ஐம்பூதங்கள்..!
நிலமகளின்
நித்திய வேலி
நீர்.!
நீங்கிடும் உயிர்களை
தாங்கிடும் தாயன்பு
நிலம்.!
சுகங்களும் உன்னில்
சுடுதலும் உன்னில்
நெருப்பு.!
ஆகாயம் வியாபித்து
பெருங்காயம் உயிர்பிக்கும்
காற்று.!
அண்ணாந்து பார்க்க அதிசயம்
ஆராய்ந்து பார்க்க அறிவியல்
ஆகாயம்.!