தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

ஆண் பெண் நட்பு !

<< < (2/2)

vimal:
"அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் இருட்டு" இந்த பழமொழிக்கு ஏத்தமாதிரி இன்னும் நிறைய பேரு இருந்துட்டுதான் இருக்கங்க, ஒரு ஆண் பெண் பேசினாலே போதும் ஊர் முழுசும் வதந்தி பரவிடும்...

என் சகோதரியோடு நான் கடைவீதிகளுக்குச் சென்று வரும் போது கூட இந்த சமுதாயத்தின் முதல் பார்வை என்னவாயிருந்திருக்கும்? யார் இந்தப் பெண்? இப்படிச் சிரித்து பேசி ஒரு ஆடவனுடன் சென்று வருகிறாளே என்றுதானே பார்த்திருக்கும்? ஆணும் பெண்ணும் பேசினால் அங்கே ஒரு குறு குறுப்பான பார்வையும்.... தவறான எண்ணங்களும் பதியப்படுவதற்குப் பின்னால்..நீண்டகால ஒரு பொதுப்புத்தி இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
கண்ணுலேயே கடப்பாறைய விட்டு ஆட்டணும்...நட்ப தப்ப பாக்கறவங்க நிறைய பேரு இருக்காங்க at the same time அதையே advantage ah எடுதுகிரவங்களும் இருக்கங்க....என்ன செய்யுறது வாழ பழகிக்கணும்....

நல்ல விஷயம் orca...

DakalTi MaSs:
நல்ல தலைப்பு.

மேலைநாடுகளில் பெண்களுக்கு சமமாக மதிக்கும் பழக்கம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது .நம் நாட்டில் இப்போக்கு மாற  சிலகாலம் ஆகலாம். ஆண் பெண் என்று பிரித்தாளுவது ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே என்பதை இங்கு சொல்லிக்கொள்ள கடமை பட்டுளேன். நம் நாட்டில் பெண் என்பவள் ஆண்களை மகிழ்விக்கும் பொம்மையாக ,சமையல் செய்யும் வேலைக்காரியாக மட்டுமே கண்டோம்.பெற்ற தாயின்மேல் பாசம்கொண்ட எந்த ஓர் ஆண்மகனும் பெண்களை நோகடிக்கமாட்டான்.பெண்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே பெண்மையை புரிந்து கொள்ளமுடியும் அதன் பிறகெய் ஆண்பெண் நடப்பு மலரும் .

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version