எது விரும்பத்தகாத பொதுத்தொல்லை..?! மிக அழகான விவாத கருப்பொருள்....
தனிமனித தவறுகளை தனிமனித சுதந்திரமென கடந்துவிடவும் ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டோம். மனசாட்சியை புறக்கணிக்க பழகிவிட்டபின் இனி எதுவுமே தவறாக தோன்றப்போவதில்லை.
மற்றவர்களை குற்றம் சாட்டுவதின் மூலம், நடந்த தவறுக்கு நாமும் காரணம் என்பதை உணராமலேயே கடந்துவிடுகிறோம்.
பில்லை கிழித்து எறிபவர்களிடம் பைசா பாக்கியின்றி செலுத்துகிறார்கள்...
"பாத்து போட்டுக்குடு சார்" என்பவர்களிடம்தான் பேரம் பேசுகிறார்கள்!
என் மன நிலையைப்பொருத்தவரை இதுவும் ஒரு வகையில் பொதுத்தொல்லைதான்.
இயற்கை மிகவும் பொல்லாதது...
தொல்லைகள் எல்லைகளை மீறும் பொழுது, அவ்வப்போது மாற்றி வைத்து விடுகிறது..
கிடைக்கும் டைனோசர் எலும்புகளே இதற்கு சாட்சி.