Author Topic: காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)  (Read 1334 times)

Offline Forum


எதிர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு  நண்பர்கள் இணையதள வானொலி ஊடக நீங்கள் உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு உங்கள் மனதை வெளி படுத்தவோ, அவர்களுக்கு உங்கள் கவிதையோடு காதலை பகிரவோ  வாழ்த்துகளை பகிரவோ ஆசைபடுகிறீர்களா?..  உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செயுங்கள் ... எதிர் வரும் 10.02.2015  வரை உங்கள் கவிதைகளை இங்கே  பதிவு செய்யலாம் .... உங்கள் கவிதைகள் காதலர் தினத்தன்று  நண்பர்கள் இணையதள வானொலி ஊடாக உங்களை  வந்தடையும் .
« Last Edit: February 06, 2015, 11:52:22 PM by Forum »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook

Offline Software

  • Jr. Member
  • *
  • Posts: 60
  • Total likes: 86
  • Karma: +0/-0
  • Gender: Male
  • your Best Teacher is your last mistake :)
கண்களுக்குள் உன் நினைவுகளை '

தேக்கி வைத்தபடி காத்திருக்கிறேன்

நீ எப்போது வருவாய் என....

 

நீ வரும் அந்த கணம்

எனக்கு எத்தனை இன்பங்களை

அள்ளித் தந்து போவாய்

என்ற கற்பனையோடு....

 

நடைபாதை மின்விளக்கு ஒளியில்

உன் விரல் பிடித்தபடி நடக்க

ஓர் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா?

 

அமர்ந்தபடி உன் நெஞ்சில் சாய்ந்து

நகத்தினால் தடயம் ஏற்படுத்தி

தயங்கி விலகி நிற்பதுவாய் ஓர் காட்சி....

 

வண்ண மலர்களுக்கு நடுவில்

உன் தோல்சாய்ந்தபடி புல்வெளியில்

காதல் செய்யவும் ஓர் ஏக்கம்....

 

மொத்தமாய் நிலவு குத்தகைக்கு

எடுத்த ஓர் இரவில்

உன் மடியினில் மயங்கிக் கிடக்கிறேன்....

 

சுபிட்சமான மழையில் நனைந்து

உன் தலைதுவட்ட நானும்

என் தலைதுவட்ட நீயும்

 அழகான கற்பனை....

 

இருளுக்கும் இடம் கொடுக்காமல்

என் இதயத்தில் சுமக்கிறேன்

உன் நினைவுகளை மட்டும் நான்....

 

இப்படி எத்தனையோ உயிரில்லா

கற்பனைகள் சுமந்து காத்திருக்கும்

என்னையும் என் கற்பனையும்

உயிர்பிக்க நீ வருவாயா?


By Softy
By

Ungal Softy

Offline Dong லீ

காதலர் தினம் கொண்டாட
சிறப்பு  கவிதை நிகழ்ச்சி
அதில் பங்கு கொள்வதில்
எனக்கு அளவில்லா மகிழ்ச்சி

சிறிதளவேனும் இருப்பதாய்
நம்பப்படும் என் மூளை
என்னவளின் அழகை
உங்களுக்கு உரைக்க
கவிதை செதுக்க
சிந்திக்க 


அது
என் உயிராய் உயிர் நாடியாய்
என் இதயத்தில் சேவ் ஆகியிருக்கும் 
அவளின் அழகை காண
என் இதய கேலரியில்
அவளது செல்பியை
தேட

அந்த கேலரி எங்கும்
அவளே நிறைந்திருக்க
தேடல் முடிந்திருக்க
என் மூளையோ மலுங்கியிருக்க
வராத கவிதையை
வா வா வென
அழைக்க

அது பின்னர்
என்  இதய பி வி டி க்கு சென்று
உதவி கேட்க

அவள் முகம் நிலவு
அதில் நான் போனேன் களவு
அவள் கண்கள் மீன்கள்
அது என் வாழ்வின் தூண்கள்
அவள் மூக்கு கிளி மூக்கு
அதில் நான் ஆனேன் பேக்கு
என இதயம் கவிதை என்ற பெயரில்
ஏதேதோ கிறுக்க

இன்னும் எத்தனை நாட்கள் தான்
பெண் முகத்திற்கு
 நிலவுடன் ஒப்பீடு 
குண்டும் குழியுமான  நிலவு முகம்
காதல் தண்டபாணிக்கு தான்
கண்கள் மீன்கள்
மூக்கு கிளி மூக்கு  இது
8999 வருட பழைய ஒப்பீடு 
என்று மூளை தன்  மூளை குரலில்
இதயத்தை கழுவி ஊற்ற

காதல் கவிதை ஒரு வரியும்
எழுதப்படாமல் நேரம் கழிய
நான் கவிஞன் தானா
இல்லையேல் என்னை நானே
கவிஞன் என எமாற்றுகிறேனா
என்று  குழம்பிய தருணத்தில்
அச்சம் எனக்கு
ப்ரெண்ட் ரெகுஸ்ட் கொடுக்க

இறுதியில்
அவள் பெயரே கவிதை போல தான் என
அவள் பெயரை "------------" மட்டும் எழுதி
அச்சத்தை பிளாக் செய்தது என் மூளை
 
என்னடா இது மொக்க
என நீங்கள் நினைக்க
நான் சென்று வருகிறேன்
என் வேலையை பார்க்க
« Last Edit: February 08, 2015, 09:11:46 PM by Dong லீ »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
காதல் இரு மனங்களின் சங்கமம்
காதல் உன்னதமானது
காதல் புனிதமானது
கேட்டு கேட்டு புளித்த போன
 பசப்பும்  வார்த்தை ஜாலங்கள்
காதலில் எங்கே உள்ளது புனிதம்
 எங்கே உள்ளது உன்னதம் ..!

தவறான எதிர்பார்ப்பு  இல்லாத
இடத்தில்வளரும் அந்த
காதல் உன்னதமானது தான் ..!

என் மீது நம்பிக்கை இல்லையா ?
இது சத்தியம் என்று பசப்பும்
வார்த்தைகள் இல்லாத  இடத்தில்
வளரும் காதல் உன்னதமானது தான் ..!

கண்ணை இருக்க மூடிக்கொண்டு
பூலோகம் இருட்டு என்று கருதும்
 குருட்டு பூனை போல
தன்னை சுற்றி இருபவரை
 சட்டை செய்யாமல் சல்லாபம் செய்வதை
காதல் என்று சொல்லாதவரை
காதல் புனிதமானது தான் ..!
 
பெண்மையை மதித்து அவளது
உணர்வுகளுக்கு மதிபளிக்கும்
இடத்தில் வளரும் அந்த காதல்
உன்னதமானது தான் ..!

இரு குடும்பகளின் மனதிலும்
சந்தோஷத்தை விதைத்து நம்பிக்கையோடு
வளர்க்கப்படும்  இடத்தில்
 வளரும் அந்த காதல்
உன்னதமானது தான் ..!

உனக்கு எல்லாமுமாக
 கடைசி வரை இருப்பேன் என்று
கசிந்துருகி  வாய்ஜாலம் பேசி
பேதையிடம் தேவையை
முடித்து கொண்டு இதயத்தை
ரணமாக்கி மாயமாகி போகும்
ரோமியோக்கள் இல்லாத வரை
காதல் புனிதமானது தான்

பண்பாடு புண்ணாகி போகாமல்
 பாதுகாத்து வளர்க்க படும்
அந்த இடத்தில் காதல்
உன்னதமானது தான் ..!

உனது ஆடம்பர தேவைக்காய்
நல்ல கொழுத்த கெளுத்தி மீனுக்காய்
காத்திருக்கும் கொக்கை போல
 உன் சிரிப்பை ரசித்து உன் 
 குள்ள நரித்தனம் அறியாத வெள்ளந்தியாய்
சிரித்தது ஒருவனின் குற்றம்  என்று
அந்த அப்பாவியாய் காதல் என்ற பெயரில்
அவனின்  கையிருப்பை கரைத்து
கிறுக்கனாய் அலைய விடாதவரை
காதல் புனிதமானது தான் ..!

காதல் இரு மனங்களின் சங்கமமாய்
மட்டும் இருக்கும் வரை
 காதல் உன்னதமானது தான் ,
வாழ்க்கையில் கடைசி காலம்  வரை
விட்டு கொடுத்து அதே காதலோடு
வாழ்ந்தால் காதல் புனிதமானது தான் ..!!
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline thamilan

இனியவளே
ஞாபக நதிக்கரையில்
நடந்து போகிறேன் நான்
நினைவுத் தூரல்கள்
என் நெஞ்சில் விழுகிறது ........

கடலை அந்திவானம்
முத்தமிட முயட்சிக்கின்ற
ஒரு மாலை பொழுது

கிரகாம்பெல் சிணுங்கியது
மறுமுனையில் நீ சிணுங்கினாய்
சந்திக்க வேண்டுமென்றாய்
நானும் சந்தோசமாக
சரி என்றேன்

கடற்கரைக்கு வரச் சொல்லி
கட்டளை இடுகிறாய்
அண்ணா சமாதி அருகே
காத்திருப்பதாக சொல்கிறேன்
என் காதலுக்கும் அங்கே தான்
சமாதி என்பது அறியாமல்

"எதையும் தாங்கும் இதயம்
இங்கே உறங்குகிறது"
வாசகங்கள் என்னை வாசிக்கின்றன

ஒரு ஓரமாய் அமர்கிறேன்
நேசிக்கிரவளைப் பற்றி
யோசிக்கிற பொழுது
இதமான இளங்காற்று
பின்னால் இருந்து தலையை
வருடிக் கொடுத்தது

" வந்து நீண்ட நேரம்
ஆகி விட்டதா?"

என் அருகே
என் இனியவள் நின்டிருந்தாள்
காத்திருப்பது சுமை அல்ல சுகம்
என்றேன் நான்

அவசரமாய் கொஞ்சம் அவசியமாய்
விரல் பற்றி நடக்கிறோம் நாம்

நாம் கடந்து போவது கூட
தெரியாமல்
காதல் பரிட்சைக்கு
காப்பி அடிக்காமல்
காதல் பாடம் எழுதிக்கொண்டிருந்தார்கள்
இன்றைய நவீன ஆதாம்களும் ஏவாள்களும்

கடற்கரை மணலில்
எதிர் எதிரே அமர்கிறோம்
முகம் பார்கிறாய்
உன் மூச்சிகாற்று என்னை சுடுகிறது
உன் முகத்தில்
ஒரு பதற்றம் தெரிகிறது

விழிகளால் விசாரிக்கிறேன்
ஏன் என்று .........

திருமணத்துக்கு
நாள் குறித்து விட்டதாக சொல்கிறாய்
இன்னொருவனுடன்

திருமணத்துக்கா இல்லை
என் இறப்புக்கா
என் காதல் இறப்புக்கா
நாள் குறித்திருப்பதாக சொல்கிறாய்
வினாவுகிறேன் நான்
மெளனித்திருக்கிறாய் நீ

கல்லறைக்கு வரச் சொன்னது
என் காதலுக்கு
சமாதி கட்டத்தானா?   
விழிகளில் அமிலம் விழுந்தது போல
என் கண்களில்
வெப்ப நீரோட்டம்

உன் நிழல்
என் மேல் விழுகிறது
நிமிர்ந்து பார்கிறேன் நான்
தூரத்தில் நீ
துயரத்தில் நான்

நடந்து செல்கிறாய்
என்னை விட்டு
வெகுதூரம் சென்று விட்டாய்

இனியவள்
இனி அவள் இல்லை
என் வாழ்வில்

நான் கடற்கரை மணலை
கையில் அள்ளி எண்ணும் முயற்சியில்
தோற்றுப் போனேன்
என் காதலைப் போலவே 

   
« Last Edit: February 10, 2015, 02:23:27 PM by thamilan »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
அனைவரது வாழ்விலும் வசந்தம்
வீசி வரும் காதல் எனக்குள்ளும்
 ஒரு நாள் வந்து என்
 மன கதவை தட்டியது ....

என் தோழியாய் எனக்கு
பரிச்சயமானவள் இருவரின்
ரசனையும் ஒன்றாக
ஒத்து போக சிறிது சிறிதாக
என்னுள் வந்து ஒரு நாள்
என் மனதில் காதல்
இளவரசியாக சிம்மாசனம்
இட்டு அமர்ந்து விட்டால் ...

என் காதலை உணர்ந்த
அந்த நாளே என் வாழ்வில்
என் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக மாற்றிய நாள் ...

கண்களாலும் மௌனத்தாலும்
அவள் காதலை சொல்லி
மனதை பரிமாறி காதல் என்ற
தளிரை எங்களின் வாழ்க்கைக்காய்
அன்பு என்னும் நீர்விட்டு
வளர்த்து வருகின்றோம் ...


என்னவளே !!!
நன்றாக தெரிந்து கொள் .
ஷாஜகான் போல
தாஜ்மஹால் கட்டி
மும்தாஜ் தங்கையையும்
கட்டிய அவனை போல்
காதல் துரோகியாய்
இருக்கமாட்டேன் ....

காலம் பிரித்தது என்று இவனாக
சொல்லி கொண்டு பார்வதியை
கிழவனிடம் தவிக்க விட்டு
குடித்து குடித்து உயிர் விட்ட
தேவதாஸ் போல ஒரு நாளும்
இருக்க மாட்டேன் .....

ஜுலியசுடன் ஆருயிராய்
பழகியும் அவளின் அறிவு கூர்மை
அறியாமல் முட்டாள் தனமாய்
உயிர் விட்ட ரோமியோ  போல்
இருக்க மாட்டேனடி ...

நாம் கொண்ட காதல்
வாழ்வதற்காக மட்டுமே
காலம் கனியும் வரை காத்திரு
காதலில் வென்று காலமெல்லாம்
காதலோடு வாழ்ந்து
காதலையும் வாழ வைக்கலாம் Dear...
« Last Edit: February 10, 2015, 12:26:34 AM by ராம் »

Offline பூக்குட்டி (PooKuttY)

அன்பே  !
வாய் விட்டு நான் பேசிய நேரத்தை விட
பேச துடித்த நேரங்களே அதிகம்.
என் விழி மொழியால்
உன்னை ஊமை ஆக்கினேன்.

என் உதட்டு புன்னைகையால்
உன் உள்ளத்தில் காதலை இறக்கினேன்.

உயிராய்  உன்னை நினைத்து
ஓடாய் கரைகிறேனடா ...

துடிக்கும்  என் சிறு  இதயத்தை கேளடா..
துணையாக போகும் உன்னையே தேடுதடா.

வாழும்காலம்  மட்டும் காதல் மாறாமல்
உனக்காய் துடித்திட ஏங்குதடா !

உறவாக என்று வருவாயோ?
காத்திருக்கிறேன் இனிய கனவுகளோடு !

காதலை உணரும் ஒவ்வொரு நாளும்
நமக்கு காதலர் தினமே.

.

இப்படியெல்லாம் கவி சொல்ல
எனக்கும் ஆசை தான்.

ஆசை யாரை விட்டது !

Offline kanmani

ஏன் வந்தாய்
மினுமினுக்கும் மின்மினியாய்
என் வீட்டு நந்தவனத்தின் மலர்க்கொடியாய்
என் பெற்றோரின் கொஞ்சி பேசும் கிளியாய்
தெளிந்த நீரோடையாய் சுற்றித்திரிந்த
என் மனதில் ஏன் வந்தாய் ,,,
அடி மனதில் அடிக்கரும்பென  இனிக்க
ஆசைகள் அலைகடலென ஆர்பரிக்க
என்னுள் ஏன் வந்தாய் ...
வாயிருந்தும் மொழியில்லாமல்
எழுத்திருந்தும் வார்த்தைகள் வராமல்
உயிர் இருந்தும் உணர்வில்லாமல்
என் விழிகளில் நீ இருக்க ...
என் தவிப்பை நீ ரசிக்க ...
காதலே...
நீ என்னுள் வந்தாயோ
காதலே...
என் கனவுகள் அரும்பிலே கருக
கசப்பை ருசித்து இனிப்பை மறந்து
உடைந்த பானையில் நீரை தேடும்
 என் நிலை காண வந்தாயோ
என் கருவிழி தெப்பமாய்  நனைய
கனத்த மனதுடன் நான் உறங்க
சூரியனும் பொறமைகொள்ளும் மலர்ச்சியுடன்
உன் வருகைக்காக 
ஒவ்வொரு நாளும் காத்திருக்கும்
எனை காண வந்தாயோ ...