Author Topic: ஹா ஹா .. Cute & Short நகைச்சுவை துணுக்குகள்  (Read 762 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஹா ஹா .. Cute & Short நகைச்சுவை துணுக்குகள்



கணவனும் மனைவியும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்த குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.

=====================================================================

காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,
கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?

மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.
கணவன் : என்ன சொன்னே?
===================================================================
கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான் முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.

=================================================================

கணவனுக்கும் மனைவிக்குமிடையே சிறு மன வேறுபாடு. அடுத்த நாள் அதிகாலை 6 மணிக்கு ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டிருந்தது. ஆனால் முதலில் பேச விரும்பாத கணவன், காலை 5 மணிக்கு எழுப்பவும் என்று ஒரு காகிதத்தில் எழுதி மனைவி அருகில் வைத்தான். மறுநாள் 9 மணிக்கு, கணவன் மிகவும் கோபமாக எழுந்தான். அப்போது மணி 5 ஆகிவிட்டது என்று ஒரு காகிதத்தில் எழுதியிருந்தது.

====================================================================

ஃபுட் வோர்ல்டில்,
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.

==================================================================
 போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

புகார் கொடுத்தவர்: என்ன ஸார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!
====================================================================
 பையன்: பாட்டி! நா ஓட்ட பந்தயத்தில கலந்துக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!

பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!
===================================================================
ஆசிரியர்: கடல் பக்கத்தில ஏன் லைட் ஹௌஸ் கட்டறாங்க?

மாணவன்: லைட் ஹௌஸ் பக்கத்தில கடல் கட்ட முடியாது. அதனால தான் சார்!
=======================================================================
ஆசிரியர்: கோழி ஏன் முட்டை போடுது?

மாணவன்: ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது!!
====================================================================
ஆசிரியர்: இடுக்கண் வருங்கால் நகுக...

மாணவன்: நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?