ஏன் வந்தாய்
மினுமினுக்கும் மின்மினியாய்
என் வீட்டு நந்தவனத்தின் மலர்க்கொடியாய்
என் பெற்றோரின் கொஞ்சி பேசும் கிளியாய்
தெளிந்த நீரோடையாய் சுற்றித்திரிந்த
என் மனதில் ஏன் வந்தாய் ,,,
அடி மனதில் அடிக்கரும்பென இனிக்க
ஆசைகள் அலைகடலென ஆர்பரிக்க
என்னுள் ஏன் வந்தாய் ...
வாயிருந்தும் மொழியில்லாமல்
எழுத்திருந்தும் வார்த்தைகள் வராமல்
உயிர் இருந்தும் உணர்வில்லாமல்
என் விழிகளில் நீ இருக்க ...
என் தவிப்பை நீ ரசிக்க ...
காதலே...
நீ என்னுள் வந்தாயோ
காதலே...
என் கனவுகள் அரும்பிலே கருக
கசப்பை ருசித்து இனிப்பை மறந்து
உடைந்த பானையில் நீரை தேடும்
என் நிலை காண வந்தாயோ
என் கருவிழி தெப்பமாய் நனைய
கனத்த மனதுடன் நான் உறங்க
சூரியனும் பொறமைகொள்ளும் மலர்ச்சியுடன்
உன் வருகைக்காக
ஒவ்வொரு நாளும் காத்திருக்கும்
எனை காண வந்தாயோ ...