கவலைகளால் கண்ணோரம் உரசிப் பார்த்த கண்ணீர்த் துளியை கண்ட மேகமது கார் மேகமென உருவெடுத்து அதன் ஒற்றைத் துளியைக் கொண்டு தடவிக் கொண்டது மேனி எங்கும்,,,
மண்வாசணைகள் எங்கும் மங்காமல் பரவிச் செல்லும் விதத்தினை புலனங்கமான மூக்கு நுகர தரையில் கிடந்த பாதமது துள்ளிக் குதித்தன பேரானந்தமாய்,,,
தவளைகள் தாலாட்டுப் பாட தூரமாய் கூக்குரல்களோடு கைகோர்த்து களிப்பின் உச்சத்தில் கல கல வென்ற சிரிப்போடு குத்தாட்டமிடும் சிறுவர்கள்,,
ஓரப் பார்வையால் ஓரமாய் கண்காணித்த போது கலங்கிப் போயின என் இரு விழிகளும்,,..
மழலையாய் இருக்கையில் மாரி மழையில் தேங்கிய நீரில் மணிக்கணக்காய் பேப்பர் படகு இட்டு மகிழ்ந்த காட்சியும், மழையில் நனைந்தால் சளிப்பிடிக்கும் என்று அலரி அடித்துக் கொண்டு துரத்தி வந்த அம்மாவின் குரல்களும் இன்னும் நெஞ்சோரமாய் கனத்துக் கொண்டுதான் இருக்கின்றன..
சிறு குளிக்குள் கால் புதைத்து என்னை காப்பாற்று நான் மூழ்கிவிட்டேன் என நண்பன் கூறுகையில் மீட்புப் படையில் வேலை பார்க்கும் மீட்பாளர்கள் என அணி வகுத்து செல்லும் அட்டகாசங்களும்...,
ஓடையில் ஓரமாய் தவளை முட்டையில் பொறிந்த குஞ்சுகளை மீன் குஞ்சு என வெள்ளெமன வாசலில் பரவிய நீரில் இட்டு தவளைக்கு காவலிருக்கிறோம் என்று அறியாமல் இளைத்த குறும்புகளும் நினைக்கையில் இதல் குவிய மறுக்கிறது
சற்று தலை கவிழ்ந்து நிமிருகையில் அனைத்தும் விம்பமென கண் முன் அரங்கேறுவது அந்த வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கத்தை விதைத்து விடுகிறது..