சடுதியில் நிகழ்ந்திட்ட
சாலை விபத்து...
சல்லி சல்லியான
வாகனங்களும் அதன் பாகங்களும்...
கூழாகிப் போன மனித உடல்களும் அதன் அங்கங்களும்..
யார் மீது குற்றமென
ஆராய்ச்சியும்,
எவர் மீது தவறென்ற விசாரணையும் இங்கே பொருளற்றவை...
ஏனெனில் அக்கறையற்ற அரசாங்கத்தின் பொறுப்பற்ற
அதிகாரிகள் அமைத்த சாலைகள் தான் என்ன செய்யும்?
அத்துமீறுவதையே கொள்கையாய் கொண்ட மானிடனின் முன்பு சாலை விதிகள் தான் என்ன செய்யும்?
போலீசுகளின் கைவசம்
ஒப்படைப்பு செய்திட்டாலும்
இந்த சாலைகள் யாவும்
குற்றவாளிகள் அல்ல..
காவலர்கள் பிடியில் இருந்தாலும் இந்த சாலைகள் யாவும் ஆயுள்கைதிகளும் அல்ல..
கட்டுக்குள் வைத்திருக்கும் காவல்துறையைத் தாண்டிச் செல்ல இங்கு அனுமதி இல்லை..
இந்த நிலை அப்படியே நீடிக்க போவதுமில்லை..
காவல்துறையின் தடை செய்யப்பட்ட பகுதியாக,
அந்நியர்கள் நுழைய முடியாத இடமாக இன்று இருக்கும் சாலைகள் மீண்டும் புத்துணர்வாகி சுதந்திரம் பெற்று மீண்டும் காவு வாங்கத் தயராகிவிடும்..
மீண்டும் தடைசெய்யப்பட்ட பகுதிகள் உருவாக்கப்படும் ...
மீண்டும் சுதந்திர கைதிகள் உருவாக்கப்படுவர்...
மீண்டும்..