Author Topic: இந்திய காதல்  (Read 2552 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இந்திய காதல்
« on: February 26, 2012, 04:13:40 AM »
இந்திய காதல்


 
காதல் என்ற வார்த்தைக்கு என்றுமே தனி இடம் உண்டு. மனித வாழ்க்கையில் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களையும் இந்த மந்திரச்சொல் யுக யுகமாக ஆட்கொண்டிருக்கிறது, இதன் புனிதம் என்பதை மனிதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாலும் காதலுக்கென்று, அன்புக்கென்று சிறப்பான இடம் இயற்க்கை கொடுத்த வரம். காதல் என்கின்ற அன்பு எங்கே எப்போது சீர்குலைகிறதோ அங்கே வன்மம் தழைத்தோங்குகிறது. காதல் என்கின்ற அன்பு இடத்திற்கிடம் நபருக்கு நபர் உறவுக்கு உறவு வெவ்வேறு நிலைகளில் உயிரினங்களை ஆண்டுக்கொண்டிருந்தாலும், சில உறவுகளுடன் மட்டும் இதன் ஆழம் அகலம் அதிகரித்து காணப்படுவது இயற்கையின் மற்றொரு ஆச்சரியம்.

ஒரு பெண்ணை பல ஆண்கள் காதலிப்பதாக இருந்தாலும், அத்தனை ஆண்களுமே அவளை தன் உயிரினும் மேலாக அன்பு கூர்வதை அப்பெண் அறிந்திருந்தாலும் அவர்களில் யாரேனும் ஒருவரை அல்லது முற்றிலும் புதிய நபரை அப்பெண்ணின் மனம் நாடுவது இயற்கையின் மற்றொரு விந்தை. ஒரு ஆண் தான் உயிரினும் மேலாக அன்பு கூர்ந்த பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்து பார்க்ககூட இயலாது என்று கருதி இருக்கின்ற நிலையில் முற்றிலும் தனது எதிர்பார்ப்புகளுக்கு மாறான வேறு பெண்ணுடன் இணைத்துக்கொண்டு வாழ்நாளை கழிக்கின்றபோது தன்னால் எப்படி தன் விருப்பத்திற்கு எதிர்மாறான குணமும் தோற்றமும் கொண்ட பெண்ணுடன் வாழ முடிந்தது என்று தன்னைத்தானே அதிசயப்படுகின்ற விதத்தில் வாழுகின்ற இயற்கையின் விளையாட்டும் அதிசயம்தான்.

இப்படி பலவிதமான அன்பு அல்லது காதலை உள்ளடக்கிய இயற்கையின் விந்தைகளுள் மற்றுமொரு சுவாரசியமான செயல்பாடும் நாம் காண்பதுண்டு. ஒரு பெண் தான் காதலித்த அல்லது நேசித்த பலரில் ஒருவரை மட்டும் நேசித்தது உண்மையாக இருந்தபோது காலம் அவர்களை ஒன்றாக வாழவிடாமல் தவிர்த்து, பிரிந்து விட்ட காதலர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர, பல ஆண்டுகள் கடந்த பின்னர் தன் மனதில் பழைய காதலின் சுவடே காணாமல் போனதென்று நினைத்து தன்னைத்தானே அதிசயித்துக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்ப்பட்டு அவ்வாறு சந்தித்தபோது இருவரும் பேச மறந்து செயலிழந்து விடுவதும் இயற்கையே, ஏனெனில் அதுவரையில் தங்களது வாழ்நாளில் இனி ஒருமுறையேனும் இருவரும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே இல்லை என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அந்த சந்திப்பு சத்திய சோதனையாக அமைந்துவிடுவதும் உண்டு. அதுவரையில் அவ்வாறு ஒருமுறை சந்திக்க நேர்ந்தால் எவ்வாறெல்லாம் கேள்விக்கணைகளை தொடுக்க வேண்டும் என்று இருவரும் மனதில் பல ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்தார்களோ அத்தனை கேள்விகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் மாயம் இயற்கையின் மற்றொரு அதிசயம்.

"வாழ்ந்தால் உன்னுடன்தான் என்று நாம் இருந்தோமே விதி நம்மை பிரித்து விட்டது அதனால் வா நாமிருவரும் எஞ்சியுள்ள வாழ்நாளிலாவது ஒன்றாக வாழ்ந்துவிடுவோம்" என்று காதலன் தனது காதலிக்கு இறுதி வாய்ப்பை கொடுக்க முன்வரும்போது அப்பெண் அந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று ஏற்றுக்கொள்வாளா, தன்னைத்தானே பல கேள்விகளை கேட்டுக்கொள்வாள், அதுவரையில் தன்னுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தன் கணவனின் நிலையை எண்ணி பார்ப்பாள், தன் கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக தங்களுக்கு பிறந்திருக்கின்ற குழந்தைகளின் நிலையை எண்ணி பார்ப்பாள், தான் தனது பழைய காதலனை திடீரென்று சந்தித்ததுபோல தன் கணவன் அவனது காதலியை சந்தித்து இதுபோன்றதொரு விபரீத முடிவெடுத்து தன்னை குழந்தைகளுடன் விட்டுவிட்டு பிரிந்து சென்றால் தனது நிலையைப்பற்றி யோசித்து பார்ப்பாள், காதலா திருமணவாழ்க்கையா என்ற குழப்பம் ஏற்ப்படும்,

இளம் வயதில் மனதில் தோன்றிய காதலும் உறுதியுடன் இருவரும் எடுத்துக்கொண்ட முடிவுகளும் அப்போதைய சூழலுக்கு சரியானதாக தோன்றியது உண்மை, அக்காதல் திருமணத்தில் முடியாமல் மாறாத துயரை ஏற்ப்படுத்தியது என்பதற்காக காலம் கடந்த பின்னர் அக்காதலை தொடரும் வாய்ப்பு கிடைத்ததை நியாயப்படுத்த நினைப்பது சரியானதாக இருக்க முடியுமா. திருமண வாழ்க்கையில் என்னதான் குறை நிறைகள் இருந்தாலும் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தாகிவிட, தன்னை நம்பியிருக்கும் குழந்தைகள் மற்றொருபுறம். இந்நிலையில் மனதைவிட அறிவு மேலோங்கி செயல்பட்டு கேள்விக்கணைகளை அள்ளிவீசும், இங்கே காதல் தோற்றுப்போகும், உறவுகளின் மீதிருக்கும் அக்கறை மேலோங்கிவிடும், சுயநலம் காணாமல் போகும், "வாழ்ந்தால் தன் காதலனோடு வாழ்ந்துவிட வேண்டும்" என்கின்ற வீரியம் பொசுங்கிவிடும். பிடித்தோ பிடிக்காமலோ இதுவரையில் வாழ்ந்துவிட்ட வாழ்க்கை பழகிவிடும், நோக்கம் தனது காதலின் மீது இல்லாமல் தன் மூலம் இவ்வுலகிற்கு கொண்டுவரப்பட்ட உயிர்களின் நல்வாழ்க்கையின் மீது நிலைத்துவிடும் இதுவும் இயற்கையின் அதிசயம்.