மிக அழகான கவிதை நண்பா... அழகான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வறுமையினை விரட்ட கோடுகளே இல்லாத கோலங்களை வரைந்து தன்னம்பிக்கை கவிதை பதிந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
செழிப்பாக
இருக்கிறது
ஏழையின்
வீட்டில்
வறுமை..!
பள்ளியில் ஆசிரியர்
கற்றுத் தராத பாடம்
வீட்டில்அம்மா
கற்றுத் தராத பாடம்
தொழிலில் அப்பா
கற்றுத் தராத பாடம்
வறுமை கற்றுத்தருகிறது !…
வறுமை ஒரு நோய். நோய்க்கு மருந்தெடுத்து மாற்றுகிறோமோ அதுபோல் வறுமையையும் மாற்றலாம் வறுமையோடு வாழ்பவன் நோயோடு இறந்து விடக்கூடாது என்கிறேன். பிறரை நம்பி வாழ்பவருக்கு வறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கும்.
உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் உழைப்பைக் கண்டால் ஓடி விடும் - பாரதியார்