நிலவிற்கும் பூமிக்கும் அத்தனை தூரம் இருப்பினும்...
குறுகிய வெளிச்சமே கிட்டுகின்ற போதும்...
நிலவினை ரசிக்க மறுத்திடும் மானிடன் உண்டோ...
எட்டுகின்ற தூரத்தில் இருக்கும் உன்னையும்....
எட்டா தூரத்தில் இருக்கும் நிலவினயும் ..
ஒருபோதும் ரசிக்க மறந்ததில்லை...!
காரணம்..
தொலைதூரம் இருந்த போதும் நிலவு சொல்லும் பாடம்...
விடியும் பொழுது உனக்கே...!
நீ சொல்லும் பாடம்.. நிலவினை போல்....
நம் கஷ்டங்களும் ...
ஓர் நாள் (வளர்பிறை அன்று) வளர்ந்து வரும்...
ஓர் நாள் (தேய்பிறை அன்று) தேய்ந்து போகும்...
ஓர் நாள் ( அமாவாசை அன்று) காணாமல் போய் விடும்....
ஓர் நாள் (பௌர்ணமி அன்று) பிரகாசமாய் தோன்றும்...!
கேளடா கண்ணாளனே..!
நிலவும் நம் வாழ்வும் ஒன்றே...!!