என் காதல் உறவே...
என் திருமணத்தில் இணைந்திட்ட உறவே...
இரண்டும் இணைந்து என் வாழ்க்கையில்
அழகாய் பூக்கும் பூக்களின் வாசமே...
நான் தினமும் விரும்பி நேசிக்கும்
என் உயிரின் ஆலயமே...
அதில் குடிக்கொண்டு...
என்னையும் வாழ வைத்து கொண்டிருக்கும்
என் வாழ்க்கை துணையாளனே...
உன் மாறாத அன்பு
உன் மாறாத நற் பண்பு
உன் மாறாத அரவணைப்பு
உன் மாறாத காதல்
உன் மாறாத குணாதிசயங்கள்
உன் மாறாத பேச்சு
உன் மாறாத சிரிப்பு
என்னையே அசர வைக்கும்
உன் எண்ண அலைகள் யாவற்றையும்
மொத்தமாய் ரசிக்கிறேன்
என் அன்புள்ள காதல் மன்னா
என் அன்புள்ள புருஷா
எதிர் பாராமல் இதயத்தில்
முளைத்திட்ட நம் காதல்
ஆழமான வேர்களால்
இறுக்கி பிடிக்க வைத்தது
ஒருவர் மேல் ஒருவர் கொண்ட
அளவில்லா நம்பிக்கையும்
புரிந்துணர்வுமே ....
இதுவே நம் இருவருக்கிடையில்
உள்ள அன்பை ஆழமாக தோண்டுகிறது
என்னுயிரானவனே...
செல்வத்துள் செல்வம் பெரிய செல்வம்
நீ தானே என் பேரன்பே...
நமக்குள் ஏது பிரிவினைகள்...
நமக்குள் ஏது சண்டைகள்...
நமக்குள் ஏது சந்தேகங்கள்...
நமக்குள் ஏது வாக்குவாதங்கள்...
அழகான வாழ்க்கை பாதையில்...
இருவரும் உறுதியாய் நின்றுக் கொண்டிருக்கிறோம்
இதை யாரால் பிரித்திடக் கூடும் என்னவனே...
என்னுயிர் நண்பனும் நீதானடா...
என்னுயிர் காதலனும் நீதானடா...
என்னுயிர் கணவனும் நீதானடா...
என் அம்மாவும் நீதான்...
என் அப்பாவும் நீதான்...
எனக்கெல்லாமே நீதான்...நீதான்...நீதான்...
என் ஆசை நாயகனே...
என் இறுதி மூச்சி வரை
உன்னை யாருக்கும் விட்டு தராமல் பாதுகாப்பேன்
ஐ லவ் யூ டா செல்லம்....
என்றும் பிரியமுடன்...
உன் பிரியமானவள்
ஜெருஷா
https://i.postimg.cc/SNpwR2Gg/BA672-B8-A-26-E4-49-C8-ABBF-DF88728-D3-C84.jpg