் எச் ஐ வி யால் வளமாக தொற்றப்பட்டு நோயளினதும் நச்சுயிரினதுமான நரம்புநச்சை சுரக்கின்றன.[21] பிரத்தியேக நரம்புக் கோளாறுகள் எச் ஐ வி நோய் தொற்றி பல வருடங்கள் கழித்து வெளிவந்து அறிவு, நடவடிக்கை மற்றும் வெளி நோக்கு நரம்பியக்கத் திறன் குறைபாடுகளைக் கொண்டிருக்கும். இவை குறைந்த CD4+ T செல் அளவுகளையும் இரத்தத்தில் அதிக நச்சுயிரி சுமையையும் கொண்டிருக்கும்.
 
இதன் பரவல் மேற்கத்திய நாடுகளில் 10 -20 % மும் இந்தியாவில் 1 -2 % ம் ஆகும்.. இந்த வித்தியாசம் எச் ஐ வி யின் உள்வகைகளைப் பொருத்ததாகும். எச் ஐ வி நோயாளிகளுக்கு பிந்தைய காலத்தில் எயிட்ஸுடன் தொடர்புடைய பித்து பிடிக்கக் கூடும். இது நரம்புகளின் அதிர்வுகடத்தும் பண்பின் இருமுனைக் கோளாற்றினால் ஏற்படும் பித்து நிகழ்வுகளைவிட விட அதிகமான எரிச்சலும், அறியும்சக்தி குறைபாடும், குறைவான சுபிட்ச மனநிலையையும் கொண்டிருக்கும். எச் ஐ வி யால் ஏற்படும் பித்து நாள்பட்டதாகவும் இருக்கும். பல்நோக்கு மருந்துகளாலான சிகிச்சையினால் இக்கூட்டு அறிகுறிகள் குறைவாகவே தென்படுகிறது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #4 on: May 04, 2012, 01:55:15 AM »
கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும்



காபோசி'ஸ் சார்கோமா


எச் ஐ வி நோயாளிகள் பலவிதமான புற்று நோய்களுக்கான வாய்ப்பை பெருமளவு கூட்டியிருக்கின்றனர்.இது பிரதானமாக புற்றுநோயத்திறனுள்ள டி என் ஏ வைரஸ் களான எப்ஸ்டீன்-பார் வைரஸ் (EBV) காபோசி'ஸ் சார்கோமா அசோஷியேடட் ஹெர்பிஸ் வைரஸ் (KSHV) மற்றும் ஹியுமன் பேபில்லோமா வைரஸ்போன்றவைகளின் சக தொற்றால் ஏற்படுகிறது.[25][26]
 
காபோசி'ஸ் சார்கோமா (KS) எச் ஐ வி நோயாளிகளில் சாதாரணமாக காணப்படும் கட்டியாகும். இந்த கட்டி 1981 இல் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே தென்பட்டதே எயிட்ஸ் பரவலின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும். காமா ஹெர்பிஸ் வகையைச் சேர்ந்த காபோசி'ஸ் சார்கோமா அசோஷியேடட் ஹெர்பிஸ் வைரஸ் (KSHV) எனும் நச்சுயிரியால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் ஊதா முடிச்சுகளாக தோலில் மட்டுமல்லாது பிற உறுப்புக்களான வாய், உணவு குழாய் மற்றும் நுரையீரலையும் தாக்க வல்லது.
 
உயர் நிலை பி செல் நிணத்திசுப் புற்று க்களான பர்கிட்ஸ் லிம்போமா, பர்கிட்ஸ் லைக் லிம்போமா, டிஃப்யூஸ் லார்ஜ் பி -செல் லிம்போமா(DLBCL), மற்றும் பிரைமரி சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் லிம்போமா ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன.இத்தகைய புற்றுக்கள் மோசமான முன்னறிவித்தலை அறிவிக்கின்றன. சில நிலைகளில் இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் எயிட்ஸினை விவரிப்பதாக அமைந்துள்ளன. எப்ஸ்டீன்-பார் வைரஸ்(EBV) இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் பலவற்றை உருவாக்குகிறது.
 
எச் ஐ வி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை முகப்பு புற்றுநோயும் எயிட்ஸினை விவரிப்பதாக உள்ளது. இது ஹியுமன் பேபில்லோமா வைரஸினால்(HPV)ஏற்படுத்தப்படுகிறது.
 
மேலே கூறப்பட்ட எயிட்ஸினை விவரிக்கும் கட்டிகளைத்தவிர எச் ஐ வி நோயாளிகள் ஹாட்ஜ்கின்'ஸ் நோய் மற்றும் மல துவார மற்றும் ஆசன வாய் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் அதிகம் காணப்படுவதில்லை. எயிட்ஸ் நோய் சிகிச்சைக்கு HAART அதிகம் உபயோகிக்கப்படும் இடங்களில் எயிட்ஸோடு தொடர்புடைய ஆபத்து வாய்ந்த புற்றுக்களின் தென்படுதல் குறைகிறது. ஆனாலும் எச் ஐ வி நோயாளிகள் மரணத்திற்கு ஆபத்தான புற்றுக்களே மிக முக்கிய காரணமாக விளங்குகிறது


ஏனைய சந்தர்ப்பவாத தொற்றுக்கள்
 
எயிட்ஸ் நோயாளிகள் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நோய்த்தொற்றுகளால் மிதமான காய்ச்சல் மற்றும் எடை குறைவு போன்ற இனம் புரியாத நோய் அறிகுறிகளை வெளிக்காட்டுகின்றனர் இது மைகொபேக்டீரியம் ஏவியம்,மைகொபேக்டீரியம் இண்டர்செல்லுலரே மற்றும் சைடோமெகலோவைரஸ்(CMV) போன்ற தொற்றுக்களை உள்ளடக்கியது. CMV பெருங்குடல் அயர்ச்சியையும், சி எம் வி விழித்திரை அழற்சி-ஐயும் உருவாக்கி பார்வையின்மையை ஏற்படுத்த வல்லது.
 
நோய் பரவியுள்ள தென் கிழக்கு ஆசியாவில் பெனிசிலியம் மார்ணபீ தோற்றுவிக்கும் பெனிசிலினோசிஸ் நோய், எக்ஸ்ட்ரா பல்மனரி டியுபர்குளோசிஸ் மற்றும் கிரிப்டோகாகோசிஸ் க்கு அடுத்தப்படியாக எச் ஐ வி நோயாளிகளை அதிகம் தாக்கும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றாக இருக்கிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #5 on: May 04, 2012, 01:58:21 AM »
காரணம்



எச் ஐ வி -1 இன் ஒளி நுண்ணொளி எலக்ட்ரான் நுண் வரைபடம், பச்சை நிறத்துடன் ,வளர்க்கப்பட்ட நிண அணுவில் இருந்து வெளிப்படுகிறது.


அழிக்கப்பட்ட உடன் செல்வழி நோயெதிர்ப்பு ஒழிக்கப்படுகிறது. இரத்தத்தில் மீதமிருக்கும் CD4+ T செல்களின் அளவைப்பொருத்தும், மேலே குறிப்பிட்டதைப் போல ஏனைய தொற்றுக்களினைப்பொருத்தும் தீவிர எச் ஐ வி தொற்று நாளடைவில் நோய் உட்புதை எச் ஐ வி தொற்றாகவும் அதன்பின்னர் ஆரம்ப அறிகுறிகளுடைய எச் ஐ வி தொடராகவும் இறுதியாக எயிட்ஸாகவும் முன்னேறுகிறது.
 
ரெட்ரோவைரல் எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி எயிட்ஸாக முன்னேறுவதற்காகும் கால இடைநிலை 9 முதல் 10 வருடங்களாகவும், எயிட்ஸ் உருவான பின்னர் உயிர்வாழும் காலத்தின் இடைநிலை 9.2 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது.எனினும் மருத்துவ குணாதிசயங்களுடனான வியாதியாக முன்னேறும் வேகம் மனிதர்களுக்கிடையே இரு வாரங்கள் முதல் இருபது வருடஙகள் வரையிலான மாறுபட்ட காலஅளவை உடையதாய் காணப்படுகிறது.
 
நோய் வளர்ச்சியின் வேகத்தை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன.இதில் நோயாளியின் நோயெதிர்ப்புசக்தி எனும் எச் ஐ வி யிலிருந்து உடலைப் பாதுகாக்கும் காரணிகளும் அடங்கும்.வயதானவர்கள் பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டுள்ளதால் அத்தகையோர் நோய் முற்றல் மிக விரைவாக நடக்கும் ஆபத்தைப் பெற்றிருக்கின்றனர்.
 
மருத்துவவசதியின்மை மற்றும் காசநோய் போன்ற சகத்தொற்று நோய்கள் ஆகியன விரைவான நோய் முற்றுதலுக்கு வழிவகுக்கின்றன. நோய்த்தாக்கிய மனிதனின் மரபணு பாரம்பரியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே சிலர் குறிப்பிட்ட சில வகை எச் ஐ வி கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாயிருக்கின்றனர். டுத்துக்காட்டாக ஒத்த மரபு நிலை CCR5-Δ32 மாறுபாடு உடையவர்கள், சில எச் ஐ வி வகைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உடையவர்களாய் இருக்கின்றனர். எச் ஐ வி மரபியல் மாறுபாடுகள் உடையதாக இருப்பதால் பல்வேறு வகைகளாக தோன்றி நோயமுற்றலில் வேறுபட்ட வேகத்தை கொண்டனவாய் இருக்கிறது



உடலுறவின் வாயிலாக பரவுதல்
 
ஒருவரின் உடல் திரவங்களோடு இன்னொருவரின் ஆசனவாய், பிறப்புறுப்பு அல்லது வாயின் உட்பகுதியில் உள்ள படர்ஜவ்வுப்படலம் தொடர்பு கொள்ளும் பொழுது இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவில் ஏற்றுகொள்ளுபவர்களுக்கு, செருகச் செய்பவர்களை விட ஆபத்து அதிகமாயும், பாதுகாப்பற்ற ஆசனவாய் வழி உடலுறவு மேற்கொள்ளுபவர்களுக்கு, பிறப்புறுப்பு வழி மற்றும் வாய் வழியேயான உடலுறுவு மேற்கொள்பவர்களை விட நோய்த் தொற்றும் ஆபத்து அதிகமாயும் காணப்படுகிறது.
 
எனினும் செருகச் செய்பவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து சம அளவில் இருப்பதால், வாய்வழி உறவும் பதுகாப்பானதென்று கூறுவதற்கில்லை[39],[40]. பலவந்தபடுத்தி உடலுறவு கொள்ளுதல் ஆணுறை பயன்படுத்தாமலேயே கொள்ளப்படுவதாலும், யோனிக்குழாய்க்கு அதிக சேதம் விளைவிப்பதாலும் எச் ஐ வி பரவுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது[.
 
ஏனைய பாலியல் நோய்த்தொற்றுக்கள் (STI) genital ulcerபிறப்புறுப்புகளில் நுண்ணிய அரிமான புண்களை ஏற்படுத்தி தோல் மேலணியை சேதப்படுத்துவதன் மூலமும், விந்து மற்றும் யோனி மட கசிவுகளில் சிறுக சிறுக சேர்ந்துகொண்டிருக்கும் எச் ஐ வி தொற்றிய அல்லது தொற்றுக்காளாகும் நிணத்திசுக்கள் மற்றும் மேக்ரோபேஜ்களின் மூலமும் எச் ஐ வி யின் கடத்துதலையும் நோய்த்தொற்றுதலையும் அதிகரிக்கச்செய்கிறது. சப்-சகாரன் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நோய்ப்பரவல் குறித்த ஆய்வுகள் பால்வினை நோய்களான சிபிலிஸ், கேன்க்ராய்ட் முதலியவைகளால் உருவாக்கப்படும் பிறப்புறுப்பு அரிமானப் புண்கள், எச் ஐ வி நோய்த்தொற்றை நான்கு மடங்குகள் அதிகரிக்கச் செய்வதாய் கூறுகின்றன. நிண அணுக்கள் மற்றும் மேக்ரோபேஜ்களின் கூட்டணியை தன்னைச் சார்ந்த பகுதிகளில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் கோனோரியா, கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பால்வினை நோய்கள் நோய்தொற்றும் அபாயத்தை குறைந்த அளவேனும் அதிகரிக்கச் செய்வதாய் இருக்கின்றன.
 
எச் ஐ வி யின் நோய்பரப்புதல், அதன் நோய்த்தொற்று திறனின் அடையாளக் குறியீட்டைப் பொறுத்தும் நோயில்லாதவரின் நோயத்தொற்றுக்காளாகும் அபாயத்தைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. நோயின் நிலையைப் பொறுத்து நோய்த்தொற்றுதிறன் மாறுபடுவதாயும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானதாயும் இருக்கிறது. இரத்தத்தில் நச்சுயிரிசுமை கண்டுபிடிக்க முடியாததாய் இருந்தாலும் விந்து மற்றும் பிறப்புறுப்புக் கசிவுகள் நச்சுயிரியற்று உள்ளன எனச் சொல்வதற்கில்லை.
 
எனினும் இரத்தத்தில் ஏற்படும் ஒவ்வொரு பத்து மடங்கு எச் ஐ வி அதிகரிப்பும் நோய்த்தொற்றை 81 % அதிகரிக்கும்[42][43]. ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்ணுறுப்பின் நுண்ணுயிரிச் சூழலாலும், உடல் இயக்கு இயலினாலும், பெண்கள் எச் ஐ வி நோயத்தொற்றுக்காளாகும் வாய்ப்பையும் பால்வினை நோய்களுக்காளாகும் தன்மையையும் பெற்றிருக்கின்றனர்[44],[45]
 
எச் ஐ வி யின் ஒரு மாதிரியால் தொற்றப்பட்டவர்கள் பிற்காலங்களில் வேறு ஆபத்தான மாதிரிகளால் தொற்றக்கூடும்.
 
ஒரே முறை உடலுறவினால் நோய்த்தொற்றுவது கடினம். பலருடன் வைத்திருக்கும் நீண்ட கால பாலியல் தொடர்பு களின் போக்குடன், அதிவேகமான நோய்த்தொற்று பரவல் காணப்படுகிறது. இத்தகைய நிலைமை இந்நச்சுயிரி நோயற்ற துணைக்குப் பரவி அவரிடமிருந்து பிறருக்கு பரவ வழிவகுக்கிறது.ஒருவர் ஒரு காலகட்டத்தில் இன்னொருவருடன் மற்றுமே உறவு வைத்திருப்பது அல்லது எப்போதாவது நிகழும் உடலுறவுகள் குறைந்த நோய்த்தொற்று வேகத்தைக் கொண்டிருக்கிறது[46].
 
ஆணோடு பெண் வைத்திருக்கும் உறவின் மூலம் எச் ஐ வி பரவுவது வேற்றிடங்களை விட ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவுகிறது. இதற்கான காரணம் 50 % ஆப்பிரிக்க பெண்களின் யோனியின் படர் சவ்வினை சிதைக்கும் ஸ்சிஸ்டோஸோமியாசிஸ் எனும் ஒட்டுண்ணி வியாதியாகும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #6 on: May 04, 2012, 02:02:18 AM »
இரத்தத்தின் நோய்க் காரணிகளால் பாதிக்கப்படும்பொழுது




போதைமருந்து உட்கொள்ளுதலுடன் கூடிய எயிட்ஸ் ஆபத்தை விவரிக்கும் 1989 CDC சுவரொட்டி


இந்த நோய்த் தொற்றல் வழி பெரும்பாலும் சிரை வழியாக போதைமருந்து போடுபவர்களுக்கும், இரத்தம் உறையாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரத்ததானம் மற்றும் இரத்த பொருட்கள் தானம் பெறுபவர்களுக்கும் பொருத்தமானது. எச் ஐ வி தொற்றப்பட்ட இரத்தத்தால் கிருமி தாக்கப்பட்ட ஊசிகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பலமுறை பயன்படுத்துதல் எச் ஐ வி பரப்ப முக்கியமான காரணமாய் இருக்கிறது.
 
வட அமெரிக்கா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் ஊசிகளைப் பகிர்தலே மூன்றில் ஒரு பங்கு எச் ஐ வி நோய்த் தொற்றுக்கு காரணமாகும்.எச் ஐ வி நோயாளி மீது பயன்படுத்தப்பட்ட ஊசியை ஒரே முறை பயன்படுத்துவதால் 150 பேரில் ஒருவருக்கு எச் ஐ வி தொற்றுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (மேலே அட்டவணை பார்க்க)எச் ஐ வி எதிர் மருந்துகள் மூலம் தொடர்புக்கு பிந்தைய நோய்க்கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் நோய் தொற்றும் அபாயத்தை மேலும் குறைக்கலாம்.
 
பச்சை குத்துதல் மற்றும் துளையிடுதல் ஆகியன மேற்கொள்ளுபவர்களுக்கும் இதே வழிமுறை மூலம் நோய்த்தொற்று நிகழலாம். சப்-சகாரன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் திகழும் மருத்துவ வசதிக் குறைபாடு மற்றும் போதிய பயிற்சியின்மை போன்றவை இந்நாடுகள் உலகளாவிய நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக இல்லை.
 
ஏறத்தாழ 2.5% எச் ஐ வி நோய்த்தொற்று பாதுகாப்பற்ற உடல்நலம் பேண பயன்படுத்தப்படும் ஊசிகளால் ஏற்படுவதாக }WHO கணித்துள்ளது[50]. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை மக்கள் நல பணியாளர்கள் மூலம் எச் ஐ வி பரவுவதைத் தடுக்க நோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
 
வளர்ந்த நாடுகளில் இரத்ததானத்தின் மூலம் எச் ஐ வி பரவுதல் தரமான நன்கொடையாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் எச் ஐ வி நோய் பாதிப்பு ஆய்வின் மூலமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான மக்களுக்கு பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதில்லை எனவும் உலகளாவிய எச் ஐ வி நோய் பரவலில் 5% முதல் 10% இரத்ததானத்தின் மூலமும் இரத்தபொருட்கள் தானத்தின் மூலமுமே நடக்கிறது எனவும் WHO கணித்துள்ளது


பிறப்பு சார்ந்த நோய் பரவுதல்
 
தாயிடமிருந்து குழந்தைக்கு,குழந்தை கருப்பையில் இருக்கும்போதே கர்ப்பகாலத்தின் கடைசி வாரங்களிலும் பிரசவத்தின் போதும் நோய்த் தொற்றல் நடக்கிறது. சிகிச்சை அளிக்காத பொழுது கர்ப்பகாலத்தின் போதோ, பிரசவ வலியின் போதோ அல்லது பிரசவத்தின் போதோ தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல் 25 % ஆகும்.
 
ஆனால் தாய் ரெட்ரோ வைரல் எதிர் மருந்து சிகிச்சைக்கு உட்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நோய்பரவுதல் வெறும் 1 % மட்டுமே.[53] நோய்த்தொற்றும் அபாயம் குழந்தை பெரும் பொழுது தாயின் வைரஸ் சுமையைப் பொறுத்துள்ளது. வைரஸ் சுமை அதிகமாக இருப்பின் நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாக இருக்கும்.தாய்ப்பாலூட்டுதலும் நோய்ப் பரவலை 4 % அதிகரிக்கிறது


தவறான நம்பிக்கைகள்


எச் ஐ வி/எயிட்ஸ்-ஐ சுற்றி பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் சாதாரண தொடுதலின் மூலம் எயிட்ஸ் பரவும், கன்னியுடன் கொள்ளும் உடலுறவு எயிட்ஸை குணமாக்க வல்லது மற்றும் எச் ஐ வி ஓரினச் சேர்க்கையாளர்களையும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையுமே தாக்கும் என்ற மூன்றும் முக்கியமானவை.ஆசனவாய் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே உடலுறவு கொள்வது எயிட்ஸுக்கு வழிவகுக்கும் என்பதும் பள்ளிகளில் ஓரினச்சேர்க்கை பற்றிய திறந்த கலந்துரையாடல் ஓரினச்சேர்க்கையையும் எயட்சையும் பெருக்கும் என்பன இது போன்ற ஏனைய தவறான எண்ணங்கள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #7 on: May 04, 2012, 02:05:15 AM »
உடல் இயக்க நோய்க்குறி இயல்

எயிட்ஸின் உடல் இயக்க நோய்க்குறியியல் ஏனைய கூட்டியங்களைப் போல மிக சிக்கலானது. [124] இறுதியில் எச் ஐ வி CD4 + T ஹெல்பர் நிண அணுக்களை அழித்து எயிட்ஸை உருவாக்குகிறது. எயிட்ஸோ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி வாய்ப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் நோய்த்தொற்றுக்களுக்கு வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு உருவாவதற்கு T நிண அணுக்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.அவை இல்லாத பொழுது நோய்த் தொற்றுக்களை விரட்டவும் புற்று அணுக்களை அளிக்கவும் உடலால் இயலாது. CD4 + T செல் அழிவின் முறை தீவிர நோய்நிலையிலும் நாள்பட்ட நோய்நிலையிலும் மாறுபடுகிறது.
 
தீவிர நோய்நிலையில் CD4 + T செல்களின் அழிவு,எச் ஐ வி யால் தூண்டப்பட்ட செல் அழிவு மற்றும் செல் நச்சு T செல்களின் நோய்தொற்றிய செல்களைக் கொல்லும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக நிகழ்கிறது. திட்டமிடப்பட்ட செல் மரணத்தின் மூலமாகவும் இது நிகழலாம். நாள்பட்ட நோய் நிலையில், உடலளாவிய நோயெதிர்ப்பு தூண்டுதலின் விளைவுகளினால், புது T செல்கள் தயாரிக்கும் வல்லமையை நோயெதிர்ப்பு மண்டலம் படிப்படியாக இழந்து விடும் தன்மையே CD4 + T செல்கள் குறைவதற்கு காரணமாய் இருக்கிறது.
 
எயிட்ஸின் பிரதான குணாதிசயமான நோயெதிர்ப்புக் குறைபாட்டின் அறிகுறிகள், மனிதரை நோய்த்தொற்றி பல வருடங்கள் வரை புலப்படாமல் போனாலும் நிண அணுக்களின் புகலிடமான குடற்பகுதி மேல்சவ்வு போன்ற பகுதிகளில், CD4+T செல்களின் பெரும்பான்மை இழப்பு, நோய்த்தொற்றின் முதல் வாரங்களிலேயே ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பாக குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளில் CD4+ T செல்கள் அழிக்கப்பட காரணம் ,பெரும்பான்மையான CD4+ T செல்கள் CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும். இரத்தத்தில் இருக்கும் CD4+ T செல்களோ மிகக் குறைவான CCR5 சக ஏர்புணர்விகளையே கொண்டிருக்கும்.

தீவிர நோய் நிலையில் எச் ஐ வி CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும் CD4+ செல்களை, தேடிப் பிடித்து அழிக்கிறது. ஒரு பலமான நோயெதிர்ப்பு சக்தி எழும்பி, படிப்படியாக நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி நோயுட்புதை நிலையைத் தோற்றுவிக்கிறது. ஆரம்ப நோய்நிலையில், உயிருக்கு ஆபத்தான பிற நோய்த்தொற்றுக்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிலைத்திருப்பினும், குடற்பகுதி மேல்சவ்வு CD4+ T செல்கள் நோய்க்கிருமித்தாக்கம் முழுவதும் அழிந்தவண்ணமே இருக்கும்.
 
விடாமல் நடந்துகொண்டிருக்கும் எச் ஐ வி யின் பல்பிரிவாக்கம், நாள்பட்ட நோய் நிலை முழுவதிலும் ஒரு உடலளாவிய நோய் எதிர்ப்பு தூண்டுநிலையைத் தோற்றுவிக்கிறது. நோய் எதிரணுக்களைத் தூண்டி அழற்சி உண்டுபண்ணும் சைடோகைன்களை வெளிவிடும் இத்தகைய நோயெதிர்ப்பு தூண்டுநிலை, எச் ஐ வி மரபணு பொருட்களாலும், எச் ஐ வி பல்பிரிவாக்கத்திற்கு எதிராக எழும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கத்தாலும் ஏற்படுகிறது.தீவிர நோய்நிலையில் நிலவும் குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளின் CD4+ T செல்களின் அழிவு ஏற்படுத்தும், உட்சவ்வு வேலி நோயெதிர்ப்பு கண்காணிப்பு ஒழுங்குச்சேதம் மற்றுமொரு காரணமாகும்.
 
மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தைக் குடலின் இயற்கையான நுண்ணுயிரிகளுக்கு கையளித்து விடுகிறது. ஆரோக்கியமான நபர்களிலோ இந்நுண்ணுயிரிகள் உட்சவ்வு நோயெதிர்ப்பு மண்டலத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோயெதிர்ப்புத் தூண்டுதலால் ஏற்படும், T செல் தூண்டப்படுதலும் அவற்றின் பெருக்கமும் அவற்றை எச் ஐ வி நோய்க் கிருமியின் புதிய இலக்காக்குகின்றன.இரத்தத்தின் CD4+ T செல்களில் 0.01-0.10% அளவே நோய்த்தொற்றுக்காளாவதால், CD4+ T செல்களின் ஒட்டுமொத்த அழிவிற்கு, எச் ஐ வி யின் நேரடி தாக்குதல் மட்டுமே காரணமாக இருத்தல் இயலாது.
 
நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது ஏற்படும் திட்டமிடப்பட்ட செல் மரணத்திற்கு ஆளாவதே CD4+ T செல் அழிவிற்கு முக்கிய காரணமாகும். இழந்த T செல்களை ஈடுகட்ட வெளிக்கணையமானது புது T செல்களை விடாமல் தயாரித்துக் கொண்டிருந்தாலும், வெளிக்கணைய அணுக்கள் மீதான எச் ஐ வி யின் நேரடி தாக்குதல், வெளிக்கணையத்தின் இழப்பு மீட்புத் தன்மையைப் படிப்படியாக அழித்து விடுகிறது. எனவே நாளடைவில் போதுமான நோயெதிர்ப்புசக்தினிலைக்குத் தேவையான குறைந்தபட்ச CD4+T செல்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, எயிட்ஸுக்கு வழிவகுக்கிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #8 on: May 04, 2012, 02:08:06 AM »
பாதிக்கப்பட்ட செல்கள்
 
எச் ஐ வி நச்சுயிரி எந்த வழியில் நுழைந்தாலும் கீழ்கண்ட செல்களை முதலில் தாக்குகிறது.

*நாள மண்டலம் : CD4+ T-ஹெல்பர் செல்கள்
 *மேக்ரோபேஜ்கள்
 *மோனோசைட்டுகள்
 *B-லிம்போசைட்டுகள்
 
*சில நாள உட்சவ்வு செல்கள்
 *ஆஸ்ட்ரோசைட்டுகள்
 *ஒலிகோடென்றோசைட்டுகள்
 *நரம்பு செல்கள் - சைடோகைன்கள் மற்றும் gp -120 யின் செயல் மூலம் மறைமுகமாக


நோயின் விளைவு
 
இந்நச்சுயிரிக்கு உயிரணு தாக்கும் பண்பு உள்ளது.ஆனால் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. இது நீண்ட காலங்கள் செல்களில் செயலற்று இருக்கும் வல்லமையையும் பெற்றுள்ளது. இந்த பண்பு CD4-gp120 இடையே நடக்கும் பின்னிய செயல்விளைவால் நிகழ்கிறதென எண்ணப்படுகிறது.[58]
 

**எச் ஐ வி வைரஸின் மிக முக்கிய விளைவு T-ஹெல்பர் செல்களின் வீழ்ச்சியும் அழிவும் ஆகும். செல்லானது கொல்லப்படுகிறது அல்லது செயல்பட முடியாத அளவிற்கு சிதைக்கப்படுகிறது. (அவை வெளிப்புரதங்களுக்கு சவாலாக இருப்பதில்லை). நோய்த்தொற்றிய B செல்களாலும் எதிர்ககாரணிகளை தயார் செய்ய இயல்வதில்லை. இவ்வாறாக நோயெதிர்ப்பு மண்டலம் வீழ்ச்சியடைந்து நோய்த் தொற்றுக்கள் மற்றும் புற்றுக்கட்டிகள் போன்ற பிரத்தியேக எயிட்ஸ் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.(மேலே பார்க்க)
 

**மைய நரம்பு மண்டலத்தின் செல்களில் ஏற்படும் நோய்த்தொற்று தீவிர கிருமிகளற்ற மூளை உறை அழற்சியையும், தீவிரக்குறைவான மூளை அழற்சியையும் வெற்றிட தண்டுக்கொழுப்பழர்ச்சியையும் புற எல்லை நரம்பழர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பின்னர் அது எயிட்ஸ் நோய் புத்தி சுவாதீனமின்மையைத் தோற்றுவிக்கிறது.
 

**CD4-gp120 இன் பின்னிய செயல்விளைவு (மேலே பார்க்க) சைடோமகேலோ வைரஸ், ஹெபடைடிஸ் வைரஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி வைரஸ் மற்றும் ஹெர்பிஸ்சிம்ப்ளெக்ஸ் வைரஸ் போன்ற நச்சுயிரிகளுக்கு அனுமதியளிக்கும் காரணத்தால் செல் சிதைவு வலுப்பெறுகிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #9 on: May 04, 2012, 02:11:40 AM »
நோய் நிர்ணயம்

எச் ஐ வி யினால் தாக்கப்பட்ட மனிதர்களில் நோய் கண்டறிதல் சில நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. ஜூன் 5,1981-லிருந்து எச் ஐ வி யின் நோய்த் தோன்று வழி ஆய்தல் மற்றும் நோய் அழிவு ஆய்தலைப் பற்றி, பேங்குய் வரையறை மற்றும் 1994 இன் உலக சுகாதார நிறுவனத்தின் விரிவான எயிட்ஸ் நோய்க்கான வரையறை, போன்ற பல வரையறைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.ஆனாலும் இவ்வரையறைகள் நுட்பமற்றதாகவும் பிரத்யேகமற்றதாகவும் இருப்பதினால் நோயாளிகளை அவரவர் நோய்நிலைப்படி வகைப்படுத்துதல் இவற்றிற்கு தேவையற்றது. வளரும் நாடுகளில் நோய் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி ஆதாரக் கூறுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட எச் ஐ வி தொற்று மற்றும் நோய்க்கான உலக சுகாதார நிறுவன வகைப்பாட்டு முறையும், வளர்ந்த நாடுகளில் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC)நோயப்பகுப்பு முறையும் பின்பற்றப்படுகின்றன


WHO நோய் நிலை நிர்ணயம்



1990 இல் உலக சுகாதார நிறுவனம் இந்நோய்த்தொற்றுகளையும் நிலைகளையும் ஒன்றுபடுத்தி எச் ஐ வி-1 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வகைப்பாட்டு முறையை அளித்துள்ளது. செப்டம்பர் 2005 இல் மறுவரையறுக்கப்பட்டது. இந்நோய் நிலைகள் பெருமளவு ஆரோக்கியமான மனிதர்களில் எளிதாகக் குணப்படுத்தவல்ல சந்தர்ப்பவாத நோயத்தொற்றுக்களே ஆகும்.
 நிலை I: எச் ஐ வி நோய்த் தொற்று அறிகுறிகளற்றதாக இருக்கிறது .இதை எயிட்ஸ் என்று கூறமுடியாது.

 நிலை II: இது தோல் மற்றும் உட்சவ்வு வெளிப்பாடுகளையும் திரும்பத் தோன்றும் மேல் சுவாச பாதையின் நோய்த் தொற்றுக்களையும் கொண்டிருக்கும்.

 நிலை III:ஒரு மாதத்துக்கு மேலாக இருந்துகொண்டிருக்கும் காரணம் கூற இயலாத நாள்பட்ட வயிற்றுப்போக்கு, கடுமையான பாக்டீரியாக்களின் தொற்று மற்றும் நுரையீரல் காசநோயைக் கொண்டிருக்கும்.

 நிலை IV: இது மூளையில் டாக்சோபிளாஸ்மோசிஸையும், உணவுக் குழாய், மூச்சுக் குழாய், சிறு மூச்சுக் குழாய், நுரையீரல் போன்றவற்றில் கேன்டிடியாசிஸையும், காபோசி'ஸ் சார்கோமா வையும் கொண்டிருக்கும். இந்நோய்கள் எயட்ஸின் அறிகுறிகளாகத் திகழ்பவை.


CDC வகைப்பாட்டியல் முறை
 
முதன்மைக் கட்டுரை: CDC Classification System for HIV Infection
 
நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களால்(CDC) எயிட்ஸகலை குறித்து இரு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலாவது வரையறை,எயிட்ஸின்னை அதனுடன் சம்பந்தப்பட்ட நோய்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, எச் ஐ வி யின் கண்டுபிடிப்பாளர்கள், அதற்கு அப்பெயரை இடுவதற்கு காரணமாய் இருந்த நோயான நிணநீர்ச் சுரப்பி நோய். 1993 இல் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம்(CDC) எயிட்ஸின் வரையறையை CD4+ T செல்களை, 1 µL இரத்தத்தில் 200க்கும் குறைவாகவோ அல்லது அனைத்து நிண செல்களின் எண்ணிக்கையில் 14 % க்கு குறைவாகவோ பெற்றிருக்கும் அனைத்து எச் ஐ வி நேர்மறை மக்களும் எயிட்ஸில் அடங்குவர் என எயிட்ஸின் வரையறையை விரிவாக்கம் செய்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான எயிட்ஸ் நோயாளிகளுக்கு இந்த வரையறையையோ, அல்லது 1993 க்கு முந்தைய வரையறையையோ பயன்படுத்துகின்றனர். இத்தகைய எயிட்ஸ் நோய் நிர்ணயம், சிகிச்சைக்கு பின்னர் இரத்தத்தின் 1 µL க்கு, CD4 + T செல்களின் எண்ணிக்கை 200 ஐ விட அதிகரித்தாலும் அல்லது எயிட்ஸ் இருப்பதைப் பறைசாற்றும் ஏனைய நோய் அறிகுறிகள் குணமாக்கப்பட்ட பின்னரும் நிலைத்து நிற்கிறது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #10 on: May 04, 2012, 02:12:52 AM »
எச் ஐ வி சோதனை


எச் ஐ வி யால் தொற்றப்பட்டிருப்பதை பல மக்கள் அறியாதிருக்கின்றனர்.[60] உடலுறவு கொள்ளும் நகர மக்கள்தொகையில் 1 % க்கும் குறைவானவர்களே, எச் ஐ வி சோதனைக்கு உட்பட்டிருக்கின்றனர். கிராமங்களில் இந்த விகிதம் இன்னும் குறைவானதாகும். மேலும் நகர நல வாரியங்களுக்கு வருகை தரும் 0.5% கர்ப்பிணிப் பெண்களே அறிவுறுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு சோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.கிராம நல வாரியங்களில் இது இன்னும் குறைவாயிருக்கிறது.[60]. எனவே மருத்துவம் மற்றும் மருத்துவ ஆய்வில் பயன்படுத்தப்படும் கொடையாளரின் இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்கள் நோய் பாதிப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
 
எச் ஐ வி சோதனைகள் பெரும்பாலும் தமனி இரத்தத்திலேயே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ஆய்வகங்கள் எதிர் எச் ஐ வி எதிர்க் காரணிகளையும் (IgG மற்றும் IgM), எச் ஐ வி p24 நோய் எதிர்ப் புரதத்தையும் கண்டறியும், நான்காம் தலைமுறை நோய் பாதிப்பாய்வு சோதனைகளை பயன்படுத்துகின்றன. முந்தைய சோதனையில் எதிர்மறையென கருதப்பட்ட நோயாளியிடம் எச் ஐ வி எதிர்காரணியோ அல்லது எதிர்ப்புரதமோ கண்டறியும் பட்சத்தில் அது எயிட்ஸ் நோய்க்கு சான்றாக எண்ணப்படும்.நோயாளிகளின் முதலாம் மாதிரி எயிட்ஸ் நோய்க்கூறுகளை வெளிப்படுத்தினால் அவர்கள் அதனை உறுதிப்படுத்தும் படிக்கு அவர்கள் பிறிதொரு இரத்த மாதிரி மூலம் இரண்டாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
 
முதலாம் நோயத்த்தொற்றிற்கும் அதற்கு எதிராகக் கண்டுபிடிக்கவல்ல நோய் எதிர்க்காரணிகள் உருவாகும் காலத்திற்கும் இடைப்பட்ட காலமான ஜன்னல் காலம் ஊனீர் மாற்றமடைந்து நேர்மறைஎன சோதித்தறிவதற்கு 3–6 மாதங்கள் பிடிக்கும். ஜன்னல் காலத்தில் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் இந்நச்சுயிரியைக் கண்டுபிடித்தல் சாத்தியமான ஒன்றாகும்.இதன் மூலம் நான்காம் தலைமுறை EIA நோய்பாதிப்பாய்வைவிட விரைவாக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப் படுகிறதென ஆய்வுகள் கூறுகின்றன.
 
பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் நேர்மறையென அறிவிக்கப்பட்ட முடிவுகள் எதிர்க்காரணி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.[61] எச் ஐ வி யால் தொற்றப்பட்ட தாய்க்குப் பிறந்த பச்சிளம் குழந்தைகளில் நடத்தப்படும் வழக்கமான எச் ஐ வி சோதனைகள் குழந்தையின் இரத்தத்தில் இருக்கும் தாய் வழி நோய் எதிர்க்காரணிகளால் நம்பத் தகுந்தவை அல்ல. எனவே குழந்தையின் நிண அணுக்களில் அமையப்பெற்றிருக்கும் எச் ஐ வி முன் நச்சுயிரியின் டி என் ஏ யை சோதித்தறியும் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலமே நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க இயலும்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #11 on: May 04, 2012, 02:35:05 AM »
தடுக்கும் முறைகள்

ஒவ்வொரு செயலுக்கும் ஏற்படக்கூடிய எச் ஐ வி நோய் தாக்கத்திற்கான அபாய நிர்ணயம்

எச் ஐ வி நோய்க்கு ஆளாகும் வழி



நோயத்தாக்கதிர்க்காளாகும் வழி 

    நோய்த்தொற்றுமூலத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு10,000 முறைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நோய்த்தொற்றுக்கள்
 




இரத்த தானம்
 
9,000
 
பிரசவம்
 
2,500
 

போதை மருந்துகள் உட்செலுத்தப் பயன்படும் ஊசி-பகிர்மானம்
 
67
 

தோலில் செலுத்தப்படும் ஊசிமுனை குச்சிகள்
 
30
 

ஏற்கும் உடலுறவு*
 
50
 

செருகும் ஆசனவாய் வழி உடலுறவு*
 
6.5
 

ஏற்கும் ஆண்குறி-யோனி உடலுறவு*
 
10
 


செருகும் ஆண்குறி-யோனி உடலுறவு*
 
5
 

ஏற்கும் வாய்வழி உடலுறவு*§
 
1
 

செருகும் வாய்வழி உடலுறவு*§
 
0.

 ஆணுறை பயன்படுத்தாத பொழுது
 §ஆணுடனான வாய்வழி உடலுறவைக் குறிக்கிறது




எச் ஐ வி நோய் பரப்பலுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுபவை உடலுறவு, நோய்த்தொற்றிய உடல் திரவங்கள், மற்றும் திசுக்களுடனான தொடர்பு, பிறப்பு சார்ந்த காலகட்டத்தில் தாயிடமிருந்து கருவுக்கோ, குழந்தைக்கோ ஏற்படுவது. நோய்த் தொற்றப்பட்டவர்களின் உமிழ்நீர், கண்ணீர் மற்றும் சிறுநீரில் எச் ஐ வி கண்டுபிடிக்கப்படும் போதிலும் இத்தகைய சுரப்பு நீர்களின் மூலம் நோய்த்தொற்றியதாக எவ்வித பதிவுகளும் இல்லை. இவற்றின்மூலம் நோயதொற்றும் அபாயம் மிக அற்பமானாதே 



உடலுறவு
 
பெரும்பாலான எச் ஐ வி நோய்த்தொற்றுக்கள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரப்பப்படுகிறது. உலகம் முழுவதும் எச் ஐ வி நோய் பரப்பலுக்கான முக்கிய காரணம் ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவினால் விளைவது.
 
உடலுறவு நிகழ்வின் போது ஆணுறை அல்லது பெண்ணுறை உபயோகிப்பது மட்டுமே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தையும் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. முறையான ஆணுறை பயன்பாடு வெவ்வேறு பாலரிடையே எச் ஐ வி நோய்த்தொற்றும் அபாயத்தை ஏறத்தாழ 80% குறைத்தாலும், ஒவ்வொரு தருணத்திலும் ஆணுறைகளை சரியாக உபயோகப்படுத்தும் போது அதிக பலன் விளைவதாகத் தற்போதைய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மரப்பால் வகை ஆணுறைகளை எண்ணெய் போன்ற வளுவளுப்பூட்டும் மசகுப்பொருள்களை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்துவதே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒரே சிறந்த தொழில்நுட்மாகும். பெட்ரோலியம் ஜெல்லி, வெண்ணெய், பன்றிக்கொழுப்பு போன்ற எண்ணெய் போன்ற வளுவளுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிப்பது மரப்பாலை கரைத்து துளைத்தன்மையுடையதாக்குமாதலால் இவற்றை உபயோகிப்பது ஏற்றதல்ல என்று ஆணுறை தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். தேவைப்பட்டால் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட வளுவளுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்கின்றனர்.
 
பாலியூரிதீன் ஆணுறைகளில் வளுவளுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
 
பெண்ணுறை ஆணுறைக்கு மாற்றாக பெண்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது பாலியூரிதீன் கொண்டு தயாரிக்கப்படுவதால் இவற்றோடு எண்ணெய் போன்ற வளுவளுப்பூட்டும் மசகுப் பொருட்களை உபயோகிக்கலாம். இவை ஆணுறைகளை விடப் பெரியதாகவும்,விரைப்பான வளையம் போன்ற வாய்பகுதியைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இணை யோனிக்குள் செருகப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
பெண்ணுறைகள் ஒரு உள் வளையத்தைப் பெற்றிருக்கின்றன. இவ்வளையம் யோனிக்குள் பெண்ணுறை நழுவாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. இவ்வளையத்தை அழுத்தும்போது பெண்ணுறை யோனிக்குள் செருகக் கூடியதாய் இருக்கிறது. இருப்பினும் தற்சமயம் பெண்ணுறைகள் கிடைப்பதர்க்கரியதாகவும், விலை உயர்ந்ததாகவும், இருக்கின்றன.
 
முதல்நிலை ஆய்வுகள் பெண்ணுறைகள் போதிய அளவில் இருக்கும் பொழுது, ஒட்டுமொத்த பாதுகாப்பான உடலுறவு நிகழ்வுகள், பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது அதிகமாகின்றன. இது பெண்ணுறையை முக்கியமான எயிட்ஸ் தடுப்பு யுத்தியாக்குகிறது.
 
இருவரில் ஒருவரை இந்நோய் தாக்கியிருக்கும் பட்சத்தில், விடாது ஆணுறை உபயோகிக்கும் பொழுது, நோய்த்தாக்கம் இல்லாதவரை இந்நோய்த் தொற்றும் வாய்ப்பு வருடம் 1 % கீழ் என கணவன்-மனைவி களிடம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய்த்தடுப்பு யுத்திகள் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச் ஐ வி/எயிட்ஸ் பற்றிய அறிவைப் பெற்றிருக்கும் போதிலும், தாங்கள் எச் ஐ வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர் என ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் நோய்பரவல் மற்றும் நடத்தை பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கன்றன.
 
ஆண் விருத்தசேதனம் ஈரின மனிதர்களிடையே எச் ஐ வி நோய்த்தொற்று அபாயத்தை 60 % குறைக்கின்றன என சுற்று மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் போக்கு கணக்கற்ற நடைமுறை, கலாச்சார மற்றும் கருத்து சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்குமென்றாலும் இது பல நாடுகளில் உத்வேகத்துடன் பரிந்துரைக்கப்ப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் தங்கள் சேதப்படத்தக்க தன்மையை உணராது பாதுகாபற்ற உடலுறவு நடவடிக்கைகளில் இறங்குவது விருத்தசேதனம் செய்ததால் கிடைக்கப்பெற்ற தற்காப்பை இல்லாததாக்கிவிடும் என சில வல்லுனர்கள் கருதுகின்றனர்.எனினும் ஒரு சுற்றுமாதிரி கட்டுபடுத்தப்பட்ட சோதனை வயது வந்த ஆண்களின் விருத்தசேதனமானது எச் ஐ வி அபாயத்தை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல என்று கூறுகிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #12 on: May 04, 2012, 02:37:11 AM »
நோய்பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு
 
நல ஊழியர்கள் கிருமி பாதித்த இரத்தத்துடனான தொடர்பைக் குறைக்க எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எச் ஐ வி க்கு அவர்கள் ஆளாவதைத் தடுக்கவல்லது.கையுறைகள், முகமூடிகள், பாதுகாப்புக் கண் அணிகள் மற்றும் மூடிகள், அங்கிகள் அல்லது மேலாடைகள் போன்றவை தோல் அல்லது படர்சவ்வுப் படலத்திற்கு இரத்தத்தின் நோய்க்காரணிகளுடனான நேரடி தொடர்பை ரத்து செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும். கிருமிபாதித்த இரத்தத்துடனோ அல்லது உடல் திரவங்களுடனோ ஏற்பட்ட தொடர்புக்குப் பின்னர் தோலை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் நோய்த்தொற்று நிகழும் வாய்ப்பைக் குறைக்கவல்லது. இறுதியாக ஊசிகள், அறுவை கிழி கத்திகள், கண்ணாடிகள் போன்றவைகளை, கிருமிபாதித்தவைகளால் ஏற்படும் ஊசிகுத்து காயங்கள் நிகழாவண்ணம் கவனமாக நீக்கி விடுதல் அவசியமானதாகும். எச் ஐ வி நோய்ப்பரவல் பெரும்பாலும் சிரை வழி மருந்து செலுத்துவதன் மூலம் ஏற்படுவதால் வளர்ந்த நாடுகளில் நடத்தப்பெறும், தீங்கு குறைப்பு யுத்திகளான, ஊசி பரிமாற்ற நிகழ்ச்சி போன்றவை தவறான மருந்து பிரயோகத்தினால் விளையும் நோய்த்தொற்றைக் குறைக்க உதவுகின்றன.
 
தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல்(MTCT)
 
ஏற்றுக்கொள்ளத்தக்க, எளிதாகப் பெற்றுக்கொள்ளவல்ல, நிலையான மற்றும் பாதுகாப்பான. மாற்று உணவு இருப்பின் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் சிசுவிற்குத் தாய்ப்பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டுமென தற்போதைய பரிந்துரைகள் அறிவிக்கின்றன. எனினும் அவ்வாறியலாத பட்சத்தில் குழந்தையின் ஆரம்ப கால மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் கொடுப்பதும் பின்னர் முடிந்தவரை விரைவாக அதனை நிறுத்திவிடுதலும் சிறந்தது.[86] தங்களது சொந்த குழந்தைகளல்லாத அந்நிய குழந்தைகளுக்கும் பெண்கள் பாலூட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது; பார்க்க செவிலித்தாய்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #13 on: May 04, 2012, 02:41:34 AM »
சிகிச்சை



அபாகாவிர் – தலைகீஷ் மரபணு மாற்ற எதிர்வினைப்பொருளின் நியுகிளியோசைட் ஒத்த அமைப்பு செயலி (NARTI or NRTI)


எச் ஐ வி அல்லது எயிட்ஸுக்கான தடுப்பூசியோ அல்லது தீர்வோ தற்சமயம் இல்லை. வைரஸுடனானத் தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும் அது இயலாத பட்சத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புக்குப் பின்னர் தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)என்றழைக்கப்படும் ரெட்ரோவைரல் எதிர்மருந்து சிகிச்சைக்கு உட்படுவதன் மூலமுமே இந்நோயைப் பரப்புதலைக் கட்டுப்படுத்த முடியும். தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு(பி இ பி)க்கு மிக அத்தியாவசியமான நான்கு வார வைத்திய கால அட்டவணை உள்ளது. விரும்பத்தகாத பக்க விளைவுகளான வயிற்றுப்போக்கு, தேக அசௌகரியம், வாந்தி எடுக்கவேண்டுமென்ற உணர்வு மற்றும் களைப்பு ஆகியனவற்றை இது ஏற்படுத்தவல்லது




அபாகாவிர் இன் வேதியியல் அமைப்பு


வைரசுக்கெதிரான சிகிச்சை
 
எச் ஐ வி நோய்க்கான தற்போதைய வைத்தியம் அதி தீவிர ரெட்ரோ வைரல் எதிர்மருந்து அல்லது HAART ஐக் கொண்டது.[88] புரத நொதி வினைத் தடுப்புப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட HAART இன் 1996 ஆம் ஆண்டு அறிமுகத்திற்குப் பிறகு, இது பல எச் ஐ வி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்மை விளைவித்துள்ளது.[11] தற்போதைய அனுகூலமான HAART தேர்வுகள் குறைந்தது மூன்று மருந்துகளை உள்ளடக்கிய, இரண்டு வித ரெட்ரோ வைரல் எதிர்மருந்துகளின் சேர்வுகளைக் கொண்டிருக்கும். இது காக்டெயில்கள் (கலப்பு பானங்கள்)என்று குறிக்கப்படுகிறது.பிரத்தியேக மருத்துவ நியமங்கள், இரு நியுக்ளியோசைடு ஒத்தஅமைப்புச்செயலி தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையும் (NARTI ஸ் அல்லது NRTI ஸ்) மற்றும் புரத நொதி எதிர்வினைப் பொருட்களையோ அல்லது நியுக்ளியோசைடு அல்லாத தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையோ கொண்டிருக்கும். எச் ஐ வி நோயின் வளர்ச்சிப் போக்கு வயது வந்தவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதாலும்,குறிப்பாக இளம் சிசுக்களுக்கு ஆய்வக சோதனைக் குறியீடுகள் நம்பத்தகுந்தவையாயில்லாததாலும், சிகிச்சை பரிந்துரைகள் வயதுக்கு வந்தவர்களை விட குழந்தைகளுக்கு மிக வன்மையாக உள்ளன.[89] HAART மருந்து இருப்பில் இருக்கும் வளர்ந்த நாடுகளில்,நச்சுயிரி சுமை, CD 4 இன் சரிவு, மற்றும் நோயாளியின் ஆயத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தொடக்க சிகிச்சையைப் பரிந்துரைக்கின்றனர்.
 
HAART இன் முக்கிய குறிக்கோள் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, நோய் சிக்கல்களைக் குறைப்பது இரத்தத்தின் எச் ஐ வி அளவை கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் குறைப்பது. ஆனால் இது எச் ஐ வி யை குணமாக்கவோ சிகிச்சையை நிறுத்தியவுடன் இரத்தத்தில்ஹார்ட் எதிர்ப்பு சக்தியுள்ள எச் ஐ வி அளவு அதிகமாவதைத் தடுக்கவோ இயலாததாய் இருக்கிறது.[91][92] மேலும் HAART இனை பயன்படுத்தி எச் ஐ வி யிலிருந்து விடுபடுவதற்கு ஒருவருக்கு அவரது வாழ்நாள் காலமே போதுவதில்லை.[93] இருந்தும், பல எச் ஐ வி நோயாளிகள் தங்கள் பொதுவான உடல்நலத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து எச் ஐ வி யின் இறப்பு விகிதமும், நோயுற்ற விகிதமும் சரிவதற்குக் காரணமாயிருந்திருக்கின்றனர்.[94][95][96] HAART இல்லாத பொழுது எச் ஐ வி நோய்த்தாக்கம் எயிட்ஸ் ஆக வளர்ச்சியடைவதற்கு ஒன்பது முதல் பத்து வருடங்கள் கால இடைநிலையும் எயிட்ஸ் ஆக மாறியபிறகு உயிர் வாழும் காலத்திற்குரிய கால இடைநிலை 9.2 மாதங்களேயாகவும் இருக்கிறது.[32] HAART உயிர்வாழும் கால இடைநிலையை 4 முதல் 12 வருடங்கள் அதிகப்படுத்தும் என எண்ணப்படுகிறது
 
ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளில் HAART அனுகூலமான பலனை அளிப்பதில்லை. காரணம் மருந்துகளின் ஒவ்வாமை, பக்கவிளைவுகள், முந்தைய பலனற்ற ரெட்ரோ வைரல் எதிர்மருந்து சிகிச்சை, மருந்து எதிர்ப்பு சக்தியுடைய எச் ஐ வி மாதிரிகள் போன்றவை. சிகிச்சை பின்பற்றாமை, மற்றும் சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் போன்றவைகளே HAART சில மக்களில் பலனளிக்காமல் இருப்பதற்கு காரணம்.[99] சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் மற்றும் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்கள் பலவாகும். மருத்துவ வசதியின்மை, சமூக உதவியின்மை, மனநல வியாதி மற்றும் போதை பழக்கம் போன்றவையே சமூக நல பிரச்சினைகள் ஆகும். அதிக எண்ணிக்கையில் மாத்திரைகள் அடிக்கடி சாப்பிட வேண்டியிருப்பதால் HAART நியமம் சிக்கலானதாகவும் பின்பற்றுவதற்கு கடினமானதாகவும் இருக்கிறது.[கொழுப்புத் திசு இறப்பு இரத்தத்தின் கொழுப்படர்த்தியில் ஏற்படும் மாறுபாடு, வயிற்றுப்போக்கு, இன்சுலின் எதிர்ப்பு இதய மற்றும் இரத்தக் குழாய் அபாயம், பிறப்புக் குறைபாடுகள் போன்ற பக்க விளைவுகளும் HAART ஐ பின்பற்றுவதில் சிரமத்தை விளைவிக்கின்றன.[ரெட்ரோ வைரஸ் எதிர் மருந்து விலையுயர்ந்ததாகவும் இருப்பதால் உலகத்தின் பெருவாரியான நோய் தோற்றிய மக்களுக்கு இவை கிடைப்பதில்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எய்ட்சு
« Reply #14 on: May 04, 2012, 02:44:48 AM »
ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள்
 
தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி-1 தடுப்பூசி தயாரிப்பதற்கு கடினமான இலக்காகவே இருக்கிறது.
 
தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும். சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல் எச் ஐ வி நோயத்தாக்கிய அல்லது எயிட்ஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் என்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் அழற்சி A மற்றும் B க்கான (ஹெபடிடிஸ் A & B) நச்சுயிரிகளினால் தொற்றப்படாதவர்களுக்கு, தொற்றும் அபாயத்தைக் குறைக்க இந்நோய்களுக்கான தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.[105] குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு அடக்குதலைப் பெற்றவர்கலுக்கு, நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் ஏற்படும் நிமோனியா, டாக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் கிரிப்டோகாக்கஸ் மெனிஞ்சைடிஸ் போன்ற நோய்களுக்கும் நோய்க்கட்டுப்பாடு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.[87]
 
gp120 எனும் CD4 பிணையும் இடத்துக்கான புரதத்தை அளிக்கவல்ல ஒரு எதிர்க்காரணி நொதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து எச் ஐ வி மாதிரிகளுக்கும் பொதுவான இப்புரதம் B நிண செல்களும் இணையும் இடமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை விட்டுவிடுகிறது.[106]
 
ஜெர்மனியின் பெர்லினில் பத்து வருடங்களுக்கு மேலாக எச் ஐ வி நோய்தொற்றறினால் அவதிப்பட்டு வந்த ஒரு 42 வயதான இரத்தப்புற்று நோயாளிக்கு CCR5 செல் மேற்பரப்பு ஏற்புணர்வியின் அசாதாரண இயற்கை மாதிரியைக் கொண்ட செல்களாலான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. INTHACCR5-Δ32 மாதிரியானது தன்னை இயல்பாகக் பெற்றிருக்கும் மக்களின் சில அணுக்களை, குறிப்பிட்ட வகை எச் ஐ வி கிருமிகளுக்கான எதிர்ப்பு சக்தி உடையவையக்குகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் அந்த நோயாளி ரெட்ரோ வைரல் எதிர்மருந்து உட்கொள்ளுவதை நிறுத்திய பின்னரும் அவரது இரத்தத்தில் எச் ஐ வி நோய்க் கிருமி காணப்படவில்லை