Author Topic: மாங்கனி - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்  (Read 46487 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
//மொகூரின் வளம் அருமை
குறுவட்ட நிலவாக சிறுவண்ண மலராக
குவிந்த மோகூர்
தெருமுட்டும் தென்னைமரம் நறுகொட்டும் சோலைவனம்
செரிந்த வாகூர்
பருகற்ற முகத்தவரும் பால்வெள்ளை மனத்தவரும்
பயந்த பாகூர்
வெறுப்புற்று தேவதைகள் விண்விட்டு கணவருடன்
விரும்பி ஏகூர்//
 இந்த நாலு ஊர்ல உங்க ஊரு எதுங்க ஆதி ஒரு சில பேர் அவங்க ஊற உஸ் பனி எழுதுவாங்க,
//வறுமையென்று வந்தவர்க்கு மறுக்காமல் மோகூரார்
உளதை ஈவார்
மறுக்காமல் தருவோர்கள் வளமாக இருந்தாள
திருடர் இல்லை
பெருவான குணமான பெரியோர்கள் ஊராள
பொய்யும் இல்லை
ஒருமாது உறவாக உயிரேற்ற விலைமாது
குலமே இல்லை//
என்ன ஒரு விளக்கம் மொகூராரின்  சிறப்பு, திருடர் இல்லாத மோகூர், பொய் புரட்டு இலாத ஊர், ஒருவனுக்கு ஒருத்தியென கோட்பாடோடு வாழும் ஊர் (விலை மாதுக்கே இடமில்லா ஊர்), என்ன ஒரு சிறப்பு

//  தண்டையணி மங்கையர்கள் தண்ணழகை கண்டுமனம்
தாவி ஓடும்
கொண்டையிடை பூக்களது கொங்கைவிட கூர்மையென
சண்டைப் போடும்
நீண்டமதில் கோட்டையதில் நீந்தமுகில் கொத்தளமோ
வானம் மோதும்
மூண்டுஎழில் ஆண்டுவரும் மோகநகர் முன்னிலையில்
சொர்க்கம் தோற்கும்//

மங்கையின் பெருமை அருமை பெண்ணை நேர்த்தியாக வளபடுதி இருகிறீர்கள், இந்த வரிகளிலே பெண்ணின் வழமையை காணும்போது எங்கே மோகுரின் தெரு வீதிகளில் நடந்து செல்கின்ற கற்பனை என்னுள் (எதுக்குன்னு கேக்றீங்கள... சைட் அடிக்கத்தான்)

// அந்தநகர் ஒருபுறத்தில் ஆம்பற்பூ பூத்திருக்கும்
அழகு ஏரி
வந்தமரும் நாரைகளோ வாய்வழிய உண்டுசெலும்
மீன்கள் வாரி
மந்தமுகில் எப்பொழுதும் மழைப்பெய்யக் காத்திருக்கும்
வானம் மூடி
பந்துஎன புல்வெளியில் பகல்பொழுதில் கூடவிழும்
பனிகள் தூரி//
ஊரின் வளம் அதைவிட பெருமை வளமான பகுதியாக கண்முன் கொண்டு வந்து நிருதிருகிரீர்கள் ஆதி...இங்க எனக்கு ஒரு இடம் பாருங்கப்பா நான் அங்கேயே குடி போய்டுறேன்

//   விடிகின்ற வேளையதில் விரிந்திருந்த வெண்ணிலவும்
விளக வாடும்
படிந்திருந்த இரவிருளின் மடியிருந்த விண்மீன்கள்
பகலைச் சாடும்
முடிவின்றி இருக்கின்ற முதிராத இயற்கைக்கே
விளங்கா போது
பிடிநெருக்கம் நெகிழாமல் பிணைந்திருக்கும் இளசுகளை
சொலவா வேண்டும்!//
வெண்ணிலவே பிரிய மனமில்லாம பிரியும் பொது
இணைந்திருக்கும் இளசுகள் மட்டும் எப்டி ... நல வளமான வரிகள்......

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
எங்க ஊர் பெயர் எல்லாம் பயன்படுத்தல சுதர்சன்

வார்த்தைகளை புதிதாக உருவாக்கவும், அடி எதுகையோடு எழுதவும் எண்ணி அப்படி எழுதினேன்


மோகூர் - நாடின் பெயர்..

வாகூர் - வாகான ஊர்

வாகு + ஊர் - வாகூர்

பாகூர் - பாகு போன்ற ஊர்

பாகு + ஊர் - பாகூர்

ஏகூர் - ஏகும் ஊர்

ஏகு + ஊர் = ஏகூர்

பின்னூட்டதுக்கு நன்றி சுதர்சன்
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அறிவன் வேண்டுகோள்

அறுசீர் விருத்தம்



போது கொய்த பூப்போன்ற
...புன்சி ரிப்பு உடையவளே
தாது அன்ன நறுமணக்கும்
...தரள மேனி தண்ணிலவே
மாது மாங்க னிவீரஏறு
...மனையாள் தென்ன ரசிக்காதல்
ஓதும் காவி யமும்சிலையும்
...புனைய நல்கு அனுமதியே
!

ஏற்றாள் பொன்னரசி

அறுசீர் விருத்தம்


அறிவனவன் கருத்தை ஏற்றாள்
...அதைத்துவங்கும் திருநா ளையும்
அறிவித்தாள் பெருகிப் பொங்கும்
...பௌர்ணமிநா ளன்றில் மூவர்
பெருங்காதல் சிறப்பும் ஏத்தும்
...பெருங்காவி யமெழில் சிற்பம்
வருங்காலம் அறிந்து வாழ்த்த
...வடிவெழிலாய் வடிப்போம் என்றாள்.


அலர்ந்தது நிலா

வானவில் கரைத்து வரைந்த போதாய்
ஆணவன் விரல்கள் அலைந்த போது
நாணவில் விரிந்த நங்கை முகமாய்
மாணவன் போல மையலில் மாதின்
பூநகில் மார்ப்பில் புனைந்த தொ(ய்)யிலில்
ஆனவில் போல அலர்ந்த தந்தி..

பாடும் இசைஞர்கள் ஒருபுறம் பரதம்
ஆடும் மஞ்ஞைகள் ஒருபுறம் வாள்கள்
சூடிய வீரகள் ஒருபுறம் பைந்தமிழ்
ஏடேந்திய புலவர்கள் ஒருபுறம் பாவையர்
கூடும் பக்கங்களில் அதிக மாய்நட
மாடும் ஆடவர் கூட்டம் ஒருபுறம்

மொட்டிள விரல்கள் கட்டிளம் பெண்கள்
தொட்டிள பூக்களில் கட்டியத் தோரணம்
நெட்டிள வீதியில் நித்தில வாரணம்
பட்டிள இதழ்கள் படிக்கும் ஆரணம்
எட்டிள உலகும் எட்டியே நிற்கும்
எட்டிட முடியா எழிலின் பூரணம்..

அப்போது..

சுழலும் பூமியில் சூரியன் வற்ற
கழலும் பகலை கரைத்தது இரவு
தழலும் வானின் தனிமையைப் போக்க
மலரென விழிகளை அவிழ்த்தன விண்மீன்
குழலில் நீவும் நெய்யினை போல
குழுமும் இருளில் குழைந்தது நிலவு..
அன்புடன் ஆதி

Offline kanmani

aadhi romba sirapu vaaindhadhu unga pathipu .. thodarungal

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்


எனக்கு உங்கள் கவிதைகளை படிக்கும் போது.. அதாவது இப்பகுதியை ....சரித்திர கதாசிரியர் சாண்டில்யன் நாவல்கள் படிகின்ற உணர்வு .. ஏனெனில் சம்பவங்களையும் பெண்ணையும் வர்ணிக்க .. அவருக்கு நிகர் அவரேதான் .... அவரது கதைகளை படிக்கும் போது எனக்கு என்னமோ ... அந்த இடத்திலே வாழ்வது போன்று ஒரு உணர்வு தோன்றும் .. அதே போல் இருக்கிறது ஆதி  உங்கள் இந்த பகுதி வாழ்த்துக்கள்
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
சாண்டில்யனை வாசிக்க வாய்ப்பு அமையவில்லை, கல்கியின் சிவகாமியின் சபதத்தையும், பார்த்திபன் கனவையும் வாசித்திருக்கிறேன், சிவ‌காமி ச‌ப‌த‌ம் போல வேறு எந்த‌ புத்த‌க‌த்தையும் வெறித்த‌ன‌மாக‌ ப‌டித்த‌தில்லை, எனினும் அதுவெல்லாம் ப‌த்துவ‌ருட‌ங்க‌ளுக்கு முன், இந்த இரு நாவல்களை தவிர வேறு சரித்திர நாவல்கள் வாசித்ததில், மாங்கனியை பொருத்தமட்டில் காட்சி விவரணையில் எனக்கு திருப்தியே இல்லை, இன்னும் அழகாக சொல்ல முடியும் என்றே ஒவ்வொரு பாடல் எழுதிய பிறகும் தோன்றுகிறது, ஆனால் பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்

இப்போது நான் பதிந்துவரும் பாடல்கள் முன்பே எழுதியதென்றாலும், மீள் வாசிப்புக்கு உட்படுத்தையில் தோன்று நெருடல்களையும், குறைகளையும் களையவே முயற்சிக்கிறேன்

கோயில் குணத்தாள் எல்லாம் முன்பு எழுதும் போது இல்லை

வார்த்தைகளை கையாளும் வித்தையையும் நுணுக்கத்தையும் நிறைய‌ கற்று கொள்ள உதவியாக இருக்கும் என்பது கூட மாங்கனி எழுத ஒரு காரணமாக இருந்தது

கதை கண்ணதாசனுடையது, அந்த குதிரையை நம்ம திசைக்கு ஓட்டி செல்வது மட்டுமே என் வேலை என்பதால், குதிரையை ஓட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று நம்புகிறேன்
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

 ஆதி நன்று ... சாண்டில்யன் நாவல்களும் சரித்திர கதைகள் தான் .... ஒரு முறை படித்து விடர்கள் என்றால் அவர் நாவல்கள் மீது பித்தாகி விடுவீர்கள் நமது பொது மன்றத்திலேயே நாவல்கள் பகுதியில் நான் பிரசுரித்துள்ளேன் .. ஜவனராணி , நாக தீபம் எனக்கு பிடிதா மிக சிறந்த நாவல் அதுக்குள் .... கடந்த நூறாண்டுகளில் வாழ்ந்த மன்னர்கள் அவர்தம் போர் திறமை ஆஹா படித்து பாருங்கள் நீரம் கிடைளும் போது


http://www.friendstamilchat.com/forum/index.php?topic=3108.0
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஓ மன்றத்திலேயே இருக்கா, அப்படியென்றால் நிச்சயம் வாசிக்கிறேன்

சுட்டி கொடுத்தமைக்கு நன்றிங்க‌
அன்புடன் ஆதி

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - காவியம் துவக்கம்
« Reply #24 on: September 11, 2012, 12:17:26 AM »
துவங்கிக காவியம்

நிறைநிலவின் ஒளிவிரிந்து ஓவியம் போட‌
பிறையுதடு பிரித்துரைத்தாள் காவியம் பாட‌
கரையுடைந்த மடைப்போன்ற நாவியம் கொண்ட‌
திறப்புலவர் படையெடுத்தார் மாவியம் தீட்ட‌


வில்லவன் விழா எடுத்தான்

தொல்லவர் வடவரை துமைத்து இமயத்தில்
கல்எடுத்து கங்கையில் கழுவி ஏற்றி
தலையில் சுமக்க வைத்து கொணர்ந்து
சிலையொன்று கண்ணகிக்கு சமைத்த நாளின்
நினைவாய் வில்லவன் விழாஎடுத்தான்; வற்றா
சுனையென அழகு சுரக்கும் செங்கனி
மாங்கனி அன்று அரங்கேற்றம் செய்தாள்
தேங்கனி பலமனங்களில் சீற்றம் செய்தாள்



மாங்கனி அழகு

மஞ்சள் அரைத்து பனியில் தோய்த்து
கொஞ்சம் பொன்னில் குழைத்து; பொங்கும்
வெஞ்சில் மதியில் விளாவி; மென்முகில்
பஞ்சும் அளாவி பகலில் படரும்
செஞ்சுடர் சாந்து சேர்த்து விரவி
எஞ்சி இருந்த எல்லா அழகையும்
வஞ்சம் இன்றி வார்த்து வனைந்தானோ
வஞ்சி வனப்பை வான சிலைஞன்
விஞ்சி பகையை வெருட்டிய வேந்தரும்
தஞ்ச முறுவர் தப்பி தவறி
அஞ்சுக மேனியை கொஞ்சம் பார்த்தால்
மிச்சம் மீதி இல்லாமல் போவர்!


அழகு வழியும் அமுதப் பாவை
அளந்து வைத்து அரங்கம் நுழைந்தாள்
இளகும் நெஞ்சார் இழந்தார் தன்னை
உளத்தில் ஈரமற்றோர் உருகினர் வெண்ணையாய்

தீங்கனி தேனழகில் சிந்தனை சிந்த
பூங்கனி பொன்னழகை பாடஒரு புலவன்
வெட்டி மறையும் மின்னலிலும் வேகமாய்
சட்டென எழுந்தான் சரியாக நேர்த்தியாய்
கட்டாத மாலையாய் கவிதை பூக்கள்
கொட்டினான் மயக்கதில் குழறினான் உளறினான்




எழுசீர் கும்மி - சிந்து


குழையாட காதில் குழலாட பூக்கள்
குரலோடு வந்து குயில்பாடும்
அலையாட மார்ப்பில் அலையாக விழிகள்
அலைமோதி ஆங்கே அதிலாடும்
சுளையான உதட்டில் சுவையான சாறும்
சுகப்போதை ஊற வழிந்தோடும்
விளையாத பூவாய் விரியாத அழகில்
விடியாத விரக இழையூடும்


(வேறு)

வண்ணமற்ற ஒருமடல் பூவா?
வண்ணத்து பூச்சியா இமைகள்
வளராத பிறைகளின் இரட்டையா ?
வளைந்த மின்னலா புருவம்
விறைத்த வில்லில் கணையாய்
முறைத்துப் பார்க்கும் தனங்கள்
நிறுத்த நயகடை எடையாய்
குறைந்து போன இடையாள்
நிலவாலுன் தாய்க்கரு உற்றாளோ
நிலவையுன் தாய்க்கரு உற்றாளோ
என்றான்; பிறகென்ன சொல்ல புரியாமல்
நின்றான் நிலவை பார்த்த வாறு..


தொடரும்...
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #25 on: September 11, 2012, 06:24:50 PM »
Quote
மாங்கனி அன்று அரங்கேற்றம் செய்தாள்
தேங்கனி பலமனங்களில் சீற்றம் செய்தாள்

பாவையர் மனதில்தானே ... இவளை எண்ணி சீற்றம் ...ஹஹாஹ்

Quote
வான சிலைஞன்



பிரமனுக்கு புதிதாய் ஒரு பொருத்தமான பெயர் ,  ஆஹா பிரம்மனுக்கு மூடு வந்து இவளை படைத்திருப்பான் ...


Quote
சட்டென எழுந்தான் சரியாக நேர்த்தியாய்
கட்டாத மாலையாய் கவிதை பூக்கள்
கொட்டினான் மயக்கதில் குழறினான் உளறினான்
;D ;D



Quote
குழையாட காதில் குழலாட பூக்கள்
குரலோடு வந்து குயில்பாடும்
அலையாட மார்ப்பில் அலையாக விழிகள்
அலைமோதி ஆங்கே அதிலாடும்
சுளையான உதட்டில் சுவையான சாறும்
சுகப்போதை ஊற வழிந்தோடும்
விளையாத பூவாய் விரியாத அழகில்
விடியாத விரக இழையூடும்



எனக்கு பொறமை வருகிறது என்னை விட அழகாய் இருப்பாள் போலும்


 >:( >:( >:( >:( >:(



அருமை ஆதி ... பெண்களை வர்ணிப்பதில் கவிஞ்சர்கள்  ம்ம்...... ;D
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - துவங்குக ஆடல்
« Reply #26 on: September 11, 2012, 06:26:58 PM »
அடுத்தொருவன் எழுந்துநின்று அழகை பார்த்து
கொடுத்தொன்றே பழகியகொ டைஞரும் கூட‌
நெடுங்கைநீட்டி உன்னிடம்யா சிப்பார் உள்ளம்
எடுத்துனக்கு அள்ளிதருவார் தன்னை கஞ்சர்

பித்தனென்று பிணக்காட்டு சாம்பல் பூசி
செத்தமண்டை ஓடேந்தி புலிதோல் போர்த்தி
கொத்துமுடி லிங்கபோல சடையாய் பூட்டி
ஒத்தையிலே உலவுசிவனும் உன்னை கண்டால்
விறைப்பையெலாம் விட்டுவிட்டு விசும்பின் கண்டன்
முறைப்பையனாய் உனக்காக முயற்சி செய்வான்
கறைநிலவை சடையிருந்து கழட்டி வீசி
பிறைநுதலை சூடிவிட பிரியம் கொள்வான்

ஆல்இலையில் பள்ளிகொள்ளும் மாலும் உன்றன்
பால்விழியின் பரப்பிலொரு படுக்கை கேட்பான்
காலடியின் சுவட்டுமண்ணை அள்ளி கொஞ்சம்
சோலையிலே பட்டிருக்கும் செடிகள் மீது
காலையிலே தூவிவிட்டல் பசுவை ஊறி
மாலையிலே பூத்துவிடும் உடலும் தேறி
காவ‌ல‌ரை க‌ள்ள‌வ‌ராய் மாற்றும் அழகே
கோவலராய் எத்தனைபேர் ஆக உளரோ
 


துவங்குக ஆடல்

சேரன் அமைச்சன் அளும்பிள்வேல்; அவன்மகன்
வீரத் தளபதி அடலேறு; வில்லவன்
மனையாள் மாதரசி; மாசறு பொன்னிற்கு
இணையான சான்றோர்; தூசறு உள்ள
முடைய அரசியல் மேதைகள்; நீசரைப்
புடைக்கும் மறவர்; புலவர், கொடைஞர்
கொலைஞர், மக்கள் அனைவரின் சுற்றும்
விழியின் மைய புள்ளியாய் மாங்கனி
இருந்தாள்; அடலேறு காதல் மையலில்
இருந்தான்; யாரும் அறியாமல், இறக்காமல்
இறந்தான்; நெஞ்சை இளையவன் துறக்காமல்
துறந்தான்; காதல் துறவி யானான்

மதப்புரவி களடக்கும் மறவன் காதல்
மதம்தழுவி னான்;மனப் புரவி கொண்ட
மதத்தை அடக்க முடியாமல் தோற்றான்
மதம்முற்ற மனதை மதத்தில் ஆர்த்தான்

பட்டுநிலா கிரணம் படரும் சத்தம்
எட்டு திசையும் எதிரொ லிக்கும்
அமைதி மொட்டு விரியும் ஒலியும்
இமைகள் முட்டும் ஓசையும் கூட
தெளிவாய் கேட்கும் திருப்பொழுதில் சேரன்
விளித்தான் துவங்குக ஆடல் என்றே!


மாங்கனி ஆடும் அழகு

வணங்கும் அபினயம் ஒன்று வைத்தாள்
மனக்குடம் நிறைந்தவரும் தழும்பினர் திங்கள்
வலக்கரம்தான் நீட்டினாள் உளக்குளம் பாதி
கலங்கின; இடக்கரம் பிறகு மடக்கினாள்
இருந்தவரில் மீதி முடங்கினர்; தாம்தீம்
என்றவளாட தத்தைப்பின் விழிகள் ஓட
இன்றுநாம் தகர்ந்தோம் என்றுசிலர் வாட
தத்தோம் என்றுகால் தூக்க மீண்டும்
செத்தோம் எனபலர் வீழ; முடித்தாள்
மாங்கனி; அவையோர் மனங்கள் எல்லாம்
ஏங்கின இன்னும் ஆட வேண்டி..
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #27 on: September 11, 2012, 06:41:26 PM »
Quote
பித்தனென்று பிணக்காட்டு சாம்பல் பூசி
செத்தமண்டை ஓடேந்தி புலிதோல் போர்த்தி
கொத்துமுடி லிங்கபோல சடையாய் பூட்டி
ஒத்தையிலே உலவுசிவனும் உன்னை கண்டால்
விறைப்பையெலாம் விட்டுவிட்டு விசும்பின் கண்டன்
முறைப்பையனாய் உனக்காக முயற்சி செய்வான்
கறைநிலவை சடையிருந்து கழட்டி வீசி
பிறைநுதலை சூடிவிட பிரியம் கொள்வான்

ஆஹா அந்த பரமனையும் விடவில்லையா ...

Quote
காவ‌ல‌ரை க‌ள்ள‌வ‌ராய் மாற்றும் அழகே
கோவலராய் எத்தனைபேர் ஆக உளரோ
 


பெருமாளையும் விடவில்லை ...  உன்மத்தம் கொள்ளும் அழகு ... அருமை


 
Quote
அடலேறு காதல் மையலில்
இருந்தான்; யாரும் அறியாமல், இறக்காமல்
இறந்தான்; நெஞ்சை இளையவன் துறக்காமல்
துறந்தான்; காதல் துறவி யானான்



இந்த காலமல்ல எந்த காலமும் இந்த ஆண்கள் இப்டிதான் ஒருத்தியை அழகாய் இருக்க விடமாட்டார்கள் ...

என்ன அழகு வர்ணனை .. உவமான உவமேயங்கள் அருமை ஆதி ... தங்கள் கவிபுலமை பார்த்து ..ஆச்சர்யபடுகின்றேன் ... தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #28 on: September 11, 2012, 08:15:19 PM »
சிவனும் திருமாலையும் பதிவிடுவதற்கு முன் தான் எழுதினேன்

கண்ணதாசன் இக்காவியத்தை எழுதுகையில் அவன் திராவிட இயக்கத்தில் தீவிரமாய் இருந்தான், அதனால் கடவுள் மறுப்பாளனாய் இருந்தான்

இந்த காவியத்தில் அந்த வெளியை நான் பயன்படுத்திக் கொண்டேன்

இன்னொன்று, பெண்களின் விழிகளை ஆயுதமாகவே வர்ணித்திருக்கிறோம் ஏன் அரணாக வர்ணிக்க கூடாது என்று நினைத்ததின் பலனே திருமால் உள்வந்தது

ஒவ்வொரு நான்கு ஊழியின் முடிவிலும் பிரளயம் உண்டாகி யாவும் அழியும், அச்சமயத்தில் பிரம்மனும் அழிந்துவிடுவான்

சிவன் கய்லாயத்தில் இருப்பதாலும், திருமாப் ஆலிலை மீது பள்ளி கொண்டு வெள்ளத்தில் இருந்து தப்பிவிடுவார்கள்

ஆல் இலையை திருமால் பிரளய காலத்தில் தான் உயிர் பிழைக்கவே பயன்படுத்துகிறார், பிரளய காலத்தில் ஆல் இலையைவிட இவளின் விழி பாது காப்பானது என்ற பொருள் உள் வைத்து எழுதினேன்

மாங்கனியின் ஆடலை இன்னும் விரிவாய் விவரணை செய்யத்தான் எண்ணினேன் நேரமில்லாததால் ஒரு பத்தியோடு முடித்துக் கொண்டேன், எனினும் அவளின் ஆடல் அழகுதான் எனக்கு கொஞ்சம் திருப்தியாய் இருந்தது

கவிபுலமையை கை கொள்ளத்தான் இந்த முயற்சியே செய்து கொண்டு இருக்கேன், இன்னும் போக வேண்டிய தூரமும் கற்று கொள்ள வேண்டிய விடயமும் நிறைய இருக்கு

தலைப்பே மாங்கனி அப்படியிருக்கும் போது அவளை பற்றி சொல்லும் போது சும்மா சொல்லிவிட்டால் என்னாவது, அதனால்தான் வர்ணினைகள், வர்ணினையோடு சொல்லும் போது கொஞ்சம் தொய்வில்லாமல் இருக்குமில்லையா ?
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மாங்கனி - காவியம் துவங்கம்
« Reply #29 on: September 11, 2012, 08:34:51 PM »
பெண்களையே பொறமை கொள்ள வைக்கும் அழகு வர்ணனை ஆதி தொடருங்கள்