Author Topic: அர்த்தமுள்ள இந்துமதம்  (Read 11371 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 31
« Reply #30 on: December 06, 2021, 10:38:28 AM »


பூஜையின்போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.

உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் -32
« Reply #31 on: December 08, 2021, 08:02:23 AM »

இறைவனுக்கு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்வதான் விளக்கம் என்ன?



பகவத்கீதையில் (9.27) பகவான், "நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், எதைக் கொடுத்துதாலும், எந்தத் தவத்தைச் செய்தாலும் அதையெல்லாம் எனக்கு அர்ப்பணமாகச் செய்" என்று கூறியுள்ளார்.

நாம் உண்ணும் உணவை இறைவனுக்குப் படைப்பதும், நாம் உடுக்கும் துணியை இறைவனுக்கு உடுத்திய பிறகு நாம் உடுத்துவதும், நாட் கட்டும் வீட்டை அவன் கோயிலாகக் கருதுவதும் சிறந்த தெய்வ ஆராதனையாகும்.

நாம் நீராடி மகிழ்வதால் இறைவனுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறோம்.

"உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்" என்கிறார். நம்மாழ்வார். இவை அனைத்தும் உன்னத மனதின் இயல்பான வெளிப்பாடுகள். இந்த ஆராதனை முறை நெடுநாளாக நமது மூதாதையர் கண்ட வழிபாட்டுச் சம்பிரதாயம்.

உலக வழக்கில் நமது மரியாதைக்கு உரியவர்கள், அன்பிற்கு உரியவர்கள், உறவினர்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நாம் ஏதேனும் வாங்கிக் கொடுக்க நினைக்கிறோம்', வாங்கியும் கொடுக்கிறோம். அது போன்று எல்லா உறவுகளின் ஒட்டுமொத்தமான உறவினனான (சரியாகச் சொல்லப்போனால், உண்மையில் உள்ள ஒரே உறவினனான) நம் இறைவனோடு, நீங்கள் குறிப்பிட்ட வழிபாட்டு முறைகள் அனைத்தின் மூலமாகவும் நாம் தொடர்புகொள்கிறோம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 33
« Reply #32 on: December 09, 2021, 08:23:08 AM »

தலவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?

விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன்களை தலைமுறை தாண்டி கொண்டு செல்லவும் தளவிருட்சங்கள் அமைக்கப்பட்டன. ஆல், புளி, வேம்பு என ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள தனிப்பட்ட மருத்துவ குணநலன்களை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு செய்யப்பட்டன. வன்னி மரம், வில்வ மரம் போன்றவை கோயில்களை தவிர மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்போது காணப்படுன்றன என்பதை நினைவில் கொள்க.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 34
« Reply #33 on: December 10, 2021, 04:19:53 PM »

வாஸ்து படி வீடுகட்டினால் சுபிட்சம் என்கின்றார்களே?


முதலில் வாஸ்து என்பது என்னவென அறிய வேண்டும். எல்லா இடங்களிலும் நில அமைப்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மலை பிரதேசங்களில் ஒரு அமைப்பு, பாலைவனங்களில் ஒரு அமைப்பு, கலர் நிலங்களில் ஒரு அமைப்பு என காணப்படுகின்றன. இதனை கணக்கில் கொண்டும் வீட்டில் சூரிய வெளிச்சம் பரவ ஏற்றவாரும் எப்படி வீட்டை அமைப்பது என சொல்வது வாஸ்து. இப்போது வியாபாரமாகிவிட்டதால் பலரும் தவறு செய்கின்றார்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 35
« Reply #34 on: December 11, 2021, 09:01:44 AM »

நட்சத்திரம், ராசி , ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா?

உண்மைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானது உழைப்பு மட்டும் தான். கல்லை நம்புவதோ, ஜாதகத்தினை நம்புவதோ உயர்விற்கு பலன் தராது. ஜாதகம் என்பது ஒரு கணக்கீடு, வெகு சிலர் மட்டுமே அந்த கணக்கீட்டில் வல்லுனர்களாக இருந்திருக்கின்றார்கள்.(உலக புகழ் பெற்ற நாஷ்டோடாமஸ் பற்றி கேள்வி பட்டிருக்கிரீர்களா) புதிய கோள்கள் கண்டறியப்பட்டும் கூட பழைய முறையை இன்னும் ஜாதகம் பார்ப்பவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் முறையான கணக்கீட்டை அவர்களால் கணித்து கூறுவது கடினம். பெயரை மாற்றுவது, வீட்டை மாற்றுவது, வாகண எண்ணை மாற்றுவது என செய்யாமல் உங்களுடைய கவனத்தினை தொழில் பக்கம் மாற்றினாலே வெற்றி கிடைத்துவிடும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 36
« Reply #35 on: December 12, 2021, 05:46:29 PM »

"சந்தியா வந்தனம்' என்றால் என்ன?

"சந்தி' என்றால் "சந்திப்பு' என்று பொருள். "ஜங்ஷன்' என்கிறோமே அதுபோல. இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் "சந்தி' அல்லது "சந்தியா' என்று பெயர். இம்மூன்று சந்தியா காலங்களில் அனுஷ்டானம் செய்து கடவுள் வந்தனம் செய்வதற்கு "சந்தியாவந்தனம்' என்று பெயர். இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்
.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 37
« Reply #36 on: December 13, 2021, 08:01:20 AM »

பிறப்பின் ரகசியம் என்ன... விளக்கம் வேண்டும்.

நமக்குப் பல பிறவிகள் உண்டு என்று நம்பினால் தான், நான் கூறும் ரகசியம் உங்களுக்குப் புரியும். கடந்த பிறவியில் நாம் செய்திருக்கும் செயல்களுக்கான பலனை அனுபவிப்பதற்காக மீண்டும் இப்போது பிறந்திருக்கிறோம். நல்லது நிறைய செய்திருந்தால் இப்பிறவியில் நன்றாக வாழ்வோம். தீயன செய்திருந்தால் துன்பத்துடன் வாழ்வோம். இப்பிறவியில் நிறைய நல்லது செய்வோம். தர்மங்கள் செய்வோம். இப்பிறவியில் கிடைக்காத இன்பங்களை அடுத்த பிறவியிலாவது அடைவோம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 38
« Reply #37 on: December 14, 2021, 07:25:43 PM »

ருத்ராட்சம் அணிய வேண்டிய விதிமுறைகள் யாவை?


விபூதியும், ருத்ராட்சமும் சைவ சமயத்தின் உயர்ந்த சின்னங்கள். சிவனடியார்கள் இவ்விரண்டையும் தம் இரு கண்களாகப் போற்ற வேண்டும். இரண்டுமே சிவபெருமானுடைய அம்சங்கள். எனவே, இறைவன் சன்னதியில் எப்படி பயபக்தியுடன் இருக்கிறோமோ, அதுபோல ருத்ராட்சம் அணிபவர்கள் பய பக்தியுடனும், ஆசாரத்துடனும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்பவர்கள் மட்டும் இதை அணிவது என்று இருந்தது. தற்காலத்தில் ஒரு அணிகலன் போல் எல்லோரும் விரும்பி அணிகிறார்கள். அணிபவர்கள் எல்லோரும் நல்ல பழக்கங்களுக்கு மாறிவிட்டால் நாட்டுக்கு நன்மை தானே!.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 39
« Reply #38 on: December 15, 2021, 05:25:09 PM »

கோயிலில் பிரசாதமாகப் பெறும் பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு அணிவிக்கலாமா?

சுவாமிக்குச் சாத்திய பிறகு எடுக்கப்படும் பூமாலை நிர்மால்யம் எனப்படும். இறைவனின் திருவருட் பிரசாதமாக நமக்குக் கிடைத்ததை மீண்டும் சுவாமி படங்களுக்கு சாத்தக்கூடாது. ஆனால், முன்னோர்களின் படங்களுக்குச் சாத்தலாம். இதில் தவறில்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 40
« Reply #39 on: December 16, 2021, 11:41:59 AM »

நமக்குத் துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறோம். அந்த விதியை எப்படித்தான் தடுப்பது?

துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறீர்கள். இன்பம் ஏற்படும் பொழுது இறையருளால் கிடைத்த இன்பம் என்று யாராவது எண்ணியதுண்டா? இதற்காகத்தான் எப்பொழுதும் "எல்லாம் இறைவன் செயல்' என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால் துன் பத்தைக் கூட மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். வாரியார் சுவாமிகள், ""விதி என்பது மழையைப் போன்றது. அதில் நாம் நனையாமல் காத்துக் கொள்ள தெய்வ வழிபாடு எனும் குடையை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்று எளிமையாகக் கூறியுள்ளார்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 41
« Reply #40 on: December 17, 2021, 10:32:48 AM »

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றால் என்ன?

நமக்குப் பல பிறவிகள் உண்டு. உயிர் என்றும் அழியாதது. நாம் ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வருவது போல நாமும் இப்பூமியில் பிறந்து, பிறந்து இறக்கிறோம். இதைத் தான் "புனரபி' என்கிறார் சங்கரர். புனரபி என்பதற்கு "மீண்டும் 'என்பது பொருளாகும். பூமியில் இருந்து எடுக்கப்படும் தங்கம் தீயில் இடப்பட்டு மாற்று அடிக்கப்பட்ட பிறகே பொன்னிறம் பெற்று ஜொலிக்கும். அதுபோல, உயிர்களையும் கடவுள் பலமுறை பூமியில் பிறப்பெடுக்கச் செய்து இன்பதுன்பம் என்னும் தீயிலிட்டு பக்குவப்படுத்துகிறார். இறுதியில் மோட்சத்தைத் தந்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 42
« Reply #41 on: December 18, 2021, 08:06:00 PM »

சிவாலயங்களில் கால பைரவர் வழிபாடு பற்றி விளக்கம் கூறவும்?


சிவபெருமான் மூன்று வடிவங்களில் நமக்கு அருள்பாலிக்கிறார். யோக வடிவம், வேக வடிவம், போக வடிவம். பைரவர் வேகவடிவத்தில் அமைந்தவர். எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவர் வழிபாடு அவசியமாகும். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாளாகும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 43
« Reply #42 on: December 19, 2021, 08:39:12 AM »

பிரார்த்தனை, தொண்டு இவற்றில் உயர்ந்தது எது?

பிரார்த்தனை, என்பது தமக்கு நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். எல்லோருக்கும் நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். தொண்டு என்பது பிறருக்கு உதவுவது மாத்திரம் அல்ல. கோயில் வழிபாடும் ஒரு தொண்டு தான். நாயன்மார்களைக் கூட திருத்தொண்டர்கள் என்று தானே சொல்கிறோம். எனவே, மக்களுக்காக இறைத் தொண்டு (பிரார்த்தனை) செய்வதே உயர்ந்தது. "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்பதில் பிரார்த்தனையும் தொண்டும் இணைந்திருப்பதைப் பாருங்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 44
« Reply #43 on: December 20, 2021, 07:54:17 AM »

நரசிம்ம அவதாரத்தை "அவசரத்திருக்கோலம்' என கூறுவது ஏன்?


"அவசரம்' என்ற சொல் "சீக்கிரம்' என்ற பொருளில் மாத்திரம் இல்லை. ஒன்றைப் போல்இருக்கும் மற்றொன்றைக் குறிக்கும் சொல்லாகும். அதாவது ஒரு சுமங்கலிப் பெண் சிவப்பு ஆடை உடுத்தி நிறைய பூ வைத்து பொட்டு வைத்து மங்களகரமாக காட்சி அளித்தால் "அம்பாள் அவசரமாக இருக்கிறீர்கள்' என்று பாராட் டுவது மரபு. "நர' என்றால் மனித வடிவம். "சிம்மம்' என்றால் சிங்கம். முகம் சிங்கமாகவும், உடல் மனித வடிவிலும் இருக்கும் கோலம் நரசிம்மம் என்று பெயர். ஸ்ரீ மஹா விஷ்ணுவை "நரசிம்ம அவதாரம்' என்று சொல்லுவதை "நரசிம்ம அவசரம்' என்றும் சொல்லலாம்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: அர்த்தமுள்ள இந்துமதம் - 45
« Reply #44 on: December 21, 2021, 09:25:44 AM »

குல தெய்வ வழிபாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

"குலம்' என்றால் "குடும்ப பாரம்பரியம்' என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். குழந்தைகளுக்கு முடி எடுப்பது, காது குத்துவது, திருமணப் பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வ பூஜை செய்வது எல்லாமே நம் குலம் தழைக்கச் செய்யப்படுவதாகும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்