நட்பே உனக்காக..!
நட்பு பாராட்டினாய் என்னிடம்
நானும் நட்பு கொண்டேன் உன்னிடம்..!
உனதன்பின் அரவணைப்பில் மூழ்கவைத்தாய்
நானும் உச்சி குளிர்ந்து மூழ்கினேன்..!
பெற்றவை யாவையும் பல மடங்காக தந்தேன்
அதை நீ மதிக்க மறந்தாய்..!
தன்னடக்கம் என்று சமாதானம் கொண்டேன்
அதில் என் தன்னிலையை மறந்தேன்..!
காலங்கள் பல கடந்தன..!
காட்சிகள் இன்னும் மாறவில்லை
அனால், மாறியது தன்னடக்கம்..!
பாராட்டிய நட்பு இங்கே பாராமுகமாக இருக்க
வெப்பத்தின் விளிம்பில் நான்..!
உனது சுட்டெரிக்கும் செயல்களை எண்ணி
மனது தீக்குளிக்கின்றது..!
அடை மழையாலும் தணிக்க முடியாத
பாலைவன தீப்பிழம்பாய் மாறுகிறது..!
செல்லும் பாதை அறியாமல்
செக்கு மாடாய் நிற்கின்றேன்..!
நட்பில் புதியரொரு அனுபவம் எனக்கு
புதியதாக பிறந்தது..!
புதிய பாதையும் பிறக்குமென்று
கண்ணை மூடி நடக்கிறேன்..!
நினைவிலுள்ள கார்மேகங்களும் கரையுமா..?
கண் திறந்தால் உன் நினைவுகள் அழியுமா ..?
நட்பே, அழியும் நினைவை நீ தரவில்லை
அழியப்போவது நட்பும் இல்லை..!
மாற்றங்கள் பல இருந்தாலும், நட்பே
மாற்றிக்கொள்பவன் நானில்லை..!
இதை புரிந்துகொள்வாய் என நம்புகிறேன்
நட்பை புதுப்பிக்க ஏங்குகிறேன்..!
அழியா நினைவுகளுடன் என்றென்றும்
நான்..!
இவன்
சரவணன்