FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 27, 2012, 10:09:05 AM

Title: கயவர்களால் தானோ ??
Post by: aasaiajiith on August 27, 2012, 10:09:05 AM
தீதென்பார் உன்னை, தீதிர்க்கே தீதானவர்

தீதென்று எனைக்கூற, காரணம் யாதென்பாய் ?

தீதனே தான் நீ  என்று முத்திரையிடுவார்

மிகப்பெரியவர் போல் முகத்திரை அணிந்த

மகாபுருஷ ஆதிமடையர்கள்

கடவுள் அவன் ,கல்லாய் போனது - மனம்

கல்லாய் போன இக்கயவர்களால் தானோ ??


   கயவர்களால் தானோ ??