ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 151
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/151.png)
துணைவி கருத்தரித்த நாளிலிருந்து
வருங்கால தாய்க்கே தாயாகியவரே ..
அவள் என்னை கருவில் சுமக்கையில்
எங்கள் இருவரையும் மனதில் சுமந்தவரே..
இரவு பகல் என தூக்கம் பாராது என் வரவுக்காக
வழி மேல் விழி வைத்து காத்திருந்தவரே ..
கருவிலே நான் முதலில் உதைத்த தருணத்தில்
உலகையே மறந்து ரசித்து மகிழ்ந்தவரே..
தாயின் கருவறை விட்டு வெளியுலகை காண
பயந்து நடுங்கிய என்னை கையில் ஏந்தியவரே..
அன்று விரல் பிடித்து நடை பழகி கொடுத்து
இன்றும் கரம் பிடித்து உடன் நடப்பவரே..
நான் சொல்லும் முன்னே என் குறை அறிந்து
நான் கேட்கும் முன்னே என் மனம் அறிந்தவரே ..
சிறு காயமது எனக்கு பட்டாலுமே அதை
தாங்கிட இயலாமல் கலங்குபவரே ..
ஆண் வாரிசை மட்டும் எதிர்பாக்கும் தம்பதிகளின் மத்தியில்
அனைத்தும் பெண்ணாய் பிறக்கையிலும் கூட
என் மகள் என மார்தட்டி பெருமை கொள்பவரே..
கொஞ்சிடும் குழந்தையாய் ..
அரவணைக்கும் சகோதரனாய் ..
தோள் கொடுக்கும் தோழனாய் ..
கற்பிக்கும் நல்லதோர் ஆசானாய் ..
எனக்கு எல்லாமுமாய் கிடைத்த
தந்தை எனும் வரம் நீர் ..
இந்த தந்தை என்னை வேறொருவரின் கரம் சேர்க்கையில்
அங்கு என்னை இனி வரும் காலங்களில்
இன்னொரு தந்தையாய் தாங்கிடும்
என் வருங்கால குழந்தையின் தந்தை
நான் கேட்காமலே எனக்கு கிடைத்த இன்னொரு வரம் ..
மறுபிறவி ஒன்று உண்டெனில்
நான் மீண்டும் உமக்கே மகளாகவும்
என் குழந்தைகளை உம்மை போல் தாங்கிடும்
தந்தையாய் என்னவனும் கிடைக்கும்
வரம் பெற வேண்டும் தந்தையே ..
அனைத்து தந்தையர்களுக்கும்
தந்தையர் இல்லா குழந்தைகளின்
தந்தையாய் வாழும் தாயார்களுக்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...
~ தமிழ் பிரியை மைனா ~