Author Topic: ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்  (Read 1169 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218346
  • Total likes: 23050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
*🐓ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்...*



 
 *🐓விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்கு           என்று அர்த்தம்.* *கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்.*
 
 *🐓சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிளறி அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.*
 
 *🐓மண்ணை கிளறி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.*
 
 *🐂ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.*
 
 *🐂அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.*
 
 *💊அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.*
 
 *👑ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.*
 
 *👑கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன், பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை..*

Offline Ishaa

  • Hero Member
  • *
  • Posts: 522
  • Total likes: 807
  • Karma: +0/-0
  • Faber est suae quisque fortunae
👏👏👏
Niraya olithu veithulle vishayangal  irukku sis.

Namma veedula ithuvarai. Oru katchal thadumal vantha kudi neer vidhe siranthe marunthu ille.


 
« Last Edit: February 05, 2023, 03:23:51 PM by Ishaa »