FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on January 06, 2024, 09:01:20 AM

Title: எப்படி இருந்த நான்
Post by: Mr.BeaN on January 06, 2024, 09:01:20 AM
காதலெனும் சொல்லை கொண்டு வந்து
உன் காலடி சேர்த்தவன் நான்தானே

கல்லென நெஞ்சமும் உள்ளது போல்
அதை கண்டு கொள்ளாமலே நீ இருந்தாய்

எப்படி உன்னை ஈர்ப்பதென்று யோசித்து பார்த்தே ஒன்றுணர்ந்தேன்

உன்னை ஈர்த்திட யோசித்ததை நான்
வேறு துறைகளில் செய்திருந்தால்

நற்பெயர் பல பெற்றுவிட்டு இங்கு
நலமுடன் நானே வாழ்ந்திருப்பேன்

விஞ்ஞானி மெய்ஞ்ஞானி என்று பல
பட்டமும் என்னுடன் சேர்ந்திருக்கும்

எப்படி ஆக வேண்டிய நான்
இப்படி ஆகி போனேனே..
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Vethanisha on January 08, 2024, 03:47:47 PM
Nanbaa oru request..

Konjam kathaliyai potri oru kavithai podalaame...
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Mr.BeaN on January 09, 2024, 09:51:55 AM
Nanbaa oru request..

Konjam kathaliyai potri oru kavithai podalaame...


Kandippa panalame
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Mr.BeaN on January 09, 2024, 05:00:03 PM
இரு விழி தன்னில் நிறைந்தவளே
இதயக்கதவை திறந்தவளே
மனமது உன்னை கண்டபின்னே
நறுமணம் தனை இங்கே வீசுதடி
கண்கள் கண்ட உன் அழகை
கவியாய் பாடி காற்றினிலே
வீசிட நானும் எத்தனித்தேன்
வார்த்தை ஏனோ கிடைக்கவில்லை
உச்சந்தலையில் ஆரம்பித்து
உள்ளங்கால் வரை சொல்லிடவே
சொல்லி முடிக்க முடியாமல்
மிச்சம் எதுவும் தான் இருக்கும்
அப்படிப்பட்ட அழகுடைய
அணங்கிவள் என்றே மனமுறைக்க
இப்படி ஒரு கவி இயற்றுகிறேன்
இதுவும் உனக்கிங்கு இணையில்லயே..
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Vethanisha on January 09, 2024, 06:01:19 PM
Ahaaaaa... Arumai arumai 🌹
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Mr.BeaN on January 09, 2024, 06:50:20 PM
Nandri
Neengal ethir parthathy Pola irukathunu theriyum
Aana ipothaiku ennala elutha mudiyala 🤕
Mannikavum
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Vethanisha on January 10, 2024, 08:55:35 AM
Ayo mannippu etharkku

எதிர்பார்ப்பதை போல் எழுத
அவள் என்ன
இலக்கண கவிதையா
எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட
மரபு கவிதை அல்லவா


🤗
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Mr.BeaN on January 10, 2024, 09:02:35 AM
Adada Kavitha Kavitha !!
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Mr.BeaN on January 10, 2024, 02:31:40 PM
Aana neenga ketathukkaga enoda manaiviyai varnichu oru kavithai eluthuren

கத்தரி பூ நிறத்தினிலே
பட்டு நூல தான் எடுத்து
கைத்தரியில் நெஞ்செடுத்த
சேலை ஒன்னு கட்டிக்கிட்டு
கல்யாண மண்டபத்தில்
நீ வந்த அந்த நொடி
காலம் பூராவும்
என் நெஞ்சில் உள்ளதடி

முதல் முறை உன்ன நான்
பாத்த அந்த வேளையிலே
நுழைந்தது போல் நானுனர்ந்தேன்
மலர் பூத்த சோலையிலே

புல்லரிச்சு நான் பாத்த
உன்னோட பூஞ்சிருப்பு
தெத்து பல்லு தெரியும்
உன் சிரிப்போ உபசரிப்பு

உன் கண்ணை கண்டதுமே
நெஞ்சுக்குள்ள மின்னல் ஒன்னு
தாக்குணத நான் பாத்தேன்
தங்கமே உன்னாலே

தலை குனிந்து தரை பார்த்து
நீயும் தான் நடக்குரப்போ
மருதாணி வைக்காம
சிவக்குதடி உன் முகமும்

இலவம் பஞ்சு எடுத்து
செஞ்சு வச்ச பொம்மை போல
இதமான மென்மையாத்தான்
இருக்குதடி உன் தேகம்..

அழகெல்லாம் ஒரு சேர
அமைஞ்ச பொண்ணா நீ இருக்க
அடியே உன் மேலே
நான் கொண்டேன் ஒரு மோகம்..
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Vethanisha on January 16, 2024, 11:27:37 PM
Kanmunne avungge uruvam vanthu poguthu nanba... Arumaya irukku varnanai Kavitha 🤗
Title: Re: எப்படி இருந்த நான்
Post by: Mr.BeaN on January 18, 2024, 03:11:11 PM
நன்றி