காதல்
நினைக்கையில் இதழோரம்
அரும்பிட்ட புன்னகை
காதலை காதலிக்க
வைத்தவனும் என்னவனே
பயணங்களில் தோள் சாய்ந்து செல்ல ,
அடவியின் அடர்ந்த மரங்களினூடே
கை கோர்த்து நடந்திட ,
அமைதி ததும்பும் இடங்கள்
அனைத்துமே நம் சொர்க்கபுரியாகிட
காணும் இடமெல்லாம்
நம்மைக் காண்கிறேன்
அழகான காதலும் இன்பமாய்
உன் அரவணைப்பில்
தொடர்ந்திட ஆசை
கரடுமுரடான வாழ்க்கைப்பாதையும்
சுலபமாய் கடந்திட
அன்புமழையில் நாம் நனைந்திட ஆசை
நம் குறைகள் நமை தாக்காமல்
நம் அன்பே
குடையாய் மாறி
காக்கட்டும் நம் காதலை <3 <3 <3