Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 32180 times)

Offline Evil

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #60 on: June 25, 2020, 08:05:04 AM »
இளங்கோவடிகளுக்கு கண்ணகியின் கதையை கூறியவர் யார்?
 
சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் .

 இளங்கோவடிகள் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவர்  அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் .

அடுத்து.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் யார் ?
« Last Edit: June 25, 2020, 08:15:20 AM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4579
  • Total likes: 5301
  • Total likes: 5301
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #61 on: June 30, 2020, 06:44:17 AM »
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் யார் ?

விடை: பாரதியார்

விளக்கம்:

ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம், கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.



இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது. சோழ நாட்டில் பிறந்து, பாண்டிய  நாட்டில் வளர்ந்து சேர நாட்டில் முடியும் சிறந்த காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூல் இன்பத்தை நுகர்ந்தவர்களில் மகாகவி பாரதி தலை சிறந்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியார்  நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று சிலப்பதிகாரத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார்.

அடுத்து : தஞ்சைப் பெருவுடையார் கோவில் எப்பொழுது கட்டி முடிக்கப்பட்டது?


Offline CheetaH AdhitYa

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #62 on: July 02, 2020, 12:44:21 AM »
தஞ்சைப் பெருவுடையார் கோவில் எப்பொழுது கட்டி முடிக்கப்பட்டது?

தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது
தஞ்சைப் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் கோவில்)
 கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.


புதியது-கம்பராமாயணம் எத்தனை காண்டங்களையும், படலங்களையும்,பாடல்களையும் கொண்டவை?
« Last Edit: July 02, 2020, 07:02:01 PM by CheetaH AdhitYa »

Offline Tejasvi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #63 on: June 29, 2022, 12:15:48 PM »


கம்பராமாயணம் எத்தனை காண்டங்களையும், படலங்களையும்,பாடல்களையும் கொண்டவை?

கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும்,

    பாலகாண்டம்
    அயோத்தியா காண்டம்
    ஆரண்ய காண்டம்
    கிட்கிந்தா காண்டம்
    சுந்தர காண்டம்
    யுத்த காண்டம்

இந்த ஆறு காண்டங்களில் 123 படலங்களும், 10,500 பாடல்களும் உள்ளன.

Next : முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?



Offline Madhurangi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #64 on: August 01, 2023, 02:22:42 PM »
Ans - சாத்தனார்

Next Question- கடையெழு வள்ளல்கள் பெயர்கள்?

Offline Vethanisha

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #65 on: March 18, 2024, 12:31:51 PM »
பேகன்,
பாரி,
காரி,
ஓரி,
அதியமான்,
ஆய்,
நல்லி

ஆகியோர் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுகின்றனர். இம்மன்னர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை அந்த காலத்தில் ஆண்டவர்கள்

கேள்வி : கடையெழு வள்ளல்கள் பற்றி கூறும் நூல் எது?


Offline Thooriga

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #66 on: January 27, 2025, 02:19:34 PM »
பேகன்,
பாரி,
காரி,
ஓரி,
அதியமான்,
ஆய்,
நல்லி


இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்கள் கூறு கின்றன்



Offline RajKumar

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #67 on: February 26, 2025, 03:33:45 PM »
புறநானூறு





அடுத்து   
🪷குதிரைகளை பரிசாக வழங்கிய வள்ளல் யார்?🪷

Offline Vethanisha

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #68 on: March 07, 2025, 11:11:07 AM »
காரி மன்னர்

கடையேழு வல்லர்கள் யாவர் , சிறப்பு என்ன ?
« Last Edit: March 11, 2025, 01:11:36 PM by Vethanisha »

Offline RajKumar

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #69 on: March 07, 2025, 03:27:41 PM »
கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுபவர்கள் பாரி, பேகன், காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகியோரே. இவர்களது கொடைத்தன்மையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுமே இவர்களை சிறப்புறச் செய்கின்றன.
பாரி:
இவர் முல்லைக்குத் தேர் அளித்த வள்ளல் எனப் போற்றப்படுகிறார்.
பேகன்:
இவர் யானை மீது செல்லும் பழக்கம் கொண்டவர். மயில் போர்த்திக்கொள்ளாது என்பதை தெரிந்தும் தன் போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டான்.
காரி:
இவர் திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர்.
ஓரி:
இவர் கொல்லிமலையை ஆண்டவர். தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன்.
அதியமான்:
இவர் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் உதவி செய்தவர்.
ஆய்:
இவர் பெண் யானைகளை வாகனமாகப் பயன் படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தவர்.
நல்லி:
இவர் தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.


அடுத்து
🪷 கடையெழு வள்ளல்கள் ஆட்சி செய்த பகுதி எது? 🪷

Online Jithika

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #70 on: March 11, 2025, 11:25:10 AM »
காரி கடையெழு வள்ளல்களுள் திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர்.



🌹 கம்பராமாயணம் எந்தச் சமயத்தைச் சார்ந்தது🌹

Offline KS Saravanan

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #71 on: March 11, 2025, 11:44:19 AM »
கம்பராமாயணம் சனாதன தர்மம் (இந்து சமயம், பௌத்தம், சமணம், சீக்கியம்) இந்த சமயங்களை சார்ந்தது 

சோழர் காலத்தில் தோன்றிய காப்பியங்கள் யாவை?

Offline Vethanisha

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #72 on: March 11, 2025, 01:18:47 PM »
குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியவை சோழ காலத்தில்  புகழ் பெற்ற காப்பியங்கள் ஆகும்

சீவக சிந்தாமணி காப்பியத்தை இயற்றியவர் யார்

Offline Thooriga

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #73 on: March 11, 2025, 01:56:57 PM »
திருத்தக்கதேவர்



தமிழ் இலக்கியத்தின் தந்தை யார்?

Offline RajKumar

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #74 on: March 11, 2025, 01:57:02 PM »
திருத்தக்க தேவர்




அடுத்து
🪷சீவக சிந்தாமணியின் வேறு பெயர் என்ன?🪷