அன்றொரு இரவு என் வாழ்வை மாத்தியது
ஒரு கனவு,, அந்த கனவில் நான் கண்ட ஒரு அழகிய தேவதை
என் விழி ஓரங்களில் மட்டும் அவள் தென்பட்டால்
தன் அழகிய முகத்தை முழுதாக காட்டாமல் அங்கும் இங்கும் ஓடியபடி,,
சிரிப்பு மழைகளில் ஒரு நிறஞ்ச புன்னகையுடன் என்னை சுற்றி வந்தால்
சிரித்தபடியே என் முன்னாள் அந்த தேவதை அழகிய சிரிப்புடன் தோன்றினால்
எங்கோ நன்று பரச்சயமான முகம்,,
அவளின் அன்பு எனக்கென எழுதப்பட்ட அன்பானவளாய்,, நான் கண்ட காட்சி
ஆவலுடன் இருக்கும் நேரங்களில் எனது உலகம் பூ பூத்தது
சந்தோசத்திற்கு முற்றுப்புள்ளி அற்ற ஒரு வாழ்வு
அதிகாலை கண் விழிக்கையில்,, நான் கண்டது அனைத்தும் கனவா?
யார் இவள்? யார் அந்த தேவதை,, கனவுலகில் நன்கு அறிந்ததுபோல்
அவளுடன் இருக்கும் என் அன்பு அழகிய வண்ணம் ,,
அனால் கண் விழிக்கையில் அவள் யார் என்று எண்ணம்
மீண்டும் இரவு உறங்கியபின் கனவுலகில் இன்னோர் பரிமாணத்தில் அந்த தேவதை
என்னுடன் கைகோர்த்து என்னை அழைத்து சென்றால்
அவளின் அணைத்து செயல்களும் நான் அறிந்திருந்தேன்
இவள் எனக்கானவள் என்று உணர்ந்தேன்
எத்தனை யுகங்கள் ஆனாலும் இவளுடன் தொடரும் என்று நினைத்தேன்
அதே போல் கண் விழிக்கையில் அவள் யார் என்ன என்று சிந்திக்க தொடங்கினேன்
அதெப்படி கனவுலகில் அவள் எனக்கு நன்கு தெரிந்தது போல் ஒரு பழக்கம் ,,
அனால் கண் விழிக்கையில் யார் என்று முணக்கம்,,
நாட்கள் செல்ல செல்ல கனவுலகம் நிஜமாகமும்
நிஜஉலகம் கனவாகவும் என்ன தோன்றினேன்
எப்பொழுது காலை விடியும் என்று நினைப்பதை விட
எப்பொழுது சீக்கிரம் இரவு வரும் உறங்க என்று மனம் என்ன தோன்றியது
ஒரு நாள் என் தேவதை
இதற்கு பிறகு உங்கள் கனவில் என்னை காண முடியாது
அனால் நிச்சயம் ஒரு நாள் திரும்ப வருவேன்
காத்திரு என்று கூறினால்
அதை கேட்டதும் என் மனம் உடைந்தது
ஏன் என்று கேட்டதும் அவள் ஒரு சிறிய சிரிப்புடன்
மறைய தொடங்கினாள்
அன்று இருந்து இன்று வரை ஒவ்வரு இரவும் கனவுலகில் அவள் வருகிறாளா ?
அன்பு பரிமாணத்தில் எப்பொழுது என்னை ஈட்டு செல்வாள் என்று
ஒவ்வரு இரவும் தேட தொடங்கினேன்
என்றாவது ஒரு நாள் அவள் வருகை திரும்ப வரும் என்று,,
நிலை இல்லாத கனவில் அர்த்தமில்லா நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
எதோ ஒரு பரிமாணங்களில் எனது காதலும்
அவளின் வருகையும் காத்துகொண்டு இருக்கின்றது
கனவு கனவாக போய்விடக்கூடாது என்று அவள் வருகைக்காக காத்திருக்கும்
ஓர் பரிமாண கனவு காதலன்