தோழா
குழந்தை பருவம் முதல் ஒவ்வொரு பருவத்திலும்
நம் கடின உழைப்பின் அர்த்தம் மாறுகிறது
வீட்டு பாடம் முடிப்பதில் தொடங்குகியது
பள்ளி பருவத்தின் உழைப்பு -நடுநிசியில்
தூங்காமல் அம்மா போட்டு தந்த காப்பியில்
தொடர்ந்தது என் கல்லூரி படிப்பின் உழைப்பு !
வேலைக்கான தேர்விலும் சரி
என் காதலுக்கான தேடலிலும் சரி
கரைந்தது என் வாலிபத்தின் கடின உழைப்பு !
அழகான மனைவி அன்பான பிள்ளைகள்
இவர்களுக்கானது வாழ்க்கையில் மீதியுள்ள
என் கடின உழைப்பு !
தோழா ,
வாழ்க்கை ஒரு ரோஜா செடி போல
முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும்
முள்ளை உன் கடின உழைப்பால் உடைத்தால்
நறுமணம் வீசும் மலராகும் உன் வாழ்க்கை
தோழா ,
வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.
அதற்கு அவமானம் தெரியாது,
விழுந்தவுடன் அழுது முடித்து
திரும்பவும் எழுந்து நடக்கும்..!
"உளி பட்ட கல்லில் தான்
உருவத்தை காண முடியும்
தோழா ,
கடின உழைப்பு இருந்தால் தான்
உயர்வை அடைய முடியும் !
தோழா ,
சின்னஞ்சிறிய எறும்புக்கும் உழைப்பு தேவை படும்போது
நமக்கும் தேவை தானே யோசி தோழா !
தோழா ,
கடின உழைப்பின் "பலன்" இன்று இல்லை என்று எண்ணாதே
உன்னிடம் சேர "அது" துடித்துக்கொண்டு தான் இருக்கும் ஆதலால்
உழைப்பை நிறுத்தாதே தோழா .....
வெற்றி நிச்சயம் உன்னை சேருமே தோழா !!