அனைவருக்கும் வணக்கம்,
நான், உங்கள் BLUESEA இந்த பதிவேட்டில் அடியேன் இன்று தான் முதல் முதலாக இந்த இசை தென்றல் நிகழ்ச்சியில் என் மனதிற்கு மிகவும் தொட்ட பாடலை பதிவிடுகிறேன்....!
திரைப்படத்தின் பெயர் : காதல் கொண்டேன்
காதல் கொண்டேன் ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம், 2003 இல் வெளிவந்தது. தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது.
கதையின் சுருக்கம் : நீண்ட நாட்களாக தான் தனது
பால்ய வயதில் தான் நண்பர்களுடன் தங்கியிருந்த அனாதை காப்பாகத்தில் தனது உயிர் தோழிக்கு ஏற்பட்ட ஓர் அநாச்சாரமான நிகழ்வை பொறுத்து கொள்ள முடியாத அந்த சிறுவன் அவளுக்கு ஏற்பட்ட அவலத்தை தாங்காமல் அவளை இக்கதி ஆக்கிய அனைவரையும் கொன்று சீர்திருத்த பள்ளியில் பயின்று தனது மேல்நிலை பள்ளி படிப்பை முடித்துக்கொண்டு கல்லூரி வாய்ப்புகள் கிடைக்க காத்துயிருப்பான். அவனை, தூக்கி வளர்த்து அவனுக்கு கல்வியை கற்பித்து நல் வழி படுத்திய ஓர் பாதரியார் மட்டுமே அவன் உலகம் என்று நினைத்து இருந்த அந்த வாலிபன் அவன் கல்லூரியில் சேர்ந்து நன்றாக படிக்க விழைந்து சேருகையில் அவனை அக்கல்லூரி மாணவர்கள் வேண்டுமென்றே ஒதுக்கி வைத்தும் கிண்டல் கேளிகள் செய்தும் அவனை துன்புறுத்தும் நிலையில் ஓர் பெண்ணின் குரல் மட்டுமே அவன் ஆதாரவாக பேசும்... அவளயே, அவன் தான் தாயாகவும், அவளுக்கு அவன் சேய்யாகவும், தாரமாகவும், அன்பியாகவும், காதலியாகவும், உயிராகவும் நினைத்து அவன் அவளே உலகம் என்று நினைத்து வாழ்ந்து வருகையில் அவள் இன்னுரு பையனை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவனிடம் கூறுகையில் அதை பொறுத்து கொள்ள மனம் வராத இந்த வாலிபன் அந்த பையனை கொன்று விட்டு இப்பெண்ணை அடைந்து விடலாம் என்று அதற்குரிய வேலைகள் செய்து பிறகு ஓர் கட்டத்தில் தான் விருப்ப பட்டது தான் நிறைவேற வில்லை தனக்கு எல்லாமாக இருக்கும் அப்பெண் விருப்பத்தையாவது தன்னால் பூர்த்தி செய்திட வேண்டும் என்று அவன் அவளை நோக்கிக்கொண்டே தன் காதலை வெளிப்படுத்திக்கொண்டே அவளுக்கு பிடித்தவனை கரை சேற்று அவன் உயிர் நீப்பான்...!! இப்படியும், ஒரு காதல் கொண்டான் அவனின் கதையே....!!! ❤❤❤
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : கே. விமலகீதா
கதை : செல்வராகவன்
இசை : யுவன் சங்கர் ராஜா
நடிப்பு :
தனுஷ்
சோனியா அகர்வால்
நாகேஷ்
சுதீப்
தானியேல் பாலாஜி
சிறீகாந்த்
ஒளிப்பதிவு : அர்விந்த் கிருஷ்ணா
படத்தொகுப்பு: வி. டி. அவிநாஷ்
எனக்கு, மிகவும் பிடித்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இதுவே....
"நெஞ்சோடு கலந்திடு நீ உறவாலே...." என்ற பாடல் ❤❤❤❤ மிகவும் மனதில் நின்று தொட்ட பாடல்... அதிலும், அப்பாடலின் வரிகள் சில கூற விழைகிறேன்....
தாயாக நீதான் என் தலை கோத வந்தாய் உன் மடி மீது வேண்டும் என் ஜெனனம் வேண்டும் ❤❤❤
❤❤காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவிற்கு உலகத்தில் பெயர் இல்லை❤❤
என்ற வரிகள் மிகவும் என் மனதை தொட்ட வரிகள்....!
இந்த பாடல் வரிகளை நான் இந்த சமையத்தில் நமது FTC குழமம் மற்றும் செயலியின் பயன்பாட்டில் இருக்கின்ற அனைத்து அன்பு வாய்ந்த பெண்டீர்களுக்கும், தாயாகவும், சேய்யாகவும், தமக்கையாகவும், தாரமாகவும், அன்பியாகவும், தோழியாகவும், காதலியாகவும் இருக்கும் அனைவருக்கும் ஓர் இனிய சமர்ப்பணத்தை செய்கின்றேன் 🙏🙏🙏 என் அன்பு தோழிகளே...! உங்களின் அன்பு அடியேனுக்கு கிடைத்தது ஓர் பாக்கியம் என்றே கூறுவேன்...! உங்கள் அனைவரின் நட்பு கிடைத்ததில் நான் மிகவும்,பெருமையாக கருதுகின்றேன் ❤❤
உங்கள்ளின் இன்றியமையா நட்பு என்னுடன் என்றும் தொடர வேண்டும் என்று இந்த பாடலின் மூலமாக தங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் ❤🙏❤
என்றும் அன்புடன்,
உங்கள் அன்பன் ------> நீல கடல்{BLUE SEA}❤❤❤