Author Topic: காறித்துப்புங்கள் காம(ம்)ன் வெல்த் கேமை!  (Read 1250 times)

Offline Yousuf

காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்ததில் இருந்தே பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானதை நாம் நன்கு அறிவோம். இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றது என்றதும் ஆகா நம் நாட்டிற்கும் இதை நடத்தும் தகுதி வந்துவிட்டது என நாம் எல்லாம் பெருமைபட்டோம். இதற்காக 72 ஆயிரம் கோடிகளை கொட்டி இறைத்து வழக்கம் போல் இதில் 80 ஆயிரம் கோடிகள் ஊழலும் செய்து (72 ஆயிரம்கோடியில் 80 ஆயிரம் கோடிகள் ஊழல் செய்யும் திறமை நம் அரசியல்வாதிகளுக்கு இருப்பதால் என்னிடம் விவரம் எல்லாம் கேட்டு ஈ மெயில் அனுப்பகூடாதாக்கும்!) நாறிப்போனதை நாம் எல்லாம் அறிவோம். அதைப்பற்றி தங்களுக்கு விரிவாக தெரியும் என்பதால் தற்போது முக்கியமான விசயத்தை தோலுரிப்போம்.



உள்நாடு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த அணிகள், அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜில் தங்கியுள்ளனர். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் தொழில் நுட்பக்குழுவினர் பயன்படுத்த, இவர்களின் தேவையைக் கணக்கிட்டு விமானநிலையம், ரயில்நிலையம், போட்டி நடைபெறும் இடங்களில் தானியங்கி ஆணுறை இயந்திரங்கள் வைத்துள்ளனர். ஒவ்வொரு மெஷினும் 3000 ஆணுறைகளை சப்ளை செய்யக் கூடியதாம். இதற்காக 200 எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. கேம்ஸ் வில்லேஜில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் வில்லேஜ் அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலமாக சாக்கடைகளில் வந்து சேர ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில், காமம் வெல்த் அமைப்பின் மாமா மைக்கேல் பென்னலிடம் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்த அவன் நல்ல செய்திதான் என்று கூறியுள்ளான். இவனுக்கு என்ன திமிர் இருக்கவேண்டும்?.

கு (னி) விந்த அழகிகள்!



பல நாடுகளிலிருந்தும் பாலியல் தொழிலாளர்களை இறக்குமதி செய்திருக்கிறார்கள் புரோக்கர்கள். ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்காட்லாந்து, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்தப் பெண்களுக்கு விசா வழங்க மறுத்தபோது, புரோக்கர்கள் தரப்பிலிருந்து மத்திய அரசைத் தொடர்பு கொண்டுள்ளனர். விசா வழங்குவதில் கால தாமதம் செய்யவேண்டாம் (?)  என மத்திய அரசின் உத்தரவையேற்று (மும்பையில் தாக்குதல் நடந்தால் படைவீரர்கள் வந்துசேர மூன்று நாட்களாகும் என்பது வேறு விசயம்) தூதரகங்கள் செயல்பட்டுள்ளன. 12 நாட்களுக்கு 6 லட்சம் கூலி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாலியல் தொழிலாளியும் டெல்லி ஓட்டல்களில் தங்கியுள்ளனர். அதிகபட்சம் 2 பார்ட்னர், வீடியோ எடுக்கக் கூடாது, டிப்ஸ்களை தட்டிப்பறிக்கக்கூடாது (பரவாயில்லையே நம்ம நாட்டினரைப் பற்றி நல்லாவே டீடெயில் தெரிந்து வைத்திருகின்றாளே!) என்ற கண்டிஷன்களைப் போட்டுத்தான் இங்கே வந்திருக்கிறார்களாம் இந்த வெளிநாட்டுப் பெண்கள் வீடியோ எடுக்கவேண்டுமென்றால் தனி ரேட் என்ற ஒப்பந்தம் போட்டிருக்கும் பெண்களும் உண்டாம்.

நாடுகளிடையேயான விளையாட்டுப்போட்டி என்பது கலை, பண்பாட்டினை, உறவை மேம்படச்செய்வதற்கே அன்றி உடலுறவை மேம்படுத்தி எய்ட்ஸை வளர்பதற்கு அல்ல! போட்டி நடப்பது உடல் விளையாட்டிற்கா? அல்லது உடலுறவு விளையாட்டிற்கா? இதே விளையாட்டைத்தானே நீச்சல் வீரர்(?) நித்தியானாந்தாவும் மல்யுத்த வீராங்கனை(?) ரஞ்சிதாவும் விளையாடியதுக்கு கிழி கிழி என கிழித்த பத்திரிக்கைதுறைகள், ஏதாவது ஒன்று இதைப்பற்றி தட்டி கேட்டதா?. மேலும் விளையாட்டைக் கான கூட்டம் அரங்கிற்கு வரவில்லையாம்!. இருக்கைகள் காலியாகயுள்ளதாம்? அட அறிவுகெட்ட முண்டங்களா! இதைவிட பெரியவிளையாட்டிற்கு மாமாவேலை பார்த்துவிட்டு கூட்டம் வரவில்லை என்றால், பின் விளையாட்டு அரங்கிற்கு கூட்டம் எப்படி வரும்?. போய் ஹோட்டல்களை பாருங்கள் கூட்டம் நிரம்பி வழியும்! இந்த விளையாட்டை விளையாட பன்னாட்டு பரதேசிகள் தேவை இல்லை. ஏற்கனவே மும்பையிலும், கொல்கத்தாவிலும் இதற்காவே காமன்வெல்த் வில்லேஜ் போலவே பிரத்யோகமான ரெட் லைட் வில்லேஜ்களை ஏற்படுத்தி ஜரூராக போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே எல்லா தங்கப் பதக்கங்களையும் இந்த பளுதூக்கும் வீராங்கனைகளுக்கும்(?) ஈட்டி எரியும் இழிபிறவிக்கும் கொடுத்துவிட்டு இந்த போட்டியை நிறைவு செய்யலாம்!.

இந்த இந்திய தேசத்தின் முதல் குடிமகள் பிரதீபா பாட்டீல் ஒரு பெண். இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகர் மீராகுமார் ஒரு பெண். இந்திய அரசை வழி நடத்தும் சோனியாகாந்தி ஒரு பெண். டெல்லியின் முதலமைச்சர் ஷீலாதீட்சித் ஒரு பெண். இத்தனைப் பெண்களை வலிமை மிக்க பதவிகளில் வைத்து அழகு பார்க்கும் நம் இந்தியமக்கள், இவர்கள் கூடவா விளையாட்டு என்ற பெயரில் பெண் இனத்தை இழிவுபடுத்தும் இத்தொழிலுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர் என கேட்பதில் வியப்பொன்றும் இல்லை!!!. பெண்ணுரிமைக்காக முழக்கமிடும் முண்டங்களே! மாதர்குல சங்கங்களே! உங்களின் முனகல் சத்தம்கூட டெல்லியில் கேட்கவில்லையே ஏன்?


இளைஞர் சமுதாயமே சிந்தித்து பாருங்கள் இதே நிலை நீடித்தால் என்ன விபரீதம் நடக்கும் என்று...!!!

அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் எதிராக குரல் கொடுக்க ஆயத்தமாகுங்கள் ஏன் அருமை இளைஞர் சமுதாயமே...!!!
« Last Edit: August 01, 2011, 02:08:25 PM by Yousuf »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பெண்ணுரிமைக்காக முழக்கமிடும் முண்டங்களே! மாதர்குல சங்கங்களே! உங்களின் முனகல் சத்தம்கூட டெல்லியில் கேட்கவில்லையே ஏன்?


election timela neenga itha vacha evanaavathu mic pidichu kathuvaan usefulaagumnu chumma kaththa loosa avanga... ;) ;) ;)
                    

Offline Yousuf

Athuku kooda panam vangi kondu thaan kathuvaarakal vekka kettavarkal...!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
vekkam entha kadaila kidaikum ::) ::)
                    

Offline Yousuf

Yenga veetuku pakathula oru kada iruku anga kidaikum..!!! :P :P :P :P :P