Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 312  (Read 1760 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 312

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 823
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


தேவகியின் மைந்தனே
எங்கள் கோபியரின் ரமணனே..
கீதை தந்த கிருஷ்ணனே எங்கள் கார்மேக வண்ணனே...
அர்ஜுனனின் சாரதியே எங்கள் பார்த்தசாரதியே
கருமை நிற கண்ணனே  என் மனம் கவர்ந்த மன்னனே....

உன்னுடன் இருக்கையில்
இந்த உலகயே நான் மறந்தேன்
எந்தன் உலகமாய் நீ இருப்பதால்...
உன் தோள் சாயும் நொடியாவும்
என்னையே நான் மறந்தேன்
என்னில் யாவுமாய் நீ இருப்பதால்...

என் கருத்தாய் நீ என் கனவாய் நீ
என் நிஜமாய் நீ என் நிழலாய் நீ
என் உடலாய் நீ என் உயிராகவும் நீ

கண் மூடி கருத்தில்
என் கண்ணனையே நிறைத்தேன்
கண்ணாளன் அவன் ஸ்பரிசத்தில்
மெய் சிலிர்த்து மயங்கி நின்றேன்

உன்னை நினைத்து
என்தன் உள்ளம் மகிழ்ந்தேன்
உன் இசை கேட்டு
எந்தன் திசை மறந்தேன்..

கான குயிலின் இசையும்
வண்டுகளின் ரீங்காரமும்
கானகம் அதில் நிறைய
கனவு தெளிந்து கண் திறந்தேன்

ஆனந்த ராகத்தில் என்னை ஆட்கொண்ட நீ
தன்னிலை மறந்து நான் மயங்கிய வேலையில்
மலர் மாலை சூடாமல்
மாயமாய் மறைந்தாயே மாயவா..

நீ இல்லா இக்கானகத்தில்
என் துணையாய் நிற்பது உன் குழலே.. புல்லாங்குழலே...
உன் ராதையாக நானும்
என் கண்ணனாக உன் குழலும்.. புல்லாங்குழலும்.....

இந்த ராதையின் கிருஷ்ணனாய்
என்றென்றும் நீ வேண்டும்
ஏழேழு ஜென்மம் மட்டுமல்ல
எத்துனை ஜென்மம் இருப்பினும்......

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

« Last Edit: June 21, 2023, 01:59:33 AM by VenMaThI »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 378
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அனைவருக்கும் வணக்கம்(Rj &Dj)
வனத்தின் வண்ண மலராக நீ! வாரணம் ஆயிரத்தில் ஒருத்தியே! வசந்த காலத்தில் குயிலோசையின் குரலில் தவழ்ந்த குமரியே!

தனிமையில் இருக்கும் தங்க தாரகையே!!
என்ன மாயமோ நான் அறியவில்லை

உனது வளையல் ஓசையும் வளைந்து கொடுக்கும்.!! உனது உடல் பாணியையும்  பார்த்த நான் இந்த கானகத்தின் கள்வன் ஆனேன்!!!!!

உனது மிருதுவான இதழால் புல்லாங்குழலை தொடும் தருணம்!! புதுமையான உணர்வால் உறைந்து போக!! மூச்சுக்காற்றால் இசைக்கும் போது!!!

பறவைகளும் விலங்குகளும் அல்ல அடர்ந்த காடுகளும் ஆனந்தம் அடையும்!! உனது ஆள்மனதின் ராகத்தை இசைக்க.
மெய் மறந்து அதை நான் இரசிக்க இந்த தருணத்தை  கண்டு
சிவந்த வானம் கூட வெட்கப்படும்!!!!!

தாவணி பெண்களின் தாரணியே!!!
தங்க கரம் கொண்ட காவியமே!!!!
உனது நாணத்தை பார்த்த நானும் காணல் நீராய் கரைந்தேன்!!!!

அந்த கிருஷ்ணனும் தேடி வருவான் ராதையே!! 
உனது அழகை கண்டு இன்னொரு கீதாசாரம்
படைக்க!!!!

அன்புடன்
மண்ட கசாயம் ....



« Last Edit: June 20, 2023, 05:54:35 PM by mandakasayam »

Offline ShaLu

கடவுளின் படைப்பில் அழகானது பெண்
அவள் முகம் பார்த்தால்
நிலவும் வெட்கி தலை குனியும்
குழல் இனிது யாழ் இனிது என்பர்
அதை விட இனிது கொஞ்சி பேசும்
அவளின் அமுத மொழி

அன்னமும் மயிலும் நடந்தால்
அழகு என்றனர் அக்கால கவிகள்
அவள் நடை அதை விட அழகு
என்பதை அறியும் முன்
கயல் விழியாள் காந்த கண்ணொளியாள்
காண்பவர் மனதை ஈர்க்கும் கார் குழலாள்
தேவதையைக் கண்டிரார் இம்மனுலகில் எவரும்
அவளையே தேவதையாய் காண்பர்
அவள் அழகைப் பார்த்த பின்

மங்கை அவள் விழியை
கயல் விழி என்றனர்
மான் விழி என்றனர்
அவர்கள் அறியவில்லை
அவ்வுவமை எல்லாம்
அவள் விழி அழகின் முன்
 வீணே என்று

பெண்ணழகை வர்ணிக்க நினைப்பின்
வார்த்தைகள்  போதவில்லை
வாக்கியமும்  போதவில்லை
பாலின் சுவையை வர்ணிக்க முடின்
வர்ணிக்கலாம் அவள் அழகை
விளக்கின் தீப ஒளியை வர்ணிக்க முடின்
வர்ணிக்கலாம் அவள் அழகை
நெருப்பின் வெப்பத்தை,
பனியின் குளிரை,
கடவுளின் அருளை,
இவை யாவயும் வர்ணிக்க முடின்
வர்ணிக்கலாம் அவள் அழகை

அவள் அழகு -
சூரியனின் முதல் கதிர் போன்றது
மழையின் முதல் துளி போன்றது
மழலையின் புன் சிரிப்பு போன்றது
இரவில் மெலிதாய் மேனி வருடும்
மெல்லிய தென்றல் போன்றது
முடிவில்லா அழகிய கடல் போன்றது

அவ்வழகிய மலர் போன்ற பெண்களை
அன்புடனும் நட்புடனும்
அக்கறையுடனும் போற்றிப்
பாதுகாப்போம்..!!!

« Last Edit: June 20, 2023, 08:40:26 PM by ShaLu »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 653
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


குழலும்.. நாதமும்...
======================

பெண்ணே! உன் செவ்விதழ் தீண்டலிலும்...
உன் பன்னீர் விரல் என்னை தொடுகையிலும்...
நான் என்னை மறந்து.. ரீங்கரிக்க விழைகிறேன்..

பெண்ணே! உன் மூச்சி காற்று என் மீதுபட..
அந்த ஸ்பரிச உரசலில், உருவெடுக்குமே..   
என் மனதை கிறங்கடிக்கும்..  சுந்தர ரிதம்...

பெண்ணே! உன்னோட நான் இருக்கும்..
ஒவ்வொரு அற்ப நொடி பொழுதுகளுமே ...
என் ஆயுளின்., பொற்காலமாக ஜொலிக்கிறதே....

கற்பனையில் கப்பலோட்டி களித்து மிதந்த,,
உடலில் 7 துளை கொண்ட.. மூங்கிலை.
எக்காளமாக கொக்கரித்து அழைத்தது ஒரு குரல்..

ஹே புல்லாங்குழலே! ஒருகணம் கேளாயோ!!
நான் மொழியும் சில துளி வார்த்தைகளை...
உன் மடல் திறந்து கேட்டுணர்த்து கொள் ...

நீயோ அவளின் தீண்டலில் மயங்குகிறாய்...
அதோ பார் பூங்குழலே.. அபூம்பாவையோ   
என் நாதத்தில்.. தன்னிலை மறந்து.. உருகுகிறாள்.. 

புல்லாங்குழலோ! இசையின் திமிரான..
மென்குரலால்.. தன்னிலை உணர்ந்து..
அவளின் பூமுகம் பார்த்து வியந்தது...

பாவையின் கை பிடியில் சிக்கி
மயங்கிய நம் மனமோ...நங்கையின்
நளின வதனம்..  காண மறந்தோமே.

என்னே ஓர் அழகு.. என்னே ஓர் அழகு..
கண்திறக்கா .. ரவிவர்மாவின் ஓவியமா? இல்லை..
விஸ்வகரம்வின் கற்பனையா?.. என் கண்முன்னே..

குழலும் நாதமும், நீ நான் என..  சண்டையிட..
அவளோ.. தன்  மனம் விரும்பும் ஏதோ ஒன்றை..
ஆழ்ந்து  சிந்தித்தவாறே.. குழல் இசைத்து உருகி நின்றாள்...
 
 
« Last Edit: June 20, 2023, 06:54:48 PM by TiNu »

Offline Minaaz

  • Newbie
  • *
  • Posts: 40
  • Total likes: 247
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
எனது  முதல்  கவிதை

கதிரவன் அடிவானிடம் சரணடையும் பொழுது அது..

அடர் நிறைந்து ஒய்யாரமாய் நிமிர்ந்து நிற்கும் விருட்சங்கள் பரந்த வனம்..

அதில்..,

கதிரவனின் மங்கிய ஒளியில் தன் இருப்பிடத்தை நெருங்கும் பட்ஷிகளின் சப்தம் அங்கே..,

தன் நிழலும் தன்னை அச்சமூட்டி வேடிக்கை பார்க்கும் நிகழ்வும் அரங்கேறும் சந்தர்ப்பம் அங்கே..,

இத்துனை சிறப்புக்கள் பொதிந்த இவ் வனத்தின் அழகை மேலும் மெருகூட்ட தவமிருக்கும் மாது அவள்,


மரணப்படுக்கையிலும் மாதுவின் வாசனையைக் கூட முகர்ந்திடக் கூடாதென வீராப்பாய் நின்ற எண்ணங்களை ஒரு நொடிப் பொழுதில் நொருக்கிவிட்டது உன் கயல் விழி...

கயல் விழிப் பார்வையால் பாலாய்ப்போன பலரது வரலாறுகளை இலக்கியங்களில் பாடி முடித்தனர் பல புலவர்கள் அந்த வரிசையில் நானும் நிற்கிறேன் என எண்ணுகையில் நாணம் எட்டிப் பார்க்குதடி..

மலர் சூடிய உன் குழலழகில் குதித்து நிற்குதடி என் இளமையும்..

நிலாவினது வெள்ளொளியாய் உருவெடுத்து நிற்கும் மாதுவைக் கண்ட விழிகள்,

காதோரம் தவளும் கம்மலாய் மாறிட ஏக்கம் வசைபாடுதடி..

மயில் தோகையாய் விரிந்தாடும் உன் விரல் இடுக்கில் ஓய்வெடுக்கும் புல்லாங்குழலாய் உன் கைகளில் தவழ்ந்தாட உள்ளம் சீண்டுதடி..

உன் அழகில் மயக்கிய மாயவளே, என்னை மட்டுமல்ல உன் மூச்சுக்காற்றினால் உயிர்நின்ற புல்லாங்குழலையும் உயிர்ப்பித்து இவ் வனத்தையும் உன் வசமாக்கியதேனோ...♥️💜
« Last Edit: June 21, 2023, 02:10:30 AM by Minaaz »

Offline தமிழினி

                                 கள்வனின் (கண்ணனின்) காதலி...

இமை மூடி யோசித்தாலும் ...
கண்கள் தேடுவது என்னவோ..
உன்னைதானடா கண்ணாளா...

காத்திருப்பது கூட சுகம் தான் உன் நினைவுகளால் என்னை வருடிசெல்லயில்...

எத்தனை மங்கையர் உன்னை சூழ்ந்த போதும்..
கோபியர் கொஞ்சும் ரமணாவாக நீ இருந்த போதும்...

எங்கோ ஓர் தூரம் உன்னை எண்ணி காத்து கிடக்கும் ராதையாக ..

என்னை நினைவில் கொண்டு..
உன் வழிப்பயணங்கள் நகற்கிறது என்று எண்ணுகையில்..
என் நெஞ்சமெல்லாம் பஞ்ஜாய் பறக்கிறது...

நீ சுவாசித்த காற்று என்னை தழுவி சொல்லுகிறது..
அது சொல்லிச் செல்லுகிறது...
உன்னவன் உனக்காக வருவான் என்று...

யாரும் நுழைந்திட முடியா இடத்தில் கூட காற்று புகுந்து செல்வதை போல் ..
என் கர்வம் கொண்ட மனதை உன் காதலால் கரைத்திட்ட கயவனே...

காத்திருக்கிறேன் கண்ணாளனனே...
காலம் தோறும் உன் அன்பு கரம் சேர ...

என்றும் உன்னவளாக....
« Last Edit: June 21, 2023, 05:41:27 PM by தமிழினி »
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤

Offline gab

கூடடைந்த பறவைகளின் கீச்சொலிகள்,
சருகுகளின் தீண்டல்கள்,
சுழித்தோடும் நதியின் ரீங்காரம்,
தென்றல் தீண்டும் கவின் பொழுதின்
இலைகள் உரசும் ஒலி,
இசையற்றவெளிகளை நிறைக்கும்
 இசைகளுக்கு நடுவே
அந்தியின் தீண்டலில் எங்கிருந்தோ
 நடனமாடி வருகிறது ஒர் குழல்மொழி

நீர் நனைத்த பாதங்கள், நிலம் நோக்கி நகர்ந்தது.
அங்கே,
மஞ்சணத்தி பூக்கள் உதிர்ந்து கிடந்த
 மகரந்த காட்டில் ஒளி பொருத்தி நிற்கிறாள் பெண்ணொருத்தி
அவள் யவ்வன ஒளிக்கீற்றில் ஒதுங்கி நிற்கின்றன
பசும் பூங்கொடிகள்.
அலைப்பெருக்கான நதி போல் தத்தளிக்கிறது என் மனம்
அவளின் பூரண சந்திர முகம் கண்டு.
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடாதே
கொழுக்கொம்புகள் அற்ற காட்டாற்றின் வெள்ளத்தில்
சிக்கிக் கொண்டவன் போலாவேன் உன் நேத்திர பார்வையில்

இது என்ன விளையாட்டு? ஆதவனுக்கும் சந்திரனுக்கும்
இரு ஒளியும் பூரித்து நிறைக்கின்றன இவ்வனத்தை.
ஏன் இந்த மகரந்த காடு மஞ்சளொலியில் மிதக்கிறது,
 எப்படியும் தோற்றுக்கொண்டே தான் இருக்கிறது உன் மஞ்சள் மேனி முன்.
ஏன் இந்த நதியலைகள் இப்படி கொந்தளிக்கின்றன
உன் முடிக்கற்றைகளின் அலையசைவுகளின் நடனம்
இன்னமும் பிடிப்படவில்லையோ.
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடாதே
வேள் விழியாள் பார்வையில் மோட்சம் அடைந்த
பாக்கியம் கிட்டி விட போகிறது எனக்கும்

பனிப்பட்ட பூக்கள் ஏன் இன்று வனப்போடு இருக்கின்றன
செழுத்திருந்த உன் கன்னங்களின் சிவப்பை விஞ்சிவிடவா?
மென்சிரிப்பை அடைக்கியிருக்கும் அந்த கன்னங்களின் வனப்பை
 கைகளில் ஏந்திவிட தான் மனமும் துடிக்கிறது,
ஆனால் பட்டாம்பூச்சிகளை பிடிக்கும்பொழுது
 கைகளில் சாயம் ஒட்டிவிடுவது இயல்புதானல்லவா?
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடாதே!
படபடக்கும் உன் இமை இறகுகள்
பட்டாம்பூச்சிகளை வண்ணங்களை ஏந்திக்கொண்டவன் நானாகிவிடுவேன்.

நெளிந்து வளைந்து விரிந்திருப்பது இந்த காடு மட்டுமா
அல்லது உன் மோன புன்னகையுமா?

செவிகளை நிறைக்கும் உன் குழலோசையில்
தேனீக்களும், பறவைகளும் கூடடையாமல்
காற்றில் ரீங்காரமிட்டு நடனமாடுகின்றன.
நர்த்தனமாடும் என் மனமும் கூடடைய வேண்டாமா பேரழகே?
கண் மூடி குழலிசைக்கும் சித்திரம் நீ கண் திறந்திடக் கூடாதா?

ஒரே ஒரு முறை அந்த கரைகளில் என் பாதம் நனைத்துக் கொள்வேன்
ஒரே ஒரு முறை அந்த அம்புகள் தைத்த பாக்கியம் பெறுவேன்
ஒரே ஒரு முறை நானும் பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் தரித்தவனாவேன்!


சித்திரமே நீ கண் திறந்திடு!