சர்வாதிகார ஆட்சியாளர்களால்
மண்ணின் மீது மோகம் கொண்ட
மாங்காய் மடையர்களால்...
இன வெறி பிடித்த தலைவர்களால்
சுயநலம் கொண்ட சுயநலவாதிகளால்
எந்த பாவமும் அறியாத அப்பாவி இதயங்கள்
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும்
உலகின் ஏதாவதொரு இடத்தில்...
தங்கள் உயிர்களை பரிகொடுக்கின்றன...!!!
தமிழ் ஈழத்திலே அப்பாவி இதயங்கள்
முள்வேலி கம்பிக்குள் அடைபட்டு கிடக்கும் அவலம்...
ஈராக்கிலே மண்ணின் மைந்தர்கள்
அடிமைகளாக்கப்பட்ட அவலம்...
ஆப்கானிலே தேசத்தின் சொந்தக்காரர்கள் பயங்கரவாதிகளாகவும்
நாட்டை ஆக்கிரமித்த நாய்கள் நல்லவர்களாகவும்
சித்தரிக்கப்பட்ட அவலம்...
சோமாலியாவில் பட்டினியில் வாடும் இதயங்களை
கண்டுகொள்ள ஆள் இல்லாத அவலம்...
இதையெல்லாம் கண்டும் காணமல் இருக்கும்
ஐக்கிய நாடுகள் சபை இல்லாமல் இருப்பதே நலம்...!!!