என் வீட்டு பக்கத்தில் இருந்தது
மரம் இரண்டு
பேர் தெரியா மரம் ஒன்று
மாமரம் என்ற பேர் கொண்ட மற்றொன்று
யார் விதைத்த விதையில் மலர்ந்ததென்று
யாருக்கும் அறியேன்
வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்
பள்ளி சென்று திரும்புகையில் யாரையோ
தொலைத்து தேடும் குயிலின் ஓசை
எனக்கு ஒரு வரவேற்பு கவிதை
பேர் தெரியா மரத்தில் இருந்தது
என் தந்தை கட்டி தந்த ஊஞ்சல்
தோழர்களுடன் கொஞ்சி அதில் விளையாடிய
நாட்கள் இன்னும் நிற்காமல் ஆடுகிறது
என் நெஞ்சில்
அதனால் அதற்கு பெயர் வைத்தேன் ஊஞ்சல்மரம்,
இதுவும் காய் காய்க்கும், பழுக்கும் , தரையில் விழுந்து
அழுகும் தீண்டுவார் யாருமிலர்
பக்கத்தில் மாமரம் , இலை வேண்டி பலர் , காய் வேண்டி பலர்
கனி வேண்டி பலர் காத்திருக்கலாயினர்
ஓர் மாலை தொலைக்காட்சியில் எல்லை தாண்டியதாய்
சுடபட்ட மீனவர் செய்தி
ஆனால் இந்த மாமரம் தன் கிளையை பரப்பிஇருந்தது
ஊஞ்சல் மரத்தின் மேல். அதற்காய் சண்டையிட்டதாய்
நினைவில்லை
இரவில் சூறாவளி காற்று வீசியது பயந்து அம்மாவின்
அரவணைப்பில் உறங்கி காலையில் கண் விழித்து பார்க்கையில்
ஊஞ்சல் மரம் வேருடன் தரையில் இருந்தும்
அதன் கிளைகள் மாமரத்தை விழாமல் தாங்கிருந்தது ..
வெள்ளம் வந்தபோது நம்மை பேர் தெரியா
அன்பு உள்ளங்கள் காத்தது போல
மரம் இருந்த சுவடு அகற்றப்பட்டது சில நாட்களில்
அதே இடத்தில் மீண்டும் துளிர்விட்டது செடி
இயற்கை அழித்ததை இயற்கை உருவாக்குகிறது
மனிதா ,இயற்கையை அழிக்கும் நீ
அதை உருவாக்குவது எப்போது ?
****ஜோக்கர் ****