தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 340

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 340

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Glarina:
அழகிய மாலை பொழுதில், அவள் கண்களை பறித்த தருணம்.....என்னவன் கைகளில் பொதிய பணம் இல்லாத நேரம்....அதை புரிந்து கொண்டவளாய் முகத்தில் புன்னகையோடு நகர்கிறாள் ...

அவள் விரும்பிய பொருளை வாங்கி கொடுக்க இயலாதவனாய் ..
மனதில் சண்ஜலத்துடன நாட்கள் கடந்தது.....
அதிக பாசம் கொண்டவனாய் பணம் சேமிக்க தொடங்கினான் ....
என்னவளுக்காக உழைத்தால் நாட்கள்
வேகமாக நகர்ந்தது...

 அவள் விரும்பிய பொருளை...மனது நிறைந்த காதலோடும்...
சந்தோசத்தோடும்
அதை வாங்கிய வண்ணம் ....
என்னவளின் அருகே சென்றான் ......
அவள் கண்களை தன் கரத்தால் மறைத்த வண்ணம் ....உனக்கு ஒன்று வாங்கி வந்தேன் என கூற ....என்னவள் முகம் நிறைந்த புன்னகையோடு  என்னவாக இருக்கும் ...என்று மிகுந்த ஆசையோடும் வாங்கி பார்த்த நேரம் ....என்னவன் தன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதை உணர்ந்தவளாய் ...
கண்களில் ...நீர் நிரம்பியவளாய்  , என்னவனின் அன்புக்கு சொந்தகாரி தான் மட்டுமே என்று பெருமை கொண்டாள் ......விலைமதிக்க முடியாத அன்பை பெற்றவளாய் தன் என்னவனை கட்டி அனைத்து கொண்டாள்

Lakshya:
❤️அழகியே!!!❤️
நூறு கோடி ஆண்கள் இருந்தும் அவர்கள் மத்தியில் உன் மனதில் இருப்பது" நான்" மட்டுமே என்பதை நினைக்கையில் என் இதயம் என்னிடம் இல்லை என்பதை நீ அறிவாயா??

❤️என் காதல் கண்மணியே!!❤️
என்னிடம் பணம், காசு குறைவாக இருந்தாலும் என் அன்பு அனைத்திற்கும் அரசி நீ மட்டுமே என்பதில் சந்தேகம் இல்லை...

என் மனநிலை என்னவென்று அறிந்து அதன்படி செயல் படும் நீ, எதற்காக உன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து சகித்துக் சென்றாய்...இதுவே நீ எனக்கு அளிக்கும் முதல் பரிசாக நான் கருதுகிறேன்...சமயங்களில்  உன்னிடம்  சண்டையிட்டு உன்னை காயப்படுத்தியது என் தவறே...காதல் ஒ‌ன்றை தவிர, உனக்கு பரிசளிக்க என்னிடம் ஏதும் இல்லை கண்மணியே...

❤️கணவனே!!!❤️
அழுகை, கோவம், சண்டை இதில் ஏதுவாக இருந்தாலும் அது உன்னை காயப்படுத்தி விடும் என்று நான் மறைத்து வைத்திருந்த உணர்ச்சிகள்...அதிக அன்பை வெளிப்படுத்தி மயக்கும் அன்பே...உன்னிடம் பரிசு எதிர்பார்ப்பது செரியா???

அதிக பாசத்தை விட அதிக புரிதலை உன்னிடம் நேசிக்கிறேன் நான்..உன்னால் என் மனம் வேதனை பட்டாலும் உன்னை பார்கும் நொடி என் மனம் உன்னை கட்டி அணைக்க எண்ணுகிறது ஏனோ?

❤️கண்ணாளனே❤️
விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாம்,பரிசு வே‌ண்டா‌ம் உன் கை பிடித்து நீ அழைக்கும் இடமெல்லாம் வருவேன் உன்னை நம்பி...உன்னோடு இருப்பதே கடவுள் அளித்த பரிசாக எண்ணுகிறேன்...கண்ணில் இருந்து கையை எடுங்கள்...குழந்தை எழுந்து விட்டாள் ❤️

KS Saravanan:
காதல் பரிசு..!

அன்பு மழை பொழியும் அன்பானவளே
என்னை மணம் கொண்ட மணவாட்டியே ..!
கைகோர்த்த நாள் முதல் இன்றுவரை
நீ கேட்கவில்லை முதல் பரிசு..!
வலியை யாரிடமும் சொல்லாமல் 
கண்ணீரோடு நினைவுகளை சுமந்து
நம் காதலை மீட்டது தான்
நீ எனக்கு தந்த காதல் பரிசு..!
கேட்காமல் கொடுக்கும் வல்லமை
இருந்திடவில்லை என் சிரசில்.!
வல்லமை தாராயோ எனதன்பே
உனை கேட்காமல் எது வேண்டுமென அறிய ..!

விடை தேடி விழி மூடி
நினைவலையில் செல்கிறேன்
நீ விரும்பியவை யாவென
திரும்பி பார்க்க நினைக்கிறேன்..!
கேட்டவை எல்லாம் எனக்காக கேட்கிராய்
வாங்கியவையெல்லாம் எனக்காக வாங்கினாய்..!
சுயநலம் இல்ல பேரன்பே
புதியதாய் பூக்கும் அத்தனை பூக்களும் நீதானடி..!
பூவின் இதழ்களாக நீயிருக்க
வாசமாக நானிருக்கலாமா..?
இதயத்தை ஆட்கொண்ட கள்வியே
போரிட மனமில்லை மீட்டெடுக்க..
தெரிந்துமே மீண்டும் தோற்கிறேன்
மீட்டெடுக்க முடியாமல்..!

எதை கொடுத்து அன்பே உன்னை வெல்ல..?
அன்பை வெல்ல ஆயுதம் உண்டோ..?
தென்றலாய் தாழம்பூ மணம் வீச
சாரலாய் மழை பொழிய
பின்னலாய் நம் விரல்களை கோர்த்து
மயில்தோகையாய் குடை விரித்து
ஊடுறும் மழைநீரில் நாம் நனைந்து
மணல்வெளியில் நடப்போமடி
வெண்பனி நிலவினை காண்போமடி
ராமன் தேடிய சீதையாய் நீயிருக்க
சீதைக்கேத்த ராமனாய் நானிருப்பதே
உனக்கான பரிசு என்பேன்..!

TiNu:


ஒருவர் மீதான அன்பை பொழிய
ஆயிரம் ஆயிரம் வழிகள் உண்டு
ஆயிரம் வழிகளில் ஒன்றே பரிசு..

தமிழ் மீது கொண்ட காதலால்..
அதியமான் அவ்வைக்கு கொடுத்த
நெல்லி கனியும் ஓர் பரிசே..

மகாபாரத பஞ்சபாண்டவர்கள்
தன் மனைவிக்கு கொடுத்த
துருயோதனின் குருதியும் ஓர் பரிசே..

நடப்பு மீது கொண்ட காதலால்
கண்ணனுக்கு குசேலன் கொடுத்த
கைப்பிடி அவலும் ஓர் பரிசே..

தவ வலிமையின் மீது கொண்ட ஆணவத்தால்..
விஷ்வாமித்திரர் திரிலோகனுக்கு கொடுத்த.
திடீர் ஸ்வர்க்கமும் ஓர் பரிசே...

தன் வாழ்நாள்.. அனுபவ சாதனையால்..   
ஓர் தந்தை தன் மகனுக்கு கொடுக்கும்
அணுகுமுறை அனுபவ அறமும் ஓர் பரிசே.. (அறம் - தர்மம்,கடமை)

கடவுளின் பிரதிநியாக பூமியில் வாழும்..
ஓர் அன்னை தன் மகளுக்கு கொடுக்கும்..
உயிர்களை அரவணைக்கும் தாற்பரியமும் ஓர் பரிசே.  (தாற்பரியம் - நோக்கம்)

குருவுக்கும் மாணவனின் பரிசு - நற்பெயர்..
தொழிலாளிக்கு முதலாளியின் பரிசு.-. சன்மானம்..
உழவனுக்கு பூமியின் பரிசு.. - மகசூல்..

பரிசு,
தானத்திலும் அடங்காது.. உதவியிலும்.. சேராது...
அது.. கொடுப்பவர் பெறுபவர் மீதான
அளவு கடந்த அன்பின் வெளிப்பாடே..

உலகின் உயரிய பரிசு யாதென்று அறிவீரோ...
அன்பு கணவனே..  மனைவியின் பரிசு.....
காதல் மனைவியே..   அவனின் ஆசை.. பரிசு...

நாளைய உலகை எதிர்பார்ப்புகளோடு காண துடிக்கும்..
பால்மணம் மாற சின்னசிறு மழலைகளுக்கு.. அவர்களின்
அன்போடு வாழும் பெற்றோர்களே மாபெரும் பரிசு...



Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version