FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: Global Angel on November 08, 2012, 06:27:54 PM

Title: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:27:54 PM
படம் : கடலோர கவிதைகள் (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம், ஜானகி
பாடல்வரி : வைரமுத்து


போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ

அலைகள் அங்கு அடிக்கும் துளிகள் இங்கு தெறிக்கும்
பள்ளி பாடம் ஒப்பித்தே நான்
காதல் பாடம் கற்பித்தேனா
மாயம் தானா?

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:29:07 PM
படம் : கண்ணுக்குள் நிலவு (2000)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்,
பாடலாசிரியர்: பழனி பாரதி



ரோஜா பூந்தோட்டம்....
காதல் வாசம்... காதல் வாசம்...

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

விழியசைவில் உன் இதழ் அசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசை தட்டு சுழலுதடி

ஓ... ஓ... ஓ...

புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் என்று உன் காதலில் கிடைத்ததடி

ஓ... ஓ... ஓ...
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்


உன்னை நினைத்து நான் விழிந்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்

ஓ... ஓ... ஓ...

நிலவடிக்கும் கொஞ்சம் வெயில் அடிக்கும்
பருவ நிலை அதில் என் மலருடன் சிலிர்திருந்தேன்
ஓ... ஓ... ஓ...

சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:29:48 PM
படம் : பூவிலங்கு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட....


அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாட பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
அடி செவ்வாழையே...யே.. யே
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து


மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே...யே...யே
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
ஏ... தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:31:03 PM
படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து



தன நன.... தன நன..நன....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
தன நன... நா... தன நன..நன.... நா...
தன நன... நா... தன நன..நன.... நா...


ஹேய்... ஹோ... பபப.... பபபப.....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே


புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்


மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....

லல... லா... லல... லலலா....
நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்


வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
லல... லா... லல... லலலா....லல... லா... லல... லலலா...



Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:32:05 PM
படம் : முத்துகாளை (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் வரி: வாலி



ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..

அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே.. யே... யே..
தொங்கும் மணி கட்டும் தேரா
தொங்கும் மணிமுத்து ஆறா
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடை வெட்டி போறா
கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே.. யே... யே..


புது வெள்ளம் வத்தி போகும் நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கைய போட்டு அன்பு கத பேசு விஸ்தாரமா


கதையெல்லாம் சொல்ல சொல்ல தக்கப்படி கூலி தந்திடனும்
அதை நானும் அள்ளி கொடுக்க நேரம் காலம் கூடி வந்திடனும்

உலையும் வச்சி இலையும் வச்சி வாயத்தான் கட்டுறியே

வளையல் கைய வலச்சி போட வாய் ஜாலம் காட்டுறியே

நெஞ்ச துருவி துருவி துளைய போட்டு பருவ பசிய ஊட்டுறியே

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டதிந்த மயிலே ஹே.. ஹே.. ஹே

மண் வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி
அது போனது போனது போனதடி
நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி
அது வந்தது வந்தது வந்ததடி
இது சரியான் ஜோடி
விலகாது கூடி... இனியும்
ஓஓ...... ஓஓ.... ஓஓ....

மனசுக்குள் உன்னத்தானே சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்

உசுருக்குள் உன்னத்தானே பத்திரமா பூட்டி வச்சிருகேன்

இரவெல்லாம் சேதி சொல்ல வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்

உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி நானும் பாடுபட்டுருக்கேன்

காத்திருக்கேன் சேதி சொல்லு பேசாத ஆசை மனம்

கழுத்தில் முணு முடிய போடு பேசாது சாதிசனம்

இந்த உலகம் அறிய உறவும் புரிய விரகம் தணிய வேளை வரும்

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பது கண்டதிந்த மயிலே
தொங்கும் மணி கட்டும் தேரு
தொங்கும் மணிமுத்து ஆறு
பதியம் போட்டாலே பாரு
இங்கு உன விட்டா யாரு

கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே ஹே.. ஹே... ஹே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:35:27 PM
படம் : முதல் வசந்தம் (1986)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து




ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு?
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா

மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுகுள்ளே ரெண்டு கண்ணு
 ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
 கண்ணுகுள்ளே மின்னும் மையி உள்ளுகுள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு
 நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே
 
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா


தண்ணியிலே கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனை கூட்டி வந்து அவனை அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்குமய்யா ஆசை வச்சா கிடைக்குமய்யா
ஆனா கிடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவ நெஞ்சு யாவும் வஞ்சமே

 ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு?
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:36:06 PM
படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா


யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்


நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
நீ போன பாதை நான் தேடும் வேளை
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்


இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம் தான் வாழ்வின் துன்பம்
பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம் தான் வாழ்வின் துன்பம்
தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:36:56 PM
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து



புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:38:33 PM
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி



தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:40:05 PM
படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J. யேசுதாஸ்



ரஜினி அங்கிள்...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ
தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:41:20 PM
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: s.J.ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து



தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்


ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

லாலா லாலலாலா லால லால லாலா

கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்

ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:42:11 PM
படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்



செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:42:57 PM
படம்: ரிக்ஷா மாமா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி



எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்

இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்


யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:43:35 PM
படம்: நாடோடி பாட்டுக்காரன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி. ஸ்வரணலதா
இசை:இளையராஜா


காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே

என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை எண்ணாத நாளேது பூ மானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கு ஒரு கரைக் கட்டலாம்
காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கு வேலி கட்டலாமா
ஏ மண்ணில் வெச்சு மூடும் விதை யாவும் பயிராகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

காதலுக்கு கண்கள் இல்லை ராசா
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் ரோசா
காதலுக்கு கண்கள் இல்லை ராசா

தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று
சுடு வெண்ணீரில் விழுந்தாலே என்னாகும்
இளம்?? தண்ணீரில் ஆடும் இந்த ரோஜாப்பு
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பவுமே மனசில் ஒன்னு
எண்ணி எண்ணி நிறுத்தும் என்னை
கவிதை?? செய்வார் இங்கு யாரு
நல்ல துள்ளி வரும் காற்று தடைக் காற்று தயங்காது
எந்நாளூம் என் நேசம் மாறாதய்யா

காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:45:26 PM
இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1993




நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

( நிலவே முகங்காட்டு...

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:46:35 PM
Movie name: Chandra Lekha (1995)
Music: Ilaiyaraja
Singer(s): Unni Krishnan




அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே

பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி
கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:53:01 PM
படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்


கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணப் பார்க்கையிலே
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
(கூட்டத்தில..)

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மூட்டுது
என் ஆசை உன்னைத் தாளாட்டுது
பூங்குயிலே பூங்குயிலே உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடைல் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
(கூட்டத்திலே..)

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜா...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:54:20 PM
படம்: மகாநதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மகாநதி ஷோபனா, உமா ரமணன்



ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
(ஸ்ரீரங்க...)

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை நஞ்சை புஞ்சங்கள் தானடி
ஊர் வஞ்சம் என்ன கூருவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:55:19 PM
படம்: சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா



முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 06:58:30 PM
படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்



இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:00:42 PM
படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி



காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்
(காதோரம்..)

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
(நான் விரும்பும்..)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
(காதோரம்..)

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
(வானவில்லை..)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:02:12 PM
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி


நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:03:13 PM
படம் : செண்பகமே செண்பகமே
இசை : இளையராஜா
குரல் : ஜானகி , மனோ



வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது

வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன

பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..
நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..
நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..
நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..
ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..

வாசலிலே பூசணிப்பூ...

மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு
மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ
கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..
கேள்வி போல என்னை வாட்டுது
ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு
பள்ளத்துக்கு ஓடிவரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்
ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி
என்னை இப்ப கிள்ளாதே
போதும் போதும் கண்ணால்
என்ன கட்டி இழுக்கற செண்பகமே!

வாசலிலே பூசணிப்பூ...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:04:07 PM
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா


மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:05:02 PM
படம்: ராசாவே உன்னை நம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, P சுசீலா



ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்

முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலேதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் வீட்டில
உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்
என்னை வாட்டும் வெளியிலே
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே..
(ராசாத்தி மனசுல..)

செங்குருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேறும் இள நெஞ்சங்களை
வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா?
ஊருக்குள்ள சொல்லாததை
வெளியில் சொல்லித் தந்தார்களா?
வானம் போடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:06:32 PM
படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ


ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

(ஓ பாப்பா லாலி)

மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:08:16 PM
படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா




ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது


தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:09:22 PM
படம்: நாயகன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா



நீ ஒரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

(நீ ஒரு காதல் சங்கீதம்)

பூவைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:10:30 PM
படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ



குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
தொட்டால் சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குண்டு தொலைஞ்சிவிடும் பட்டா தெரிச்சிவிடும்
ஹோ ஹோ ஹோ ஹோய்
(குண்டு ஒன்னு..)

தாய்ப்பாலும் கெட்டுப்போச்சு என்ன பண்ணும் குழந்தை
வாய்காலில் தண்ணி இல்ல தண்ணியிலே மனுஷன்
சுட்டுப்புட்ட ஹீரோ நீதான் தட்டுக்கெட்டா ஜீரோதான்
வெட்டுக்குத்து நீயும் போட்டால் கட்சிக்குள்ள கோட்டாதான்
வீராப்பா மெரட்டி உருட்டும் ஊரெல்லாம் திருட்டு பயக
கெட்டாலும் சுட்டாலும் எல்லோரும் ராஜாங்கதான்
(குண்டு ஒன்னு..)

நெல்லு விளையும் நிலம் வீணாகிப்போச்சு
ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு
கெட்ட வேலையானா கூட துட்டு வந்தா தப்பே இல்ல
இஷ்ட்டப்படி விட்டா போதும் அப்பன் போல புள்ளயில்ல
குளிரெல்லாம் விலகிப்போச்சு எல்லாமே பழகிப்போச்சு
வெள்ளைக்கும் சொள்ளைக்கும் அண்ணான்னு சொல்வீங்களே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:11:07 PM
படம்: உடன்பிறப்பு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மனோ


ஏ சாமி வருது சாமி வருது வழியை விடுங்கடா
ஒரு பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா
(ஏ சாமி..)
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா

கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
(ஏ சாமி..)

அன்னாடந்தான் காத்து மழை
அச்சுறுத்தும் ஆத்தங்கரை
முன்னாலதான் வீற்றிருக்கும் சாமி இவந்தான்
கண்ணாலந்தான் கட்டிக்கலை
பிள்ளை குட்டி பெத்துக்கலை
எல்லாருக்கும் காவல் நிற்கும் ஈசன் மகந்தான்
சின்னஞ்சிறு மூஞ்சூறு
மன்னவனின் பூந்தேரு
பூலோகம் கொண்டாடும் ஒத்த கொம்பந்தான்
செய்யும் தொழில் வாடாமல்
தங்கு தடை வாராமல்
நாம் வாழ காப்பாத்தும் ஆனை முகம்ந்தான்
கொண்டுங்கள் மேளம் தட்டுங்கள் தாளம்
வந்தது பொன்னாளு
நீ தும்பிக்கை மேலே நம்பிக்கை வைச்சா
எப்பவும் நன்னாளு
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா

கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
(ஏ சாமி..)

விக்னம் தீர்க்கும் விக்னேஷ்வரா
கண கண கண கணபதி
இன்பம் சேர்க்கும் நம்போதரா
கண கண கண கணபதி
சங்கர சுக சங்கடஹரா
கண கண கண கணபதி
கொஞ்சிடும் எழில் கொஞ்சுர முக
கண கண கண கணபதி
பாலகன் வடிவேலவன் அவன் மூத்தவன் எங்கள் கணபதி
காலடி தொடும் சீலறை தினம் காப்பவன் எங்கள் கணபதி

அன்னாளிலே போட்டியிட்டு அம்மையப்பன் காலைத்தொட்டு
சுத்தி வந்து மாம்பழத்தை வாங்கிய சாமி
பின்னாளிலே வேல்முருகன் வள்ளியைத்தான் காதலிச்ச
கல்யாணம்தான் கட்டிவச்சு வாழ்த்திய சாமி
குட்ட குட்ட குனிஞ்சவனும் குட்டிக்கிட்டு கேட்டாக்கா
நாம் வேண்டும் ஆனந்தம் அள்ளிக்கொடுப்பான்
உச்சத்தில உசந்தவனும் முக்கிகளை போட்டாக்கா
மென்மேலும் முன்னேற பாதை வகுப்பான்
மந்திரம் போலே மன்னவன் பேரை நித்தமும் சொன்னாலே
உன் சங்கதியெல்லாம் நிம்மதிக் கொண்டு வாழ்ந்திடும் தன்னாலே
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா

கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:11:40 PM
படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா



கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி
அன்பே இன்று பொன்னான திருநாளடி நாளடி
தண்ணீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா
முத்துப் பல்லக்கே இந்த தத்தை ஆடி வர
(கண்ணே..)

கோடைக்காணல் சாரலில் ஆ..
கோடைக்காணல் சாரலில் குறுஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன் சூடிக் கொல்லும் நாளிது
ஒவ்வொரு நாளும் காமதேவன் தேர் வரும் ஓஹோ
உன்னுடன் யாவும் என்னை சேர்ந்த சீதனம் ஓஹோ
அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம் ஓஹோ
உன்னால் சின்ன சின்ன எண்ணமெல்லாம் அரங்கேறுமே
பொண்ணே தமிழ் பெண்ணே இன்று சொல்வாய் புது ராகமே
(கண்ணே..)

நீயில்லாத நாளெல்லாம் ஆ
நீயில்லாத நாளெல்லாம் நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நெருப்பு மூச்சு வாங்கினேன்
எத்தனை காலம் பாவம் இந்த தொல்லையோ ஓஹோ
என்னிடம் கூற தோழி யாவும் இல்லையோ ஓஹோ
என்றென்றும் என்னை நீங்கிடாமல் வாழ்திடு ஓஹோ
கற்பக சோலை காய்ந்திடாமல் நீர் விடு ஓஹோ
வந்தேன் என்னை தந்தேன் உன்னை கொண்டேன் இது போதுமா
தொட்டால் விரல் பட்டால் நெஞ்சின் முன்னே அலை மோதுமா...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:12:35 PM
படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ



துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
(துள்ளி...)

அன்னை மடி தனில் சில நாள்
அதை வி..
அன்னை மடி தனில் சில நாள்
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
காணல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே
(துள்ளி..)

துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்
உன்னை நினைத்து இங்கு சிரித்தேன்
உணமை கதையினை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம்
நீர்குமிழ் போன்றது பூங்கொடியே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:13:18 PM
படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி



நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
(நிலவு..)
என்னை இழந்தேன் செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்
(நிலவு..)

நீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால் வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு அன்பே அன்பே
கீதங்களை சொல்ல சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்
(நிலவு..)

பூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்
இன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்கிறேன்
அறுசுவையோடு புது விருந்தாக சுக பறிமாறும் தேவியே
தலை முதல் பாதல் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும் ஆவியே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:14:13 PM
பாடியவர்கள் : சித்ரா , மனோ
இசை: இளையராஜா
திரைப்படம் : கவிதை பாடும் அலைகள்



உன்னைக்காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது (உன்னைக்)

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீதான் (உன்னைக்)

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக்கரையெல்லாம்
காலடி
கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்
வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்
ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டுகாலம்
இனி எந்நாளும்
பிரிவேது
அன்பே
(உன்னைக்காணாமல்)

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்
பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது
காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்
காலங்கள் போனபோதும்
வானத்தைப்போல வாழும்
இது மாறாது
மறையாது
அன்பே...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:15:04 PM
படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி



தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:15:32 PM
படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்



கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
(கல்யாணமாலை)


வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
(கல்யாணமாலை)


கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!..
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:16:02 PM
திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி
இசை: இளையராஜா




கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
இந்த நேரம்
பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ

இந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ

தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன

கன்னி மலர்களை நான் பறிக்க
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது

ஆயிரம் காலமே

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே

இந்த பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஒ ஒ...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:16:41 PM
பாடியவர் : ஜென்சி
இசை: இளையராஜா
பாடல்வரிகள் : கண்ணதாசன்
திரைப்படம் : நிறம் மாறாத பூக்கள்


லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
லலலாலா லாலா லலல்லலா
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்

(இரு பறவைகள்)

சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
மானோடு
கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே

(இரு பறவைகள்)

பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே
எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன்
அங்கங்கே எனை போல அவர் காண்கிறார்
நீயென்றும்
இனி நானென்றும்
அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா

இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லலலாலா லாலா லலல்லலா...
Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:17:43 PM
படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்



உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை

(உன்னைக் காணும் நேரம்)

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்ஹ்ட்தும்
(உன்னைக் காணும் நெஞ்சம்)

Title: Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
Post by: Global Angel on November 08, 2012, 07:18:36 PM
பாடல்: ரெட்டைக்கிளிகள்
திரைப்படம்: ஒரே ஒரு கிராமத்திலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா


ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்

ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ
நான் எடுத்தேன்...நான் எடுத்தேன்
ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர
நான் படித்தேன்...நான் படித்தேன்
இதயத்தை திறந்தாய் நீ இடையினில் விழுந்தேன் நான்
எனக்கென பிறந்தாய் நீ இருப்பதை கொடுத்தேன் நான்
நெஞ்சை தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி
கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ண குருவி
சங்கீதம்தான்...சந்தோஷம்தான்
நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்

நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட
நான் விழித்தேன்...நான் விழித்தேன்
காதல் நாயகன் உன் கனவினில் வந்து
நான் கலந்தேன்...நான் கலந்தேன்
இருட்டினில் வரலாமா இருபுறம் தொடலாமா
இலக்கியம் இதுதானே இலக்கணம் கெடலாமா
விட்டுக்கொடுத்தால் கண்ணா உன் வேகம் கட்டுப்படுமா
தொட்டுப்பிடித்தால் கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா
அம்மாடி நான் பெண் பாவைதான்
உன் விரல்களும் தொட தலைமுதல் அடிவரை சுட

ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத்திசைகள்
தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ
லல்ல லல்லலா லல்லாலா லாலா லல்ல லல்லலா...