கண்டிப்பா கெடுக்குதுன்னு தான் சொல்லுவேன்
ஸ்ருதி & ரோஸ் நீங்கள் கூறியது போல் சினிமா மட்டும் காரணம் அல்லாமல் இருக்கலாம் , ஆனால் சினிமா தான் முக்கிய காரணம் என்று நான் சொல்கிறேன்.
நீங்கள் மற்ற காரணங்கள் என்னவென்று கூறினால் விவாதிக்கலாம்
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
ipdi solravangathan athikama film paarpaangalam ;) :D ;D :D ;D
selvan unga karuthukkal nanru....10 per antha filma paartha athula 4 peru kettu porangana micham 6 peru kedamathane irukaanga... appo thiraipadam avangalla thaakkatha undu panalya?... ethayum paarkur konathula iruku....
irunthaalum unga klaruthukal erkka kodiyavayagave irukirathu ... ;D
இன்றைய இளைஞர்கள் "சினிமாவால் மட்டுமே கெட்டு போகிறார்கள் "என்று என் கருத்தை சொல்லி இருந்தால் மட்டுமே இது சரி.)
நான் ஒன்று கேட்கிறேன்,
இப்போ இங்கே யூசுப், ரெமோ,செல்வன், நான் தமிழன், ரோஸ், சாரு எல்லோரும் படம் பார்க்கிறவர்கள் தான். இதில் யாராவது படத்தை பார்த்து சீரழிந்தவர்கள் இருக்கிறீர்களா? இல்லை என்றே நினைக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இப்போது வரும் படஙளில் 10ல் 1 படம் தான் நீங்கள் கூறுவது போல ஆபாச நடனங்களும் ஆபாசக் காட்சிகளும் நிறைந்த படமாக இருக்கும்.
இதில் இருந்து மோசமான படங்களை பார்ப்பதை மக்கள் விரும்பவில்லை என்று புரியவில்லயா?
மற்றது, இந்த சினிமாவால் இன்னும் பல நன்மைகள் நடக்கின்றன. படத்தில் நடிக்கும் நடிகர்களின் ரசிகர் மன்றங்களால் ரத்ததான முகாம்கள் நடத்தப்படுகின்றன. நிறைய ரசிகர்கள் ரத்ததானம் செய்கிறார்கள். இது சீரழிவா?
ரசிகர் மன்றங்களல் கிராமங்களில் சிரமதான வேலைகள் நடாத்தப்படுகின்றன.இது நல்ல விசயம் தானே.
ரெமோ, நீங்கள் சொல்வது போல கதாநாயகன் சண்டை போடுவது யாரோடு? கெட்டவர்களோடு தானே. கெட்டவர்களை எதிர்க்க வேண்டும் என்பதை தானே அது உணர்த்துகிறது.
படமே பார்க்காம அது சரி இல்லை அதால இளைஞர்கள் கெட்டுப் போராங்க என்று எப்படி சொல்லுறீங்க யூசுப்?
முதலில் உங்களுக்கு இந்த விவாதத்துல பங்கேற்கும் அடிப்படை தகுதியே இல்ல.ஒன்றை பார்க்காமல் அனுபவிக்காமல் அது சரியில்லை என்று எப்படி உங்களால சொல்ல முடியும்?
1) தெய்வத்திருமகன்
2) இப்போதும் எப்போதும்
3) 7ம் அறிவு
4) 3 இடியட்ஸ்
5) வாகை சூட வா
6) சதுரங்கம்
8)பேராண்மை
9)சிங்கம்
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம்" குழந்தைகளிடம் ஏதாவது சினிமாப் பாடலை பாடச் சொல்லி வேடிக்கை பார்த்து மகிழும் அவநிலைக்கு காரணம் நிச்சயமாக டி.வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம்தான். அவர்கள் பார்க்கும் போலிக்காட்சிகளை அவர்களது நடைமுறையிலும் செயல்படுத்துவதை பார்க்கிறோம்.
"இந்திரா" என்ற தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் காய்கறி நறுக்கும் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!.." என்று தொலைக்காட்சியின் விபரீதத்தை வர்ணிக்கிறார்.
(நன்றி : குமுதம்
பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் திரைப்படங்கள் விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் திரைப்படங்களில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.
அப்படி என்றால் நம் சகோதரிகளுக்கு ஒரு நியாயம் மற்ற பெண்களுக்கு ஒரு நியாயமா?
இதுதான் நீங்கள் கூறும் பொழுதுபோக்கா?
இதே போன்று நமது சகோதரிகளை மற்றவன் பொழுதுபோக்கிற்காக பார்கிறேன் என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?
இன்றைய இளைஞர்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த செயலாக செய்வதற்கு காரணம் என்ன இதை யாரை பார்த்து பெரும்பான்மையான இளைஞர்கள் கற்றுகொண்டார்கள் இந்த சினிமா தானே காரணம்?
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது
Remo
cinema-vum oru Kaaranam endru than sollalam...
cinema matume kaaranam illai enbathu enoda karuthu
கெட்டுப் போகணும் என்று நினைத்துவிட்டால் அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.Quoteசினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே
கெட்டுப் போகணும் என்று நினைத்துவிட்டால் அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்காக இருக்கணுமே தவிர அதையே வாழ்க்கையாகக் கொண்டு போகக் கூடாது..
எந்த சினிமாக்காரனும் என் சினிமாவை பார்த்து கெட்டு போ என்றும் இதுல இருப்பது தான் நிஜம் இதையே பின்பற்றுங்க என்று சொல்லலியே
இன்றைய இளைய சமுதாயம் கெட்டு போவதற்கு சினிமாவும் ஒரு காரணம் தான்..
வன்முறை காட்சிகளை பார்த்து, கொள்ளை அடிக்கும் காட்சிகளை பார்த்து. குற்றம் செய்தேன் என்று சொன்னா எத்தனையோ படிப்பு அறிவு இல்லாத குற்றவாளிகளை உருவாக்கி தந்த இன்றைய சினிமா போற்ற பட வேண்டியதா???
முத்த காட்சி என்றால் அபோது எல்லாம் கிளிகளும் பூக்களும் தான் காண்பிபாங்க... இப்பொது குடும்பத்தோடு படம் பார்க்க சென்றால் நாயகன் நாயகி வரும் காட்சிகளில் எப்போது என்ன நடக்கும்னு தெரியாம தான் படம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கோம்...
எல்லா மக்களிடமும் நல்ல மனமாற்றம் வந்ததை சொல்வதை வாதமாக கொண்டால்...கிராமப்புறத்து மக்களுக்கு இன்றைய படங்கள் ஆன ரோபோ, ஹேராம் இவைகள் எல்லாம் புரிய வாய்ப்பே இல்லை...
நல்ல படம் என்று உதாரண காட்டிய படங்களில் எல்லாம் மசாலா கலவை இல்லாத படம் என்று சொல்ல முடியுமா?? அன்றாட வாழ்க்கைக்கு ஒத்து வராத காட்சிகளை வைத்து படம் எடுப்பதே தவறு அதிலும் கதாநாயகன் நான்கு பேரு கூட சண்டை போட்டு அநியாயத்தை தட்டி கேட்பதால் அந்த படம் நல்லது என்று ஆகிவிடுமா??
யூசுப் உங்கள் வாதம் நன்று .... அனால் திரை பட பாடல் பாடுவதில் தவறு இருகின்றதா ? ... காலத்துக்கு ஏற்ற மாற்றம் வேண்டும் சினிமா பாடல்களை படுவதில் என்ன தவறு இருக்க முடியும் .... ?
ஏன் திரைப்படங்களில் மட்டும் தன அப்படி பார்த்து கேட்டு போகின்றார்கள...பழைய வரலாற்று நாடகங்களில் கூட மேடையில் வாழ் சண்டை போட்டார்களே ... அப்போது யாரும் கத்தியை தொக்கவில்லையா ?
இதை காட்டுவதன் மூலம் குடும்பம் என்றால் என்ன ... அது எப்படி இருக்க வேண்டும் தவறான நடத்தைகளால் ஏற்படும் தாகங்கள் என்ன என்பதை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது .... மைக் வச்சு சொல்லி பாருங்க யாருமே அதை கேட்க மாடார்கள் ...அனால் இப்படி சொனால் புரிந்து கொள்வது எளிது ....
இங்கே எதற்கு சகோதரிகளை இழுக்க வேண்டும் ...அங்கே நடிபவர்களை யாரும் கட்டாய படுத்தி நடிக்க வைக்க வில்லை அவர்கள் உடன்பட்டுத்தான் நடிகின்றார்கள் ... அவர்களை எப்டி ஒப்பிடலாம் நீங்கள் யோசுப் ...
திரைப்படம் தோன்றுவதற்கு முனரே மதுபானமும் புகயிலையும் வந்துவிட்டது .... திரைப்படங்கள்தான் உற்பத்தியாக்கி விநியோகம் செய்ததாக கூறுவர்கள் போல் இருக்கே ...
திரைப்படம் என்று ஒன்று வருவதற்கு முனரே... திருவிழாக்களில் கவர்ச்சி ஆடை அணிந்து யாரும் ஆடவில்லையா ... இல்லை 4 பெண்டிரை முகரவில்லையா .... இருந்ததைத்தான் வெளி கொண்டு வந்து அதன் விகாரத்தை எடுத்து காட்டுகிறது திரைப்படம் ....இல்லாததை கொண்டு வரவில்லை புதிதாக ஒன்றை உருவாகவும் இல்லை
இதற்க்கு காரணம் என்ன தெரியுமா ..? நம் சமுக அமைப்பு .... வெளி நாடுகளில் கற்பழிப்பு வன் முறைகள் நம் நாட்டை விட குறைவு ஏன் தெரியுமா .... அங்க எல்லாம் முத்தம் என்பது உணர்ச்சி வெளிபாடு ... எதையும் அடக்கி வைக்கும் போதுதான் அது வெளிப்படும் போது பிரளயமாகும் என்பது அவர்கள் கருத்து ..... இதுல எவளவு உண்மை இருக்கிறது என்பது நாமக்கு தெரியும் ....
பாலியல் கல்வி என்பது முக்கியம் .... அந்த அறிவில்லாமல் வரக்கூடிய பிரச்சனைகளை காடினால் அதை ஏன் நீங்கள் செக்ஸ் என்ற கோணத்தில் பார்கிறிங்க .... ஒரு அறிவு .... விலை மாது கிட்ட போறதால வர கூடிய விளைவுகளை காட்ட்வதாக எடுக்கலாமே ...
செக்ஸ் சமந்தமான கட்சிகளுக்கு அப்புறம் வரக்கூடிய கதை கருத்து என்ன என்றதையும் பார்க்கணும் .... நாம் ஒன்றும் பழைய கர்க்கலத்தில் இல்லை 21m நூடண்டில இருக்கிறம் ... அதை கருத்தில வச்சு பார்க்கலாம் .
முதல் முதல் வந்தது ஊமை படம்தான் .. அதையே புரிந்து கொண்ட அந்தகாலத்து மக்கள் .... இபோ வந்த இந்த படத்தி புரிந்து கொள்ளவில்லை என்று எப்டி சொல்றிங்க ...?
அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ...
அதை போலத்தான் திரை படமும் காலத்துக்கு ஏற்ற போல மாற்றம் வருது இங்கயும் சொல்ல படுது புகை புடிக்க கூடாது ... மது அருந்த கூடாது .etc . கருத்தில கொள்ளவில்லை ...
நீங்கள் சொல்வது விபரீதமாக உள்ளது ஏஞ்செல் இன்று இதையெல்லாம் கருத்தில் கொள்ளாதவர்கள் நாளை ஆடை அணியாமல் நடித்தாலும் தவறில்லை என்றால் அதையும் நீங்கள் தப்பில்லை என்று கூறுவீர்கள் போல. இது மிக பெரிய விபரீதமான பதில் ஏஞ்செல். ஒரு கருத்தை சொல்வதற்கும் முன் யோசித்து சொல்லுங்கள் ஏஞ்செல்.
குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம் சொல்லுங்கள்.
யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....
விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...
சும்மா விவாதத்துக்கு சமந்தம் இல்லாமல் நான் பேசுவதை நிறுத்தி விட்டு முதல் நான் சொன்ன கருத்துகளை ஊன்றி கனவித்து உணர முயற்சி செய்யுங்கள்
இபவும் சொல்கிறேன் ... சினிமா போதி மரம் இல்லை ... ஞானத்தை மட்டும் கொடுக்க .... அது பொழுது போக்கு ... அதை பொழுது போக்காக பாருங்கள்
யூசுப் மச்சி நீங்க விபரம் தெரிஞ்சி சிந்திக்க ஆரம்பிச்ச பிறகு படம் பார்க்கிறத நிறுத்திட்டதா சொல்லுறீங்க. இது உங்க வாக்குமூலம். நீங்க விபரம் தெரிகிறதுக்கு முன்னால சிந்திக்க தொடங்குறதுக்கு முன்னால படம் பார்த்து இருக்கலாம். இது நல்லதா கெட்டதா என்று விபரம் தெரியாத பருவத்தில் சரியா பிழையா என்று சிந்திக்க ஆரம்பிக்கு முன்னர் படம் பார்த்துட்டு அது சரியில்லை என்று எப்படி சொல்ல முடியும்?
விபரம் தெரிஞ்ச பின்னால சிந்திக்க ஆரம்பிச்சதில இருந்து படம் பார்க்கிறத நிறுத்திட்டிங்க. அப்புறம் எதை வைத்து சினிமா சரியில்லை என்று சொல்லுறீங்க? உங்களுக்கு விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு தான் நீங்க சினிமா பார்க்கவில்லையே.
மறுபடி நான் விபரம் தெரிந்த பிறகு, சிந்திக்க தொடங்கின பிறகு படங்கள் பார்த்துட்டு தான் பார்க்கிறதை நிறுத்தினேன் என்று சொல்லப் போறீங்க.
விபச்சாரம் என்றால் என்ன? திருட்டு என்றால் என்ன என்று தெரியாத விபரம் அறியாதவர்கள் அதை பற்றி பேசினால் அது சரிவருமா யூசுப் மச்சி?அதை பற்றி அடிப்படை அறிவு சரி வேண்டாமா அதைப் பற்றி பேச.
இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் 7ம் வகுப்பு படிக்கும் போது எனது கிளாஸ் டீச்சருடைய மகனும் எங்கள் வகுப்பில் படித்தான். டீச்சருடைய மகனிடம் ஒரு பையன் கற்ழிப்பது என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு வாத்தியாருடைய பையன் 'ரோட்டில் நாயும் நாயும் பண்ணுகிறதே அது தான் கற்பழிப்பு' என்றான்.
இப்படித்தான் இருக்கும் அடிபடை அறிவில்லாதவர்கள் பேசுவது.
இந்த அரைகுறை ஆடைகள் படத்தில் மட்டும் தானா யூசுப் மச்சி?
உங்கள் விவாதம் வேடிக்கையாய் இருக்கிறது யூசுப் மச்சி.அப்போ சினிமா இல்லா விட்டால் மது அருந்துவதும் புகை பிடிப்பதும் உலகில் இருக்காது என்று சொல்கிறீர்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள் தான்.
நாம் பாடசாலைகளில் வேண்டிய மட்டும் படித்திருக்கிறோம். எத்தனையோ புத்தகங்களில் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறோம்.இதை சினிமாவிலும் பார்கணுமா என்ன?
உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.
உங புள்ளி விபரங்களின் அடிபடையில் பார்த்தால் நம் நாட்டுல நல்ல இளைஞர்களே இருந்திருக்க மாட்டாங்க யூசுப்.
அமெரிக்கா கலாசாரம் வேற நம் கலாச்சாரம் வேற. அதை வைத்து நம் சினிமாவையும் எடை போடாதிங்க
கடைசியா ஒன்று கேட்கிறேன், நம் சினிமாக்களில் எந்த சினிமாவுல பெற்றோருக்கு முன்னால பிள்ளைகள் கிஸ் அடிக்கிறாங்க? நான் பார்த்த எந்த படத்திலும் அப்படி எதும் பார்க்கல. நீங்க யாராவது பார்த்தா எனக்கும் சொல்லுங்க பிளீஸ்
யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?
பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?
குழந்தைகள் சிறுவர்கள் என்று கூறுகின்றீர்களே ....அவர்களை திரை படத்துக்கு
அழைத்து செல்லும், பெற்றோரை முதல் குற்றம் சொல்லுங்கள்.
எஞ்சேல் உங்கள் போக்கு எப்போதும் தலைப்பை மீறியதாகவே உள்ளது. இங்கு தலைப்பு சினிமா இளைஞர்களை வழிகேடுக்கிறதா இல்லையா? என்பது தானே தவிர சிறவர்கள் தவறான வழியில் செல்வதற்கு பெற்றோர்கள் தான் காரணாமா இல்லையா? என்பது அல்ல. வேண்டுமானால் இதை தனி ஒரு தலைப்பாக நாம் விவாதிக்கலாம். அதனால் இளைஞர்கள் வழிகேடுகிரார்களா இல்லையா என்பதை பற்றி மட்டும் பேசுங்கள் எஞ்சேல்.
யோசுப் திரைப்படம் அதனோட முன்னோடி நாடகங்கள் அதைப்பற்றி சொல்லி அதை கோடிட்டு காடுவது எப்படி நான் விவாதிக்கும் கருத்தில் இருந்து மாறுபடுவதாக சொல்கின்றீர்கள் ....ஆடை குறைப்பு என்பது வருந்த தக்க விடயம் ... ஆனால் அதயும் மீறி அந்த திரை படங்களில் சொல்ல கூடிய கருத்தை நல்ல விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் என்பதுதான் நம் வாதம் .....
இங்கு நாம் திரைப்படத்தை மட்டும் தான் விவாதத்திற்கு எடுத்துள்ளோம் அதன் முன்னோடிகளை பற்றி பேச வர வில்லை எஞ்சேல். ஆகவே மீண்டும் தலைப்பை மீறி விவாதத்தை தொடர்ந்துள்ளீர்கள் எஞ்சேல்.
விவாதம் என்று வாதிக்க முன்னர் நாம் விவாதிப்பது நமக்கு எப்படி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும் ...
இதை உங்களுக்கே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் விவாதத்தின் தலைப்பை உணர்ந்து விவாதம் செயுங்கள் தலைப்பை மீறி விவாத்திப்பது விவாதத்தை திசை திருப்புவதாகும்!
இதை அவர்கள் பார்த்தால் உங்கள் மீது மான நஷ்ட்ட வழக்கு போட்டாலும் போடுவர்கள் தமிழன் கருத்து கூறுவதற்கு முன் இந்த கருத்து நாம் கூறும் நபருக்கு பொருந்துமா என்பதை சிந்தித்து கூறவேண்டும் தமிழன்.
உங்கள் விவாதங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கிறது மச்சி.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
உண்மையான பதில சொல்லுங்க.செட்லயே ஒருதன் ஒரு நேரம் தேவையில்லாத மாதிரி பேசினா ஒரு தடவை இரண்டு தடவை சிரிக்கிற ஸ்மைலிய போடுவீங்க. அப்புறம் தாங்க முடியாம போனா கோபமா ஸ்மைலிய போடுவீங்க. ஒருத்தன் உங்களுக்க்கோ உங்க வீட்டாருக்கோ அடிகடி தொந்தரவு பண்ணினா தட்டிக் கேட்பீங்களா இல்ல சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று சும்மா இருப்பீங்களா?
அப்படி சும்மா இருத்தா ஆண்மகன் என்று யாரும் மதிக்க மாட்டாங்க. இதை தான் படத்திலும் காட்டுறாங்க. ஒரு வித்தியாசம் ரசிக்கணும் என் கிறதுக்காக கொஞ்சம் மிகை படுத்தி காட்டுறாங்க. படத்தை பார்த்துட்டு யாரும் அது போல சண்டை போடுறதா நான் எங்கும் கேட்கல. அப்படி சண்டை போடுறதா இருந்தா அவங்களும் ஸ்டண்ட் மாஸ்டர கூட்டிக்கிட்டு தான் வரணும்.
இந்த பதிலை பார்க்கையில் எனக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது தமிழன். நம் சகோதரிகளுக்கு பாதுக்கப்பு கொடுக்கவோ அடிக்கடி வீட்டில் தொந்தரவு தருபவனயோ சமாளிக்க சினிமாவை பார்த்துதான் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லையே. அது நம் இயல்பில் ஊறி போன ஒன்று தமிழன். சினிமாவை பார்த்து தான் அதில் வருவதை போன்று எதிரியை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பதிலை நீங்கள் தந்திருப்பது விந்தையாக உள்ளது தமிழன்.
நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுவது நம் இயல்பில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழன். இதற்க்கு சினிமாவை ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை.
யூசுப் மச்சி சினிமா ஒரு நிழல்படம். அதில் கெடுறதை விட நேரடியா பார்க், பீச் போய் பாருங்க, எத்தனை நைட்கிளப்ஸ் இருக்கு அங்க போடத கூத்தா?
இந்த பார்க் பீச் கலச்சாரம் தோன்றியதே சினிமாவினால் தான் என்று கூறுகிறேன். உங்களால் மறுக்க முடியுமா தமிழன். நைட் கிளப்புகளை கட்டியதே சினிமா தானே. இதையும் உங்களால் மறுக்க முடியுமா.
பத்திரிகையில் எழுதுவது எல்லாம் சரியா....?
பத்திரிக்கையில் எழுதும் எல்லாம் சரி என்று ஒரு போதும் நான் சொல்லவே மாட்டேன். அனால் அது தெரிந்த நீங்கள் ஏன் 7 ம் அறிவு படத்தின் விமர்சனத்தை ஏன் பதிவு செய்தீர்கள் என்ற கேள்வி எழும்புகிறது. சரி இல்லாத ஒன்றை என் நீங்கள் பதிவு செய்தீர்கள்.
யூசுப் ஈங்கே சினிமா சீர் கெடுகிறத இல்லையா என்பதுதான் விவாதம் கருத்துகளை தவறா கூறினால் மான நஷ்ட வழக்கு போடுவார்களா மாடார்கள என்பது இல்லை.... எனவே நீங்கள் தலைப்பினை உள்வாங்கி விவாதிப்பது நன்று ... நீங்கள் விவாதத்தை திசை திருப்ப பார்கின்றீர்கள் ....
யூசுப் உங்களுக்கு வரலாற்று பதிவுகள் படித்து பழக்கம் இல்லையா ... பண்டைய மன்னர்கள் சோலை வனங்களிலும் .... கடற்கரை களிலும் சந்தித்து பேசுவதாக இருகின்றதே .. அந்த காலத்தில் அந்தபுரம் என்றும .... தேவமாதர் ( விபச்சாரிகள் ) என்றும் இருந்தது ....இப்டி எல்லாம் இருந்ததுதான் இன்று பார்க் பீச் நு மாறி இருக்கு .... அந்த காலத்தில் சினிமா இல்லையே ...
யூசுப் நீங்கள் ஏன் விவாதத்தை சரியாக படிபதில்லை
மற்றவர் கருத்துகளை உள்வாங்கி அதன் கருத்துகளை புரிந்து கொள்ளும் மனபக்குவத்தை நமக்கு கடவுள் கொடுக்கட்டும் ...!!!இதே பிராத்தனையை மீண்டும் நான் கேட்கிறேன்.
குறிப்பு :
முதலில் விவாத மேடையின் நியதிகளை அனைவரும் முழுமையாக தெரிந்து கொண்டு வாதிடுவது இந்த விவாதப்பகுதியை சிறப்பானதாக்கி வைக்கும் என்பது எனது கருத்து.கனிவான முறையில் கருத்துக்களை தெரிவிக்கும் நற்பண்பு அனைவருக்கும் கிடைக்க கடவுள் அருள் புரியவேண்டும். மேலதிகமாக விதண்டாவாதமாக செய்யப்படும்,தலைப்புக்கு சம்பந்தமில்லாத விவாதங்களின் தரத்தை தீர்மானம் செய்யும் பொறுப்பை இந்த விவாதப்பகுதிக்கு வந்து வாசிக்கும் வாசகர்கள் & விவாதம் என்றால் என்ன என்று முழுமையாக உணர்ந்த நண்பர்களிடமே ஒப்படைத்து நிறைவு செய்கிறேன்.
சபா ..... நீங்கள் சினிமாதான் உருவாகியது என்று சொனதற்கு பண்டைய காலத்தில் இருந்ததாக சொனேன் ......
அவர் கேட்டதற்கு அப்படி இல்லை என்று பதில் சொல்லி இருக்கலாமே மன நஷ்ட வழக்கு பத்தி யார் கேட்டார்கள் ...?
விவாதம் என்பது ஆதாரங்களை மையமாக கொண்டு வாதிடுவதும் தான்
எளிமையாக சினிமா கெடுகிறது கெடுக்கவில்லை ... இப்படி கூறுவதற்கு விவாத மேடை அவசியமில்லை
அது போல் தான் .... சினிமாவால் நடக்க கூடிய நடந்திருக்க கூடிய நன்மைகள் யாரும் வெளியே அதிகம் சொலவில்லை.
அது பட்டியளிடபட்டு புள்ளி விபரமாக வந்து விடும் அது நீங்கள் கையில் எடுத்து வைத்துக்கொண்டு சினிமா சீர்கேடுகின்றது செர்கேடுகின்றது என்று சொல்லியே காலத்தை ஓட்டுறீங்க ....
முதல் சினிமா என்றால் என்ன ...... அதை தெளிவு படுத்தி கொண்டு விவாதத்தில் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைகின்றேன் ....
சினிமா பார்த்து தான் கெட்டு போகணும் என்று இல்லை
சினிமாவும் ஒரு காரணமாக எடுத்து கொள்ளலாம்
ஒரு வருடத்துல வர100 படம் என்றால் அதுல வர 99 படம் கெட்டு போற போல தான் இருக்கு
படம் பார்க்க செல்வது பொழுது போக்காக மட்டுமே எடுத்துக்கணும்
அதை விட்டு அதையே வாழ்க்கைக்கு பாடமாக எடுக்க கூடாது
yah suruthiyoda karuththukala naan eettrukolkiren
யோசுப் விவாதத்தின் ஆரம்பத்தில் நான் கூறிய கருத்தி நீங்கள் உள்வாங்கி இருக்கவில்லை ..... சுருதி சொன்ன மேற்கண்ட கருத்தை நான் ஆமோதித் திருந்தேன் .... அதாவது கேட்டு போக சினிமாவும் ஒரு காரணம் என்று ....சினிமா மட்டுமே காரணம் இல்லை என்று ..
சமுதாயத்தின் மிக பெரிய பொழுது போக்கு சாதனம் இது ....
அரம்பிக்பட்ட நோக்கம் பொழுது போக்கு ..... அன்று மக்கள் அதை பொழுது போக்காக மட்டும் தான் பார்த்தார்கள் ..... இன்றும் பலர் அப்படிதான் பார்கின்றார்கள்
பகுத்தறிவு வாதியென்று பேத்தி கொள்ளும் மனிதனும் 6 அறிவு என்று சொல்லி விலங்கில் இருந்து பிரித்து மனிதன் என்று சொல்லி பெருமை படும் மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயங்களில் சிந்திக்க தவருவதானல்தான் சினிமா சீர்கேடுகள் ...
(திரைப்படத்தை பார்க்காமல் விடுவதனால் யாரும் யோகி ஆகிவிட முடியாது .... 100 பெண்கள் நிர்வாணமாக சூழ நினாலும் எவன் ஒருவன் சிந்தை பிறழாமல் இருகின்றானோ அவன்தான் யோகி.... எனவே மனோ திடம் எதிர் நீச்சல் இவைதான் நம்மை சீர்கேடில் இருந்து பாதுகாக்கும் ... அது எதுவாக இருந்தாலும் நம் மனோ திடத்தை வளர்த்து கொள்வோம்<<< இது என் கருத்து ) .
முதலில் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், நான் சீர்படுதுகிறது என்று வாதாடவில்லை என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.விவாதத்தில் அது சீரழிக்கவில்லை என வாதாடுவதன் அர்த்தம் அது சீரழிக்கவில்லை என்பது தான்.
உங்கள் அக்கா தங்கச்சி செண்டிமொண்டிலேயே ஒன்று கேட்கிறேன்.
உங்கள் முன்னால் உங்கள் சகோதரியை ஒருவன் மானபங்கப்படுத்துகிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவனை தாக்கி உங்கள் சகோதரியை காப்பாற்றுவீர்களா? இல்லை சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்று, நீ பண்ணுறத பண்ணு நான் காவல்துறையிடம் போறேன் என்று விட்டுட்டு போவீங்களா?
அடுத்தது நான் உங்களை 7ம் வகுப்பு படிக்கும் மாணவனாக நினைக்கவில்லை. நான் சொன்னது ஒரு உவமை. அதன் பொருள் உங்களுக்கு விளங்காவிடால் அது என் தப்பில்லை
வாதங்களுகெல்லாம் வழக்கு தொடங்குவார்கள் என்றால் முதலில் உங்களை தான் தூக்கில் தொங்கவிடுவார்கள்.
சவூதியில் சினிமா தியேட்டர் இல்லை. சவூதி அரசர் படம் பார்ப்பதில்லை. அவருக்கு ஒவ்வொரு நகரத்திலும் பெலஸ் இருக்கிறது. பெலஸ் அந்த காலத்தில் அந்தபுரம்.அங்கே அவருக்கு என்று 100 மேற்பட்ட பணிப்பெண்கள் இருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இருந்து அவருக்காக தேர்ந்தெடுத்து கொண்டுவரப்பட்டவர்கள். அவர் சினிமா பார்த்தா அந்தபுரம் வைத்திருக்கிறார்? சினிமா பார்த்தா பெண்களுடன் சல்லாபிக்கிறார்?
சினிமா என்பது உலகத்தை திருந்துவதற்காகவோ போதிப்பதற்காகவோ உண்டாக்கப்பட்டதல்ல. அது பொழுதுபோக்குக்காக உண்டாக்கப்பட்டது.
என் கருத்தை நான் தெளிவாக கூறி விட்டேன் .... இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..
இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!
ini naan ingu vaathiduvathaaga illai.....
உங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அடுத்தவர்களை குற்றம் சுமத்துவதை முதலில் விடுங்கள்
Quote
என் கருத்தை நான் தெளிவாக கூறி விட்டேன் .... இத்துடன் என் பதிவை நிறைவு செய்கிறேன் ..
இறைவன் நல்ல தெளிவை நமக்கு கொடுக்கட்டும் ....!!! நன்றி வணக்கம் !!!!
en pathivai naan anre niraivu seithuvidden....
உண்மையை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சினிமா சீரழிகவே செய்கிறது.அதை பார்த்து தான் உலகத்தில் எல்லாமே நடக்கிறது.அதை பார்த்து தான் எல்லாம் கெட்டுப் போகிறார்கள் என்று சொல்வது மடமையாக தெரியவில்லையா?
சினிமா எதற்காக உண்டாக்கப்பட்டது என்று உதாரணங்களுடன் ரோஸ் விளக்கியும்.அதை புரிந்து கொள்ளாமல் பேசுபவர்களுடன் எதை விவாதிப்பது?
இரண்டரை மணி நேரம் ஓடும் ஒரு திரைபடத்தில் ஒரு கிளப் டான்ஸ் ஒரு 5 நிமிடம் வரும். ஒரு சண்டை காட்சி 10 நிமிடம் வரும். ஆபாச பேச்சுகள் ஒரு சில நிமிடம் வரும். இந்த ஒரு சில நிமிடம் போக மிகுதி நேரம் எல்லாம்?
நாங்கள் சீர்படுகிறது என்று எந்த புள்ளிகளையும் கொடுக்கவில்லை தான்.
படத்தில் சண்டை போடுவது பிழை சட்டத்தை கையில் எடுக்கலமா என்று கேட்ட நீங்களே, தன் குடும்பதை காப்பாற்ற கொலையும் செய்யலாம் அதற்கு சட்டத்தில் இடமும் உண்டு என்றும் கூறுகிறீர்கள், உங்கள் வாதம் உங்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லையா? நீங்கள் சட்டத்தை கையில் எடுக்க சட்டத்தையும் துணைக்கு கூப்பிடுகிறீர்கள். அதையே படத்தில் காட்டினால் மட்டும் தவறு. அருமையான வாதம் யூசுப்.
இது சினிமாவின் தவறல்ல. படிக்கும் போது படிப்பை விட்டுவிட்டு சினிமா பார்க் பீச் என்று சுற்றிய உங்களைப் போல ஒரு சிலரின் குற்றம். நாங்களும் படித்தோம் பாடசாலைக்கு கட் அடித்து விட்டு ஒரு நாள் கூட எங்கும் போனதில்லை. ஒரு தனிப்பட்டவர்களின் பிழையை எதுக்கு சினிமா மேல் சுமத்துகிறீர்கள்?
இப்படி சொல்லும் நீங்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கும் தகுதி இல்லாதவர் அல்லவா? பழைய படங்களை பற்றி பேசக்கூடாது. இன்றைய இளைஞர்களை பற்றித்தான் பேச்சி. சரி. நீங்கள் தான் இன்றைய படங்களை பார்ப்பதில்லையே. அப்புறம் அதை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
நான் கூறிய ஒரு படங்களை கூட நீங்கள் பார்க்கவில்லை. ரேமோ அந்த படங்களை பற்றி கூறியிருப்பது சரியா தவறா என்று கூட தெரியாது.அவருக்கு வக்காலத்து வாங்கி பேசி இருக்கிறீர்கள். ரெமோ, சொல்வன் பேசுவது கூட தப்பில்லை. அவர்கள் படம் பார்த்து விட்டு அவர்கள் மனதில் பட்டதை சொல்கிறார்கள். அந்த தகுதி கூட உங்களுக்கு இல்லையே?
உடனே விபசாரம் பண்ணுபவனா விபசாரத்தை பற்றி பேசணும் என்று ஒரு அபத்தமான கேள்வியை கேட்பீர்கள்.
இங்கே குற்றங்கள் நடக்கிறது.ஆனால் அது வெளியில் வருவதில்லை.அது தான் உண்மை
நமக்கு ஆறறிவு ஏன் இறைவன் படைத்தான்? நல்லதையும் கெட்டதையும் பிரித்து அறியத்தான். நாங்கள் அதை தான் செய்கிறோம். நல்லதை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். கெட்டதை விட்டு விடுகிறோம்.எங்கள் கண்ணுக்கு நல்லது மட்டும் தெரிகிறது. உங்கள் கண்ணுக்கு கெட்டது மட்டும் தெரிகிறது. இது பார்வையின் பிழை. சினிமாவின் பிழை அல்ல.
சினிமா எப்படி உறவு கொள்ள வேண்டும் என படிப்பிக்கிறது, நகரத்தில் உள்ளவர்கள் தவறு செய்தாலும் பாதுகாப்புடன் செய்கிறார்கள். அதனால் போசமான வியாதிகளில் இரு ந்து தப்புகிறார்கள். அதற்காக தவறு செய்ய சினிமா தான் சொல்லிக் கொடுக்கிறது என்று சொல்லாதீர்கள். அது அவரவர் உடல் தேவை . அது படம் பார்க்காவிட்டாலும் எடுக்கும். அதனால் என்ன வினை வரும்? வராமல் எப்படி பாதுகாப்பது எனும் விழிப்புணர்வை சினிமா தானே உண்டாக்குகிறது?
சினிமாவை பார்த்து விட்டு அதில் உள்ளதையே நினைத்துக் கொண்டிருப்பது உங்களைப் போல ஒரு சிலர் தான்.
யூசுப் மச்சி, உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் நிறைய புள்ளி விபரங்களை கொடுத்திருந்தீர்கள். அந்த தினமணி பத்திரிகை ஆதாரத்தை தவிர வேறு இதற்கும் ஆதாரங்களை கொடுக்கவில்லை.
அதற்கு தகுந்த ஆதாரங்களை கொடுத்தால் நாங்களும் வாசித்து பயனடைவோம்
இன்த விவாதத்தை வாசிப்பவர்களில் ஒரு 10 பேர் சினிமா பார்த்து நாங்கள் சீரழிந்தோம் என ஆதாரங்களுடன் சொல்லுங்கள். எனது வாதம் பிழை என பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறேன்.
வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.
மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.
சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.
கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.
அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.
சிறுவர் சீர்திருத்த இல்லத்தில்...
அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.
அந்த சீர்திருத்த இல்லத்தில் பல்வேறு குற்றங்களில் மாட்டியுள்ள 60 சிறுவர்களும், 2 சிறுமிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் 60 பேரும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒரு பிரிவாகவும், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்னொரு பிரிவாகவும் தனித்தனியாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வயது நிரம்பியவன் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அந்த இல்லத்தின் முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.
பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பாரிமுனை பள்ளி மாணவனையும் முதல் நாளன்று அவனது பெற்றோரும், 3 அக்காள்களும் மற்றும் உறவினர்களும் பார்த்து பேச அனுமதிக்கப்பட்டனர்.
சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.
கொலை செய்தது ஏன்?
அவனது வாக்குமூலத்தின் ஒரு பகுதி:
ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.
வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன்.
மனசைக் கெடுத்த சினிமா
கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன்.
அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.
ரிப்போர்ட் கார்டில் தவறாக எழுதினார்
நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார்.
எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.
இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.
மாணவர்கள் கிண்டல்
ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது.
அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது," என்று கூறியுள்ளான்.
அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார்.
நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.
டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.
ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.