தேவையான பொருட்கள்:
காரட் - 1 கப் (துருவியது)
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்த மாவுடன் சேர்க்கவும்.
தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்து சாப்பிட்டு பாருங்க.